மதுரை கம்யூனிஸ்ட் எம்.பி.,யின் அராஜகம்! அப்பாவியை மிரட்டும் அசிங்கம்!

suvenkatesan visakan - 2026

மதுரையின் எம்.பி.,யாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் இப்போது அதிகாரியை மிரட்டும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.

கடந்தமுறை மதுரை எம்பி.,யாக இருந்தவர் அதிமுக.,வின் கோபாலகிருஷ்ணன்! இவர், தல்லாகுளத்தில் உள்ள மாநகராட்சிக் கட்டடம் ஒன்றை புதுப்பித்து, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி அலுவலகமாக பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில் தற்போது எம்.பி., ஆகியுள்ள கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன், தனக்கும் அதே அலுவலகத்தை கொடுப்பார்கள் என்று எண்ணியுள்ளார். ஆனால், அவருக்கு அந்தக் கட்டடத்தை கொடுக்க உள்ளூர் அமைச்சர் முட்டுக்கட்டை போட்டுள்ளார் என்கிறார்கள்.

இந்நிலையில், தனக்கு அந்தக் கட்டடத்தை ஒதுக்கித் தருமாறு, மாநகராட்சி ஆணையர் விசாகனைப் போட்டு உலுக்கியுள்ளார் சு.வெங்கடேசன்.

ஆனால் மாநகராட்சி ஆணையர் விசாகனோ, மிகவும் அமைதியானவர் என்றும் அன்பானவர் என்றும் பேர் எடுத்தவர். அதிர்ந்துகூட பேசத் தெரியாதவர் என்கிறார்கள் உடன் பணிபுரிபவர்கள்.. அவரைப் போய் சு.வெங்கடேசன் மிரட்டியதாகவும், அதற்கு அவர் அந்தக் கட்டடம் உள்ள இடத்தில் வணிக வளாகம் வருகிறது என்று சொல்லி சமாளித்ததாகவும் கூறுகிறார்கள்!

ஆனால் இதனால் எல்லாம் சற்றும் அமைதியடையாக கம்யூனிஸ்ட் வெங்கடேசன், அமைதிப் பேர்வழியான அதிகாரியை கண்டபடி பேசி, மிரட்டிச் சென்றதாக கூறுகிறார்கள். இதனால் மாநகராட்சி ஆணையர் விசாகன், கடும் மனஉளைச்சலுக்கு ஆட்பட்டிருக்கிறாராம்!

இது குறித்து விவரம் தெரியவந்ததும், மாநகராட்சியில் பணி புரியும் அதிகாரிகள், கம்யூனிஸ்ட் எம்.பியின் அறியாமையையும் அராஜகத்தையும் சொல்லி வருத்தப் படுகிறார்களாம்! எம்.பி., அலுவலகக் கட்டடம் தேவை என்று மாவட்ட ஆட்சியரிடம் கேட்பதை விட்டுவிட்டு, மாநகராட்சி ஆணையரைப் போய் மிரட்டிச் சென்றிருக்கிறாரே.. இது நியாயமா? என்று மாய்ந்து போகிறார்கள்!

கம்யூனிஸ்ட் என்றாலே மிரட்டிப் பிழைப்பதுதான்! அதற்கு ஒரு அப்பாவி அதிகாரியா பலிகடா ஆகவேண்டும்?!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories