எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதியை விமர்சித்தோர் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?: நீதிபதி கிருபாகரன் கேள்வி

16 June03 high court - 2026

சென்னை 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்தோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் பெஞ்ச் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்  பட்டது செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், அவர்களைத் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று நீதிபதி சுந்தரும் வெவ்வேறு தீர்ப்புகளை அளித்தனர்.  எனவே,  3-வது நீதிபதி தீர்ப்புக்கு இந்த வழக்கு பரிந்துரைக்கப் பட்டது.

இதனிடையே தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியின் தீர்ப்பு குறித்து திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், தினகரன் ஆதரவு தரப்பினர் உள்ளிட்ட பலரும் விமர்சனங்களைத் தெரிவித்த போது, இன்னும் சிலர் மோசமான விமர்சனங்களை ஊடகங்களிலும் சமூகத் தளங்களிலும் முன் வைத்தனர்.

குறிப்பாக, செய்தி ஊடகங்களில்  இந்தத் தீர்ப்பு வரன்முறையின்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றின் விசாரணையின் போது நீதிபதி கிருபாகரன், நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிப்பது என்பது வேறு. ஆனால் தலைமை நீதிபதியின் பெயரைக் குறிப்பிட்டு விமர்சிப்பது என்பது வேறு.. இத்தகைய விமர்சனங்களை  தொலைக்காட்சிகளில் பார்த்தேன். அவர்கள் மீது போலீசார் தாமாக முன்வந்து ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை?

முதல்வர் உள்ளிட்டோரை பேசினால் தானாகவே வழக்குப் பதிவு செய்கிறது போலீஸ்? தலைமை நீதிபதியைப் பற்றி விமர்சிக்கும் போது அத்தகைய நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை? தலைமை நீதிபதி மீதான விமர்சனங்கள், அதன் மீதான நடவடிக்கை குறித்து வரும் 25ஆம் தேதி விரிவான அறிக்கையை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் எனன்று நீதிபதி கிருபாகரன் அப்போது கூறினார்.

அண்மையில், இயக்குனர் அமீர் கலந்து கொண்ட டிவி விவாத நிகழ்வு ஒன்று கோவையில் நடைபெற்ற போது, தேச நலனுக்கு ஊறுவிளைவிக்கும் பீரிவைனைக் கருத்துகளைப் பேசினாரென்று, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், நெறியாளர், பேசிய அமீர் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Entertainment News

Popular Categories