பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், குடும்பப் பிரச்னையில் மனைவியைக் கொன்று தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீசில் சரணடைந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், நெகமம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்த சின்னப்பராஜ் தென்னை மரம் ஏறும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி செல்வி. சின்னப்பராஜ், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி அவரைக் கண்டித்து, தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே இது தொடர்பாக நேற்று இரவும் கணவன் மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனைவி செல்வியின் தலையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார் சின்னப்பராஜ். பின்னர் மனவியின் வெட்டுப்பட்ட தலையைக் கையில் எடுத்துக் கொண்டு சின்னப்பராஜ், வடக்கிபாளையம் காவல் நிலையத்துக்கு நடந்து சென்றார். அந்தத் தலையை போலீஸாரிடம் கொடுத்து, சரண் அடைந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா பாணியில் நடந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending