செங்கோட்டையில் உள்ள அருள்மிகு தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாத சுவாமி திருக்கோவிலில் இன்று வருஷாபிஷேகம் மிகவும் விமர்சியாக நடைப்பெற்றது.
இக்கோவிலில் கடந்த 2009 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.10 ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் 12/07/2019 வெள்ளிக்கிழமையான இன்று நடைப்பெற்றது, 9 மணியிலிருந்து 10.25 க்குள் விமான அபிஷேகம் நடைப்பெற்றது.
அந்தவகையில் இன்று காலையில் இருந்து தேவதா அனுஞை, எஜமானர் அனுஞை, மஹாகணபதி ஹோமம்,மூலமந்திர ஹோமம்,அஸ்திர ஹோமம்,திரவியாகுதி, மஹாபூர்ணாகுதி ஆகியன நடைப்பெற்று, அதனைத் தொடர்ந்து ,மூலவருக்கு அபிஷேகமும்,விமான அபிஷேகமும் நடைபெற்றது.
பின் விசேஷ அலங்கார தீபாராதனையும் நடைப்பெற்றது,இதனை கோவிலின் அர்ச்சகர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.கோவில் அதிகாரிகளும், பக்தர்களும் கலந்து கொண்டு அருள்மிகு தர்மஸம்வர்த்தினி சமேத குலசேகரநாத சுவாமியின் அருளுக்கு பாத்திரமானார்கள்.
மேலும் மாலை 6 மணிக்கு தீபாராதனையும், சுவாமி அம்பாள் பக்தி உலாவும் உள்ளது.


