குற்றாலம் சாரல்திருவிழா ஆட்சியர் ஆலோசனை

குற்றாலத்தில் சாரல் திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம்
மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் : பங்கேற்பு

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதே போல் நெல்லை மாவட்டத்திலும் பரவலாக அனைத்து இடங்களிலும் பருவ மழை பெய்து வருகிறது.

குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இடைவிடாது பெய்து வரும் சாரல் மழையால் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி பழைய குற்றால அருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இந்த காலநிலையை அனுபவிக்க நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகின்றனர். இதனிடையே குற்றாலத்தில் சீசன் காலமான
ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களிலும் மாதங்களிலும் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து கொண்டே வருகிறது.

அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க சுற்றுலாத்துறை சார்பில் சாரல் விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சீசன் களைகட்டியுள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான சாரல் விழா இதுகுறித்து முன்னோடி ஆய்வுக்கூட்டம் குற்றாலத்தில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

கூட்டத்தில் மாவட்ட வருவாய்த்துறை, வனத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். நீதி மன்ற ஆணைப்படி குற்றாலத்தில் சோப்பு, ஷாம்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது போல் பிளாஸ்டிக் பைகள் முற்றுலும் ஒழிக்கப்படும்.

சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் சாரல் திருவிழா நடத்தப்படும், துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும், மாற்று திறனாளிகள் அருவி பகுதிகளுக்கு சென்றுவர சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும், பாதுகாப்பு வசதிக்காக கண்காணிப்பு கேமராக்கள் காவல்துறை சார்பில் பொருத்தபட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வர் என தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories