மாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு! நேரில் ஆஜராக உத்தரவு!

maran brothers - 2026

சென்னை: உயர் ரக பிஎஸ்என்எல். தொலைபேசி இணைப்புகளை சட்ட விரோதமாக சன் தொலைக்காட்சிக்கு பயன்படுத்தியது தொடர்பான வழக்கில், கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என சென்னை சிபிஐ நீதிமன்றம் கூறியுள்ளது. அன்று இருவரும் ஆஜராக வேண்டுமென்று அது உத்தரவிட்டுள்ளது.

தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, அதிவேக பிராட்பேன்ட் இணைப்புகளை சட்டவிரோதமாக சன் தொலைக்காட்சிக்கு பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரையும் சிபிஐ., நீதிமன்றம் விடுவித்தது.

ஆனால், அந்த உத்தரவுக்கு  எதிரான சிபிஐ., யின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ. சமர்ப்பித்த ஆதாரங்கள் போதுமானவை என்று தெரிவித்தது.

இதை அடுத்து, 7 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம், வழக்கை மீண்டும விசாரிக்க சிபிஐ., நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்ததை அடுத்து, இந்த வழக்கு சிபிஐ., நீதிமன்ற நீதிபதி ஆர்.வசந்தி முன் கடந்த 11ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது குற்றம் சாட்டப்பட்ட 7 பேருக்கு எதிராக ஆகஸ்ட் 17ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என நீதிபதி அறிவித்தார். அன்றைய தினம் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவை ஒட்டி நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பிஎஸ்என்எல்., முன்னாள் பொது மேலாளார் பிரம்மநாதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கேரளாவில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள பிரம்மநாதன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை எனக் கூறினார். மேலும், மற்றவர்களின் தரப்பிலும் குற்றச்சாட்டு பதிவு செய்வதை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் என கூறிய நீதிபதி, அன்று தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Topics

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories