திமுக., தலைவராக ஸ்டாலின்; பொருளாளராக துரை முருகன்!

stalin duraimurugan - 2026

சென்னை: வரும் ஆக.28 செவ்வாய்க்கிழமை திமுக.,வின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் பொதுக் குழுக் கூட்டத்தில், திமுக தலைவராக மு.க.ஸ்டாலின், பொருளாளராக துரைமுருகன் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று ஆ.ராசா கூறியுள்ளார்.

வரும் செவ்வாய்க் கிழமை, திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலினும் பொருளாளராக துரைமுருகனும் பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். காரணம், இதுவரை திமுக., தலைவர் பதவிக்காக ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரை.முருகனும் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர். வேறு எவரும் இவர்கள் இருவரையும் எதிர்த்து மனு தாக்கல் செய்யவில்லை. எனவே ஒருமனதாக இருவரும் தேர்வு செய்யப் படுவார்கள் என்று ஆ.ராசா கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 28-இல்...சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக பொதுக் குழு கூட்டம் வரும் 28-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. 50 ஆண்டுகளாகத் திமுகவின் தலைவராக இருந்த கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழலில் கட்சியின் தலைமை உள்ளது. திமுகவின் பொதுச் செயலாளராக க.அன்பழகனே நீடிக்கிறார்.

அண்ணா காலத்தில் திமுகவில் தலைவர் பதவி என்பது இல்லை. பொதுச் செயலாளராகத்தான் அண்ணா இருந்தார். அவர் மறைவுக்குப் பிறகு தலைவர் பதவியை உருவாக்கி அதன் பொறுப்பை கருணாநிதி ஏற்றார். அதிலிருந்து அவரே தலைவராக இருந்து வந்தார். கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து, திமுகவின் புதிய தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

கருணாநிதியின் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 30-ஆம் தேதி நடைபெற உள்ள கருணாநிதியின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்துக்கு முன்பாக, வரும் 28-ஆம் தேதி திமுக தலைவராக ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

பொருளாளர் துரைமுருகன்: திமுகவின் பொருளாளர் பதவியையும் இப்போது மு.க.ஸ்டாலினே சேர்த்து கவனித்து வருகிறார். திமுகவில் ஒருவர் இரு பதவிகளை வகிக்கக் கூடாது என்று விதி உள்ளது. அதனால், பொருளாளர் பதவியை ஸ்டாலின் விட்டுக் கொடுக்க முன்வந்தார். அந்தப் பதவிக்கு துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

துணை பொதுச் செயலாளர்: மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி துணைப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

திமுகவின் முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Entertainment News

Popular Categories