பட்டா வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம்: பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது

mani m - 2026

மேலூர் அருகே பட்டா கேட்டு விண்ணப்பித்த விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வேப்படப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி.

விவசாயியான அவர் தனது நிலத்திற்கு பட்டா கேட்டு கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) மணிமேகலையிடம் மனு அளித்திருந்தார்.

அதற்கு அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து ஆண்டிச்சாமி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து ஆண்டிச்சாமிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனை வழங்கி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்குமாறு தெரிவித்தனர்.

அதன்படி ஆண்டிச்சாமி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிராம நிர்வாக அலுவலர் மணிமேகலையிடம் கொடுத்தார்.

அப்போது பணத்தை கிராம நிர்வாக அலுவலர் மணிமேகலை, அவரது புரோக்கர் மலைச்சாமியிடம் கொடுக்க சொல்லி பின்னர் அதனை வாங்கி தனது மேஜை டிராயரில் வைத்தார்.

இதனை மறைந்து இருந்து கண்காணித்த மதுரை சரக லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியசீலன் தலைமையிலான போலீசார், லஞ்சம் வாங்கிய மணிமேகலையை கையும் களவுமாக பிடித்தனர்.

இதையடுத்து லஞ்சம் வாங்கியது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் மணிமேகலை, புரோக்கர் மலைச்சாமி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லஞ்ச வழக்கில் பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Topics

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories