திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் மிகச்சிறந்த முறையில் நடத்த ஏற்பாடு..

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் மிகச்சிறந்த முறையில் நடத்தப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் மிகச்சிறந்த முறையில் நடத்தப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

குழித்துறையில் உள்ள மகாதேவர் கோவிலுக்கு சொந்தமான அரண்மனை பள்ளி கட்டிடத்தில் ரூ.32 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அரண்மனை பள்ளி வளாகத்தில் குத்துவிளக்கேற்றி பணிகளை பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

குழித்துறை மகாதேவர் கோவிலுக்கு சொந்தமான அரண்மனை தேவசம் உயர்நிலைப்பள்ளி சுமார் 10 ஆண்டுகள் செயல்படாமலும், கட்டிடங்கள் பழுதடைந்த நிலையிலும் இருக்கிறது. அதை சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, பராமரிப்பு பணிக்காக ரூ.32 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளன. பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

குமரி மாவட்டத்தில் பல கோவில்களில் கலை நுட்பங்களுடன் கூடிய சிற்பங்கள், புராதான கோவில்கள் அனைத்தையும் சீரமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையான போலீசாரை பணியில் அமர்த்தி பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளவும் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் மிகச்சிறந்த முறையில் நடத்தப்படும். அதிகமான பொதுமக்கள் வருகைபுரிந்தால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்துகொடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தயாராக இருக்கிறோம் என அவர் கூறினார். உடன் குமரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

images 67 1 - 2026
images 68 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories