December 6, 2025, 4:04 AM
24.9 C
Chennai

வுட்டா.. கருவறைக்குள்ளயே கார்ல போயி இறங்குவாய்ங்களோ?! அதிகாரிகளின் அராஜகங்கள்!

bannari mariamman temple eo car - 2025

சென்னை: புகழ்பெற்ற பல கோயில்களில் வசதிகளைக் காரணம் காட்டி, அவற்றின் புனிதத்தைக் கெடுக்கும் வேலைகளை மட்டும் சரியாகச் செய்து வருகிறார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள்!

கோயிலைக் கட்டிய மன்னன் கூட, அந்தக் காலத்தில் கோபுரத்தைக் கடந்து உள்ளே நடந்துதான் வந்திருக்கிறான். அரண்மனை போல் கோயிலை பிரமாண்டமாகக் கட்டினாலும், அதில் எங்குமே ரதமோ வண்டியோ வரும் அளவுக்கு வாசல் அமைந்திருக்காது.

ஆனால், வெறும் நிர்வாகப் பொறுப்பை மட்டுமே எடுத்துக் கொண்டுள்ள அறநிலையத் துறை அதிகாரிகளோ, கோயில் வளாகத்துக்குள் அமைந்திருக்கும் அலுவலக அறைக்கு தங்கள் கார்களிலும் ஜீப்களிலும் வருவதற்கு ஏற்ப வாசல்களை இடித்தும் சாய்வு படிகள் வசதியை அமைத்தும் கோயில் அமைப்பையே மாற்றி அமைத்திருக்கிறார்கள். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய், பழங்கால மதில் சுவரையே ஒரு புறம் இடித்து, வண்டி செல்வதற்கான வாசலாகவே சில கோயில்களில் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் கோயிலில், கிழக்கு வாசலை வாகனப் பாதையாக்கி, மிக மிக நுணுக்கமாக கவனித்துப் பேண வேண்டிய ராயர் மண்டபத்தை கார் செல்லும் ரோடாக்கி வாகன பார்க்கிங் செய்து வைத்திருக்கிறார்கள்.

இதுதான் அரசு அதிகாரிக்கும் சாமானிய மக்களுக்கும் உள்ள வித்தியாசம் என்று பக்தர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஈரோடு மாவட்டம்- சத்தியமங்கலம் நகரில் உள்ள புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் அரசு அதிகாரியின் வாகனம், கோவில் பிராகாரத்தில் நடுவில் நிறுத்தி கழுவப்பட்டது! இதே இடத்தில் ஒரு சாதாரண மனிதன் தனது புதிய வண்டியை நிறுத்தி பூஜைகூட செய்ய முடியாது!

ஆக, அதிகாரிகளைப் பொறுத்தவரை கடவுள் என்பவர் வெறும் காட்சிப் பொருள்தானா என்று கேள்வி எழுப்புகின்றனர் பக்தர்கள்? இது குறித்து உரிய விசாரணை நடத்தப் பட்டு நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பு!

2 COMMENTS

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories