
மதுரை பெரியார் பஸ் நிலையம் “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் ரூ.160 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் நாளை (19-ந் தேதி) முதல் தொடங்குகிறது.
இதற்காக நாளை காலை நடைபெறும் விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
பெரியார் மற்றும் காம்ப்ளக்ஸ் இரு பஸ்நிலையங்களையும் இணைத்து பெரிய அளவில் ஒரே பஸ் நிலையமாக கட்டப்பட இருக்கிறது.

பெரியார் பஸ் நிலையத்தில் அமைய உள்ள புதிய பஸ் நிலைய கட்டிட வரைபடம் தற்போது வெளியாகி உள்ளது.
அதிக எண்ணிக்கையிலான கடைகள் கொண்ட பிரமாண்ட வணிக வளாகம் நான்கு மாடியில் கட்டப்பட உள்ளது.

இதன் முகப்பு மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தை குறிக்கும் வகையில் இடம்பெறும்.
இனி…பெரியார் பஸ் நிலையத்தில் அமைய உள்ள புதிய பஸ் நிலைய மாதிரி வரைபடத்தை பார்க்கலாம்.



