வுட்டா.. கருவறைக்குள்ளயே கார்ல போயி இறங்குவாய்ங்களோ?! அதிகாரிகளின் அராஜகங்கள்!

bannari mariamman temple eo car - 2026

சென்னை: புகழ்பெற்ற பல கோயில்களில் வசதிகளைக் காரணம் காட்டி, அவற்றின் புனிதத்தைக் கெடுக்கும் வேலைகளை மட்டும் சரியாகச் செய்து வருகிறார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள்!

கோயிலைக் கட்டிய மன்னன் கூட, அந்தக் காலத்தில் கோபுரத்தைக் கடந்து உள்ளே நடந்துதான் வந்திருக்கிறான். அரண்மனை போல் கோயிலை பிரமாண்டமாகக் கட்டினாலும், அதில் எங்குமே ரதமோ வண்டியோ வரும் அளவுக்கு வாசல் அமைந்திருக்காது.

ஆனால், வெறும் நிர்வாகப் பொறுப்பை மட்டுமே எடுத்துக் கொண்டுள்ள அறநிலையத் துறை அதிகாரிகளோ, கோயில் வளாகத்துக்குள் அமைந்திருக்கும் அலுவலக அறைக்கு தங்கள் கார்களிலும் ஜீப்களிலும் வருவதற்கு ஏற்ப வாசல்களை இடித்தும் சாய்வு படிகள் வசதியை அமைத்தும் கோயில் அமைப்பையே மாற்றி அமைத்திருக்கிறார்கள். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய், பழங்கால மதில் சுவரையே ஒரு புறம் இடித்து, வண்டி செல்வதற்கான வாசலாகவே சில கோயில்களில் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் கோயிலில், கிழக்கு வாசலை வாகனப் பாதையாக்கி, மிக மிக நுணுக்கமாக கவனித்துப் பேண வேண்டிய ராயர் மண்டபத்தை கார் செல்லும் ரோடாக்கி வாகன பார்க்கிங் செய்து வைத்திருக்கிறார்கள்.

இதுதான் அரசு அதிகாரிக்கும் சாமானிய மக்களுக்கும் உள்ள வித்தியாசம் என்று பக்தர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஈரோடு மாவட்டம்- சத்தியமங்கலம் நகரில் உள்ள புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் அரசு அதிகாரியின் வாகனம், கோவில் பிராகாரத்தில் நடுவில் நிறுத்தி கழுவப்பட்டது! இதே இடத்தில் ஒரு சாதாரண மனிதன் தனது புதிய வண்டியை நிறுத்தி பூஜைகூட செய்ய முடியாது!

ஆக, அதிகாரிகளைப் பொறுத்தவரை கடவுள் என்பவர் வெறும் காட்சிப் பொருள்தானா என்று கேள்வி எழுப்புகின்றனர் பக்தர்கள்? இது குறித்து உரிய விசாரணை நடத்தப் பட்டு நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பு!

2 COMMENTS

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories