December 5, 2025, 8:45 PM
26.7 C
Chennai

எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதியை விமர்சித்தோர் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?: நீதிபதி கிருபாகரன் கேள்வி

16 June03 high court - 2025

சென்னை 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்தோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் பெஞ்ச் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்  பட்டது செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், அவர்களைத் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று நீதிபதி சுந்தரும் வெவ்வேறு தீர்ப்புகளை அளித்தனர்.  எனவே,  3-வது நீதிபதி தீர்ப்புக்கு இந்த வழக்கு பரிந்துரைக்கப் பட்டது.

இதனிடையே தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியின் தீர்ப்பு குறித்து திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், தினகரன் ஆதரவு தரப்பினர் உள்ளிட்ட பலரும் விமர்சனங்களைத் தெரிவித்த போது, இன்னும் சிலர் மோசமான விமர்சனங்களை ஊடகங்களிலும் சமூகத் தளங்களிலும் முன் வைத்தனர்.

குறிப்பாக, செய்தி ஊடகங்களில்  இந்தத் தீர்ப்பு வரன்முறையின்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றின் விசாரணையின் போது நீதிபதி கிருபாகரன், நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிப்பது என்பது வேறு. ஆனால் தலைமை நீதிபதியின் பெயரைக் குறிப்பிட்டு விமர்சிப்பது என்பது வேறு.. இத்தகைய விமர்சனங்களை  தொலைக்காட்சிகளில் பார்த்தேன். அவர்கள் மீது போலீசார் தாமாக முன்வந்து ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை?

முதல்வர் உள்ளிட்டோரை பேசினால் தானாகவே வழக்குப் பதிவு செய்கிறது போலீஸ்? தலைமை நீதிபதியைப் பற்றி விமர்சிக்கும் போது அத்தகைய நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை? தலைமை நீதிபதி மீதான விமர்சனங்கள், அதன் மீதான நடவடிக்கை குறித்து வரும் 25ஆம் தேதி விரிவான அறிக்கையை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் எனன்று நீதிபதி கிருபாகரன் அப்போது கூறினார்.

அண்மையில், இயக்குனர் அமீர் கலந்து கொண்ட டிவி விவாத நிகழ்வு ஒன்று கோவையில் நடைபெற்ற போது, தேச நலனுக்கு ஊறுவிளைவிக்கும் பீரிவைனைக் கருத்துகளைப் பேசினாரென்று, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், நெறியாளர், பேசிய அமீர் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories