கோவை கல்லூரி மாணவியின் உயிரைப் பறித்த பேரிடர் பயிற்சியாளர் கைது! முதல்வர் அவசர ஆலோசனை!

coimbatore logeswari horz - 2026

கோயமுத்தூர்: கோவையில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சியின் போது மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் ஆறுமுகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோவை தனியார் கல்லூரி ஒன்றில் என்.எஸ்.எஸ் சார்பில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த லோகேஸ்வரி என்ற மாணவி 2-வது மாடியில் இருந்து விழுந்தபோது, கட்டத்தின் நிழல்கூரை கழுத்தில் பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் அன்பழகனுடன் முதல்வர் பழனிசாமி இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

இதனிடையே, கோவையில் பேரிடர் பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தேசிய பேரிடர் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக ஆணையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கோவை மாணவி உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது. வேதனை அளிக்கிறது. இறந்த மாணவியின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறோம். இந்தப் பயிற்சிக்கும், பேரிடர் ஆணையத்துக்கும் தொடர்பில்லை. பயிற்சியாளர் எங்களிடம் முறையாக பயிற்சி பெற்றவர் இல்லை எனக்கூறியுள்ளது.

கோவை நரசிபுரம் தனியார் கல்லூரியில் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வந்தார் லோகேஸ்வரி என்ற மாணவி. அந்தக் கல்லூரியில் தனியார் அமைப்பின் மூலம் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, கீழே மாணவர்கள் வலையை விரித்து கைகளில் பிடித்திருக்க, 2வது மாடியின் சுவர் தளத்தில் இருந்து கீழே குதிக்க பயிற்சியாளர் ஆறுமுகம் மாணவியிடம் கூறியுள்ளார். ஆனால், பயத்தினால் மாணவி ஒரு கையால் சுவரைப் பிடித்திருக்க, திடீர் என பயிற்சியாளர் அந்த மாணவியைத் தள்ளி விட்டுள்ளார். அப்போது, சன்ஷேடில் பட்டு படுகாயமடைந்த லோகேஸ்வரி உயிரிழந்துள்ளார். பாதுகாப்புக் கயிறு கட்டாமல், பயிற்சியாளர் ஆறுமுகம் கீழே தள்ளியதில் மாணவி உயிரிழந்ததார் என்று புகார் பதியப்பட்டது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories