எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதியை விமர்சித்தோர் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?: நீதிபதி கிருபாகரன் கேள்வி

16 June03 high court - 2026

சென்னை 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்தோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் பெஞ்ச் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்  பட்டது செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், அவர்களைத் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று நீதிபதி சுந்தரும் வெவ்வேறு தீர்ப்புகளை அளித்தனர்.  எனவே,  3-வது நீதிபதி தீர்ப்புக்கு இந்த வழக்கு பரிந்துரைக்கப் பட்டது.

இதனிடையே தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியின் தீர்ப்பு குறித்து திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், தினகரன் ஆதரவு தரப்பினர் உள்ளிட்ட பலரும் விமர்சனங்களைத் தெரிவித்த போது, இன்னும் சிலர் மோசமான விமர்சனங்களை ஊடகங்களிலும் சமூகத் தளங்களிலும் முன் வைத்தனர்.

குறிப்பாக, செய்தி ஊடகங்களில்  இந்தத் தீர்ப்பு வரன்முறையின்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றின் விசாரணையின் போது நீதிபதி கிருபாகரன், நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிப்பது என்பது வேறு. ஆனால் தலைமை நீதிபதியின் பெயரைக் குறிப்பிட்டு விமர்சிப்பது என்பது வேறு.. இத்தகைய விமர்சனங்களை  தொலைக்காட்சிகளில் பார்த்தேன். அவர்கள் மீது போலீசார் தாமாக முன்வந்து ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை?

முதல்வர் உள்ளிட்டோரை பேசினால் தானாகவே வழக்குப் பதிவு செய்கிறது போலீஸ்? தலைமை நீதிபதியைப் பற்றி விமர்சிக்கும் போது அத்தகைய நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை? தலைமை நீதிபதி மீதான விமர்சனங்கள், அதன் மீதான நடவடிக்கை குறித்து வரும் 25ஆம் தேதி விரிவான அறிக்கையை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் எனன்று நீதிபதி கிருபாகரன் அப்போது கூறினார்.

அண்மையில், இயக்குனர் அமீர் கலந்து கொண்ட டிவி விவாத நிகழ்வு ஒன்று கோவையில் நடைபெற்ற போது, தேச நலனுக்கு ஊறுவிளைவிக்கும் பீரிவைனைக் கருத்துகளைப் பேசினாரென்று, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், நெறியாளர், பேசிய அமீர் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories