Home Blog Page 6192

Thirumayam- near pudukkoottai, Tamil Nadu. Perumal Koil





திருமயம் பெருமாள் கோயில்

இந்தப் படங்கள், திருமயம் திருக்கோயிலுக்குச் சென்றபோது எடுக்கப்பட்டவை. பொதுவாக இறைவனை புகைப்படம் எடுக்கக் கூடாது என்பார்கள். உடல்நலம் முடியாமல் பெருமாளைக் காணும் ஆவல் மிகுந்த பெரியவர் ஒருவருக்காக அடியேன் எடுத்துவந்த புகைப்படங்கள்… இவை. அந்தப் பெரியவருக்கு மட்டுமல்லாமல், அவரை நேரில் வந்து தரிசிக்க முடியாமல், ஆனால் அவருடைய நினைவாக உள்ள பக்தர்களுக்காக, குறிப்பாக அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் மகன் அல்லது மகள்களுடன் தங்கிவிட்டு, இந்தியாவில் உள்ள இந்தப் பெருமாள் நினைவாகவே உள்ள பெரியவர்களுக்காக இந்தப் படத்தை இடம்பெறச்செய்துள்ளேன். பெருமாள் என்னை மன்னிப்பாராக.

Mr. MOON’S DIFFERENT STYLES










CAN YOU IDENTIFY THESE IMAGES?

IF YOU CAN’T…?

SCROLL DOWN

AND

CAN YOU IMAGINE THIS?

YES, THESE POSES ARE GIVEN BY OUR BEAUTIFUL CHANDRAN (MOON).

JUST A GIMIX IN THE PHOTOGRAPHIC SENSE… THATS ALL…

புத்தகம் -1857 ல் தமிழ்மண்

[videopress JRM56bQm]


1857ல்-தமிழ்மண் – புத்தகம்

விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை – 600 002.

புத்தகத்தின் ஆசிரியர் குறிப்பிலிருந்து…

சுதந்திரக் காற்றை சுவாசித்து நாம் சுகமாக வாழ்கிறோம் என்றால், அதற்குக் காரணம் நம் முன்னோர் செய்த தியாகம்தான். நிஜாம் மற்றும் நவாபுகளின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பதவி மோகம், வரி வசூலிப்பதில் உண்டான போட்டி, சுதேச ஆட்சியாளர்களிடையே இருந்த ஒற்றுமையற்ற சூழல் போன்றவை, வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயருக்கு சாதகமாகப் போயிற்று.அதன்பின் இருநூறு ஆண்டுகள் நம் நாடு அடிமைப்பட்டு மக்கள் அளவற்ற துன்பங்களுக்கு ஆளாக நேர்ந்தது. இவை நமக்கு இந்திய வரலாறு கூறும் விஷயங்கள்.

ஆங்கிலேயருக்கு எதிரான 1857 முதல் சுதந்திரப் போர் சிப்பாய் கலகமே என்றும், இல்லை அது ஒரு தேசிய எழுச்சி என்றும், இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. இவற்றை மையமாகக் கொண்டு, 1857-ல் தமிழகத்தில் ஏற்பட்ட சுதந்திர எழுச்சியையும்,அதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பூலித்தேவன் என்ற தமிழக பாளையக்காரர் எழுப்பிய முதல் சுதந்திரப் போர்க்குரலையும், அதனைத் தொடர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரர்களின் செயல்களையும் ஆவணங்களின் குறிப்புகளோடு இந்நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.
நவாபுகளுக்குள் உண்டான காழ்ப்பு உணர்ச்சியால், எப்படி நம் நாடு ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டது, வாணிபம் செய்யவந்தவர்கள் நம்மை ஆட்சி செய்ய நேர்ந்தது எப்படி போன்ற பல வரலாற்றுச் செய்திகளை நூலாசிரியர் அழகாகத் தொகுத்துள்ளார். நம் நாட்டின் சுதந்திர வரலாற்றில், சரியாகப் பதிவாகாமல் போய்விட்ட 1857-ம் ஆண்டு நிகழ்வுகளில் தமிழகத்தின் பங்கினையும், புதிய பரிமாணத்தோடு சில சம்பவங்களையும் நூலாசிரியர் நம் சிந்தனைக்குக் கொண்டு வந்திருக்கிறார்.வரலாற்றுப் பதிவுகளும் அவை சார்ந்த விஷயங்களும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை. இந்த நூல் வரலாற்றுப் பதிவினைத் தெரிவிக்கும் தகவல் பெட்டகமாகவும்,வீர உணர்வை வெளிப்படுத்தும் தூண்டு கோலாகவும் அமைந்துள்ளது.
நூலாசிரியர் குறிப்பிலிருந்து …

கலகமா? போராட்டமா?

ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் வீர வரலாறு மிக முக்கியம். நம் நாட்டுக்கும் அத்தகைய வரலாறு இருக்கிறது. காந்திஜியின் வருகைக்குப் பிறகு சாத்வீக முறையில் நாம் சுதந்திரம் பெற்றோம் என்றாலும், அதற்கு முன் நம் நாட்டில் நடைபெற்ற ஆயுதப் போராட்டங்கள் சுதந்திரத்தின் வலியை உணரச் செய்பவை. அந்த விடுதலைப் போராட்டத்தை நம் இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் இந்த நூலைத் தொகுக்க முயன்றேன். இந்த நூலில், ஆயுதம் தாங்கிய நம் நாட்டின் விடுதலைப் போரை நான்கு பகுதிகளாக்கி அலசியுள்ளேன்.

முதல் பகுதியில் இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வை மிகப் பெரிய அளவில் கிளப்பிய பூலித்தேவன் வரலாறு, அவனுடைய வீரம், அவன் பிரிட்டிஷாரை எதிர்த்த விதம், மக்கள் அதற்கு அளித்த ஆதரவு ஆகியவற்றைத் தந்துள்ளேன்.அடுத்த பகுதியில், பூலித்தேவனுக்குப் பிறகு தொடர்ந்த ஆங்கில எதிர்ப்புப் போர்களில் கட்டபொம்மன், மருது சகோதரர்கள், 1806-ல் நடைபெற்ற வேலூர் சிப்பாய்களின் புரட்சி போன்றவற்றைத் தந்துள்ளேன்.
1857-ல் வடக்கே சிப்பாய்களை முதன்மையாக வைத்து நடந்த பிரிட்டிஷ் எதிர்ப்புப் போராட்டம், அதன் தோற்றுவாய் என்ன என்பதை அலசியுள்ளேன். நிறைவுப் பகுதியில், அதே காலகட்டத்தில், தமிழகத்தின் முக்கியஇடங்களில் பொதுமக்களிடையே இருந்த பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வுமற்றும் தமிழகத்து மக்களின் போராட்ட பங்களிப்பு ஆகியவற்றை ஆங்கிலேய அரசே ஏற்படுத்திய ஆவணங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்துத் தொகுத்துள்ளேன். இவற்றை நீங்கள் ஊன்றிப் படித்தால், பொதுமக்கள் பங்களிப்பு 1857காலகட்டத்தில் எப்படி இருந்தது என்பதையும், அதனால் இதை சிப்பாய்கலகம் என்று சொல்லி சிறுமைப்படுத்தக்கூடாது என்பதையும்உணர்வீர்கள். அதுவே இந்த நூல் மூலம் நான் சொல்ல வந்த செய்தி!
அன்பன்,
செங்கோட்டை ஸ்ரீராம்

 

https://www.viruba.com/atotalbooks.aspx?id=663

https://www.viruba.com/final.aspx?id=VB0002124

மகா சுதர்சன வழிபாடு – புத்தகம்

வணக்கம்
அடியேன் எழுதி விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள மஹா சுதர்சன வழிபாடு புத்தகம் பற்றிய தகவலை இங்குக் கொடுத்துள்ளேன்.
இந்தப் புத்தகத்தைப் பற்றி …

உலகம் முழுவதும் முருக வழிபாடு பரவியுள்ளதுபோல் முருகனின் ஆயுதமான வேல் வழிபாடும் பரவியுள்ளது. வேல் வழிபாடு என்பது, முருக வழிபாட்டின் ஓர் அங்கம்.

உலகைக் காக்கும் கடவுளாக வேதங்கள் போற்றும் விஷ்ணுவின் கையில் உள்ள சக்கரத்தை வழிபடுவது விஷ்ணு வழிபாட்டின் ஓர் அங்கம். இதுவும் தொன்றுதொட்டு வந்துள்ளது என்பதற்கான உதாரணங்கள், வேதங்கள், ஆழ்வார் பாசுரங்கள் போன்றவற்றிலிருந்து தரப்பட்டுள்ளன. ஆண்டவன் கை ஆயுதம் எதற்காக என்பதையும், அதை வழிபடும் முறையையும் இந்நூல் எளிதாக விளக்குகிறது.

அம்பரீஷ மன்னனுக்கு உதவியது; அர்ஜுனன் உயிரைக் காத்தது, கஜேந்திரன் என்ற யானையின் உயிரைக் காத்தது உள்ளிட்ட சக்கரத்தாழ்வார் தொடர்புடைய கதைகள்… கும்பகோணம் சக்கரபாணி கோயில்; திருமோகூர் சக்கரத்தாழ்வார் கோயில் உள்ளிட்ட சுதர்ஸன வழிபாடுள்ள முக்கியத் திருத்தலங்கள்… சுதர்ஸனரை வழிபடும் முறை, சுதர்ஸன ஹோமம் செய்வதன் பலன், சுதர்ஸனரின் மகிமை, தேசிகர் அருளிய சுதர்ஸன அஷ்டகம்; சுதர்ஸன கவசம்; சுதர்ஸன ஷட்கம் போன்ற சுதர்ஸனர் சுலோகங்கள், தோத்திரங்கள் என அனைத்தும் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

விலை: ரூ.35 முப்பத்தி ஐந்து மட்டும்

பக்கங்கள் : 96 ௯௬

புத்தகத்திலுள்ள ஆசிரியர் குறிப்பிலிருந்து…

புத்தகம் -1857 ல் தமிழ்மண்


1857ல்-தமிழ்மண் – புத்தகம்

விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை – 600 002.

புத்தகத்தின் ஆசிரியர் குறிப்பிலிருந்து…

சுதந்திரக் காற்றை சுவாசித்து நாம் சுகமாக வாழ்கிறோம் என்றால், அதற்குக் காரணம் நம் முன்னோர் செய்த தியாகம்தான். நிஜாம் மற்றும் நவாபுகளின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பதவி மோகம், வரி வசூலிப்பதில் உண்டான போட்டி, சுதேச ஆட்சியாளர்களிடையே இருந்த ஒற்றுமையற்ற சூழல் போன்றவை, வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயருக்கு சாதகமாகப் போயிற்று.அதன்பின் இருநூறு ஆண்டுகள் நம் நாடு அடிமைப்பட்டு மக்கள் அளவற்ற துன்பங்களுக்கு ஆளாக நேர்ந்தது. இவை நமக்கு இந்திய வரலாறு கூறும் விஷயங்கள்.

ஆங்கிலேயருக்கு எதிரான 1857 முதல் சுதந்திரப் போர் சிப்பாய் கலகமே என்றும், இல்லை அது ஒரு தேசிய எழுச்சி என்றும், இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. இவற்றை மையமாகக் கொண்டு, 1857-ல் தமிழகத்தில் ஏற்பட்ட சுதந்திர எழுச்சியையும்,அதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பூலித்தேவன் என்ற தமிழக பாளையக்காரர் எழுப்பிய முதல் சுதந்திரப் போர்க்குரலையும், அதனைத் தொடர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரர்களின் செயல்களையும் ஆவணங்களின் குறிப்புகளோடு இந்நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.
நவாபுகளுக்குள் உண்டான காழ்ப்பு உணர்ச்சியால், எப்படி நம் நாடு ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டது, வாணிபம் செய்யவந்தவர்கள் நம்மை ஆட்சி செய்ய நேர்ந்தது எப்படி போன்ற பல வரலாற்றுச் செய்திகளை நூலாசிரியர் அழகாகத் தொகுத்துள்ளார். நம் நாட்டின் சுதந்திர வரலாற்றில், சரியாகப் பதிவாகாமல் போய்விட்ட 1857-ம் ஆண்டு நிகழ்வுகளில் தமிழகத்தின் பங்கினையும், புதிய பரிமாணத்தோடு சில சம்பவங்களையும் நூலாசிரியர் நம் சிந்தனைக்குக் கொண்டு வந்திருக்கிறார்.வரலாற்றுப் பதிவுகளும் அவை சார்ந்த விஷயங்களும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை. இந்த நூல் வரலாற்றுப் பதிவினைத் தெரிவிக்கும் தகவல் பெட்டகமாகவும்,வீர உணர்வை வெளிப்படுத்தும் தூண்டு கோலாகவும் அமைந்துள்ளது.
நூலாசிரியர் குறிப்பிலிருந்து …

கலகமா? போராட்டமா?

ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் வீர வரலாறு மிக முக்கியம். நம் நாட்டுக்கும் அத்தகைய வரலாறு இருக்கிறது. காந்திஜியின் வருகைக்குப் பிறகு சாத்வீக முறையில் நாம் சுதந்திரம் பெற்றோம் என்றாலும், அதற்கு முன் நம் நாட்டில் நடைபெற்ற ஆயுதப் போராட்டங்கள் சுதந்திரத்தின் வலியை உணரச் செய்பவை. அந்த விடுதலைப் போராட்டத்தை நம் இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் இந்த நூலைத் தொகுக்க முயன்றேன். இந்த நூலில், ஆயுதம் தாங்கிய நம் நாட்டின் விடுதலைப் போரை நான்கு பகுதிகளாக்கி அலசியுள்ளேன்.

முதல் பகுதியில் இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வை மிகப் பெரிய அளவில் கிளப்பிய பூலித்தேவன் வரலாறு, அவனுடைய வீரம், அவன் பிரிட்டிஷாரை எதிர்த்த விதம், மக்கள் அதற்கு அளித்த ஆதரவு ஆகியவற்றைத் தந்துள்ளேன்.அடுத்த பகுதியில், பூலித்தேவனுக்குப் பிறகு தொடர்ந்த ஆங்கில எதிர்ப்புப் போர்களில் கட்டபொம்மன், மருது சகோதரர்கள், 1806-ல் நடைபெற்ற வேலூர் சிப்பாய்களின் புரட்சி போன்றவற்றைத் தந்துள்ளேன்.
1857-ல் வடக்கே சிப்பாய்களை முதன்மையாக வைத்து நடந்த பிரிட்டிஷ் எதிர்ப்புப் போராட்டம், அதன் தோற்றுவாய் என்ன என்பதை அலசியுள்ளேன். நிறைவுப் பகுதியில், அதே காலகட்டத்தில், தமிழகத்தின் முக்கியஇடங்களில் பொதுமக்களிடையே இருந்த பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வுமற்றும் தமிழகத்து மக்களின் போராட்ட பங்களிப்பு ஆகியவற்றை ஆங்கிலேய அரசே ஏற்படுத்திய ஆவணங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்துத் தொகுத்துள்ளேன். இவற்றை நீங்கள் ஊன்றிப் படித்தால், பொதுமக்கள் பங்களிப்பு 1857காலகட்டத்தில் எப்படி இருந்தது என்பதையும், அதனால் இதை சிப்பாய்கலகம் என்று சொல்லி சிறுமைப்படுத்தக்கூடாது என்பதையும்உணர்வீர்கள். அதுவே இந்த நூல் மூலம் நான் சொல்ல வந்த செய்தி!
அன்பன்,
செங்கோட்டை ஸ்ரீராம்

[videopress JRM56bQm]

https://www.viruba.com/atotalbooks.aspx?id=663

https://www.viruba.com/final.aspx?id=VB0002124

மகா சுதர்சன வழிபாடு – புத்தகம்

வணக்கம்
அடியேன் எழுதி விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள மஹா சுதர்சன வழிபாடு புத்தகம் பற்றிய தகவலை இங்குக் கொடுத்துள்ளேன்.
இந்தப் புத்தகத்தைப் பற்றி …

உலகம் முழுவதும் முருக வழிபாடு பரவியுள்ளதுபோல் முருகனின் ஆயுதமான வேல் வழிபாடும் பரவியுள்ளது. வேல் வழிபாடு என்பது, முருக வழிபாட்டின் ஓர் அங்கம்.

உலகைக் காக்கும் கடவுளாக வேதங்கள் போற்றும் விஷ்ணுவின் கையில் உள்ள சக்கரத்தை வழிபடுவது விஷ்ணு வழிபாட்டின் ஓர் அங்கம். இதுவும் தொன்றுதொட்டு வந்துள்ளது என்பதற்கான உதாரணங்கள், வேதங்கள், ஆழ்வார் பாசுரங்கள் போன்றவற்றிலிருந்து தரப்பட்டுள்ளன. ஆண்டவன் கை ஆயுதம் எதற்காக என்பதையும், அதை வழிபடும் முறையையும் இந்நூல் எளிதாக விளக்குகிறது.

அம்பரீஷ மன்னனுக்கு உதவியது; அர்ஜுனன் உயிரைக் காத்தது, கஜேந்திரன் என்ற யானையின் உயிரைக் காத்தது உள்ளிட்ட சக்கரத்தாழ்வார் தொடர்புடைய கதைகள்… கும்பகோணம் சக்கரபாணி கோயில்; திருமோகூர் சக்கரத்தாழ்வார் கோயில் உள்ளிட்ட சுதர்ஸன வழிபாடுள்ள முக்கியத் திருத்தலங்கள்… சுதர்ஸனரை வழிபடும் முறை, சுதர்ஸன ஹோமம் செய்வதன் பலன், சுதர்ஸனரின் மகிமை, தேசிகர் அருளிய சுதர்ஸன அஷ்டகம்; சுதர்ஸன கவசம்; சுதர்ஸன ஷட்கம் போன்ற சுதர்ஸனர் சுலோகங்கள், தோத்திரங்கள் என அனைத்தும் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

விலை: ரூ.35 முப்பத்தி ஐந்து மட்டும்

பக்கங்கள் : 96 ௯௬

புத்தகத்திலுள்ள ஆசிரியர் குறிப்பிலிருந்து…

My book Tamizhmarai thantha panniruvar – Review

அடியேன் எழுதி விகடன் பிரசுரம் மூலம் வெளியாகியிருக்கும் தமிழ்மறை தந்த பன்னிருவர் நூல் விமர்சனத்தை, திருச்சி, புத்தூர் வக்கீல், ஸுதர்சனர் ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் கீழ்க்காணும்படி தந்திருக்கிறார். அவருக்கு அடியேனின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு உங்களுக்கு தருகிறேன்…

அன்பன்
செங்கோட்டை ஸ்ரீராம்.

தமிழ்மறை தந்த பன்னிருவர்

பக்கங்கள்: 192
விலை ரூ.55,
நூலாசிரியர்: செங்கோட்டை ஸ்ரீராம்
விகடன் பிரசுரம் 757, அண்ணா சாலை, சென்னை 2
———————————————————————————–
விசதவாக் சிகாமணிகளான மணவாளமாமுனிகள் அருளிய உபதேச ரத்னமாலையை அனுசரித்து ஆழ்வார்கள் அவதாரம் ஏன் ஏற்பட்டது? பொய்கையாழ்வார் தொடக்காமாக திருமங்கையாழ்வார் ஈறாக ஆழ்வார்கள் வரலாறு, ஆழ்வார்கள் பாசுரங்களைத் தொகுத்துத் தந்த நாதமுனிகள் முதலிய பதினான்கு தலைப்புகளில் ஆழ்வார்களின் வரலாறும் அவர்கள் அருளிய பாடல்களின் பொருட்செறிவும் மிகவும் எளிய இனிய தமிழில் இந்நூலில் தரப்பட்டுள்ளது. ஆழ்வார்களின் திருவுருவப்படங்களைக் கொண்ட வண்ண அட்டைப்படம், ஒவ்வொரு ஆழ்வாரின் வரலாற்றை விளக்கும் அத்தியாயத்தில் அவரது திருவுருவப் படம் ஆகியவற்றோடு உயர்ந்த தாளில் சிறப்பாக அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

நூலாசிரியரின் முகவுரையில், ஑஑திருச்சியில் கல்லூரியில் படித்த காலத்தே என்னுள் எழுந்த ஐயங்களைத் தீர்க்கும் அருமருந்தாக விளங்கியவர் வைணவப் பெரியவர் புத்தூர் ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார்ஒஒ (ஸுதர்ஸனர்) என்று எழுதியுள்ளதும் குறிக்கொள்ளத் தக்கது. விகடன் போன்ற பிரபல பதிப்பகத்தின் ஆதரவில் இந்த நூல் வெளிவந்துள்ளது ஆயிரக்கணக்கான வாசகர்கள் வைணவ ஆழ்வார்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை. நூலாசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியது.

இருபினும் ஒரு விஷயத்தை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. பக்கம் 25ல் பொய்கையாழ்வாரை ஑஑சைவ வைணவ ஒற்றுமை பேசியவர்ஒஒ என்று குறிப்பிட்டுள்ளதும், அதற்குச் சான்றாக அவர் அருளிய முதல் திருவந்தாதியில் அரன் நாரணன் நாமம்(5) என்னும் பாட்டுக்கு ஒரே தெய்வத்துக்கு (அரன் நாரணன் ஆகியவை உனது) பெயர்கள், எருது கருடன் உமது வாகனங்கள், ஆகமமும் வேதமும் உன் பெருமை பறை சாற்றும் நூல்கள், கைலாய மலையும் திருப்பாற்கடலும் உன் இருப்பிடங்கள் என்று பொருள் உரைத்திருப்பது பொருந்தாது.

இப்பாசுரம் சிவனின் தாழ்ச்சியையும் அவனோடு ஒப்பிடும்போது ஸ்ரீமந் நாராயணனின் மேன்மையையும் விளக்குகிறது. அதாவது ஒருவனுக்கு அரன் என்று பெயர், அவனுக்கு ஞானமற்ற எருது வாஹனம், அவனைச் சொல்லும் நூல் வேத விருத்தமான அர்த்தங்களையும் சொல்லும் சைவாகமம். அவன் வசிக்கும் இடம் கடினத் தன்மையுடைய கைலாய மலை. அவனது தொழிலோ அழிப்பது. ஆயுதமோ வேல், அவனுடைய வடிவு எரிக்கும் நெருப்பு போன்றது என்று சிவனுடைய தாழ்ச்சியை வர்ணிக்கிறார்.

பொய்கையாழ்வார் அதுபோல் சிவனுள்ளிட்ட அனைத்துலகையும் படைத்த பரம்பொருளுக்குப் பெயர் நாராயணன், அவனுக்கு வாஹனம் வேதமயமான கருடன். அவனைப் பேசுவது அநாதியான வேதம். அவன் வசிக்கும் இடம் குளிர்ந்த கடல், அவனுக்குத் தொழிலோ அனைவரையும் ரட்சிப்பது, அவனுடைய ஆயுதம் அருளார் திருச்சக்கரம். அவனது வடிவு களைப்புகளை ஆற்றும் கார்மேகம் போன்றது.

இப்படிப்பட்ட இருவரில் அனைத்துலகையும் போலே சிவனும் எம்பெருமானுக்கு சரீரம் என்பதே இப்பாசுரத்தின் உண்மைப் பொருள். ஑஑வியவேன் திருமாலையல்லாது தெய்வம் என்றேத்தேன் வருமாறென் நம்மேல் வினைஒஒ (64) என்று பாடிய ஆழ்வார் மீது தர்காலத்தில் பிரசாரம் செய்யப்பட்டு வரும் சமரசவாதத்தை ஏறிடுவது தகாது.

நூலாசிரியர் ஆழ்வார் சமரசம் பேசுவதாக எடுத்துக்காட்டியிருக்கும் மற்ற பாடல்களுக்கும் எம்பெருமான் சரீரத்தையுடையவன் (சரீரி) ஏனைய உலகமனைத்தும் அவனுக்கு சரீரம் என்ற விசிஷ்டாத்வைத வேதாந்தக் கருத்துக்கு இணங்கப் பொருள் கொள்ள வேண்டும். அடுத்த பதிப்பில் இக்குறைகள் நீக்கப் பட்டு, ஆழ்வார் பாசுரங்களுக்கு முன்னோர் மொழிந்த முறையில் உண்மைப் பொருள் உரைப்பார் என்று நம்புகிறோம்.

& ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம் & பிப்ரவரி 2008

My book Tamizhmarai thantha panniruvar – Review

அடியேன் எழுதி விகடன் பிரசுரம் மூலம் வெளியாகியிருக்கும் தமிழ்மறை தந்த பன்னிருவர் நூல் விமர்சனத்தை, திருச்சி, புத்தூர் வக்கீல், ஸுதர்சனர் ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் கீழ்க்காணும்படி தந்திருக்கிறார். அவருக்கு அடியேனின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு உங்களுக்கு தருகிறேன்…

அன்பன்
செங்கோட்டை ஸ்ரீராம்.

தமிழ்மறை தந்த பன்னிருவர்

பக்கங்கள்: 192
விலை ரூ.55,
நூலாசிரியர்: செங்கோட்டை ஸ்ரீராம்
விகடன் பிரசுரம் 757, அண்ணா சாலை, சென்னை 2
———————————————————————————–
விசதவாக் சிகாமணிகளான மணவாளமாமுனிகள் அருளிய உபதேச ரத்னமாலையை அனுசரித்து ஆழ்வார்கள் அவதாரம் ஏன் ஏற்பட்டது? பொய்கையாழ்வார் தொடக்காமாக திருமங்கையாழ்வார் ஈறாக ஆழ்வார்கள் வரலாறு, ஆழ்வார்கள் பாசுரங்களைத் தொகுத்துத் தந்த நாதமுனிகள் முதலிய பதினான்கு தலைப்புகளில் ஆழ்வார்களின் வரலாறும் அவர்கள் அருளிய பாடல்களின் பொருட்செறிவும் மிகவும் எளிய இனிய தமிழில் இந்நூலில் தரப்பட்டுள்ளது. ஆழ்வார்களின் திருவுருவப்படங்களைக் கொண்ட வண்ண அட்டைப்படம், ஒவ்வொரு ஆழ்வாரின் வரலாற்றை விளக்கும் அத்தியாயத்தில் அவரது திருவுருவப் படம் ஆகியவற்றோடு உயர்ந்த தாளில் சிறப்பாக அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

நூலாசிரியரின் முகவுரையில், ஑஑திருச்சியில் கல்லூரியில் படித்த காலத்தே என்னுள் எழுந்த ஐயங்களைத் தீர்க்கும் அருமருந்தாக விளங்கியவர் வைணவப் பெரியவர் புத்தூர் ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார்ஒஒ (ஸுதர்ஸனர்) என்று எழுதியுள்ளதும் குறிக்கொள்ளத் தக்கது. விகடன் போன்ற பிரபல பதிப்பகத்தின் ஆதரவில் இந்த நூல் வெளிவந்துள்ளது ஆயிரக்கணக்கான வாசகர்கள் வைணவ ஆழ்வார்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை. நூலாசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியது.

இருபினும் ஒரு விஷயத்தை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. பக்கம் 25ல் பொய்கையாழ்வாரை ஑஑சைவ வைணவ ஒற்றுமை பேசியவர்ஒஒ என்று குறிப்பிட்டுள்ளதும், அதற்குச் சான்றாக அவர் அருளிய முதல் திருவந்தாதியில் அரன் நாரணன் நாமம்(5) என்னும் பாட்டுக்கு ஒரே தெய்வத்துக்கு (அரன் நாரணன் ஆகியவை உனது) பெயர்கள், எருது கருடன் உமது வாகனங்கள், ஆகமமும் வேதமும் உன் பெருமை பறை சாற்றும் நூல்கள், கைலாய மலையும் திருப்பாற்கடலும் உன் இருப்பிடங்கள் என்று பொருள் உரைத்திருப்பது பொருந்தாது.

இப்பாசுரம் சிவனின் தாழ்ச்சியையும் அவனோடு ஒப்பிடும்போது ஸ்ரீமந் நாராயணனின் மேன்மையையும் விளக்குகிறது. அதாவது ஒருவனுக்கு அரன் என்று பெயர், அவனுக்கு ஞானமற்ற எருது வாஹனம், அவனைச் சொல்லும் நூல் வேத விருத்தமான அர்த்தங்களையும் சொல்லும் சைவாகமம். அவன் வசிக்கும் இடம் கடினத் தன்மையுடைய கைலாய மலை. அவனது தொழிலோ அழிப்பது. ஆயுதமோ வேல், அவனுடைய வடிவு எரிக்கும் நெருப்பு போன்றது என்று சிவனுடைய தாழ்ச்சியை வர்ணிக்கிறார்.

பொய்கையாழ்வார் அதுபோல் சிவனுள்ளிட்ட அனைத்துலகையும் படைத்த பரம்பொருளுக்குப் பெயர் நாராயணன், அவனுக்கு வாஹனம் வேதமயமான கருடன். அவனைப் பேசுவது அநாதியான வேதம். அவன் வசிக்கும் இடம் குளிர்ந்த கடல், அவனுக்குத் தொழிலோ அனைவரையும் ரட்சிப்பது, அவனுடைய ஆயுதம் அருளார் திருச்சக்கரம். அவனது வடிவு களைப்புகளை ஆற்றும் கார்மேகம் போன்றது.

இப்படிப்பட்ட இருவரில் அனைத்துலகையும் போலே சிவனும் எம்பெருமானுக்கு சரீரம் என்பதே இப்பாசுரத்தின் உண்மைப் பொருள். ஑஑வியவேன் திருமாலையல்லாது தெய்வம் என்றேத்தேன் வருமாறென் நம்மேல் வினைஒஒ (64) என்று பாடிய ஆழ்வார் மீது தர்காலத்தில் பிரசாரம் செய்யப்பட்டு வரும் சமரசவாதத்தை ஏறிடுவது தகாது.

நூலாசிரியர் ஆழ்வார் சமரசம் பேசுவதாக எடுத்துக்காட்டியிருக்கும் மற்ற பாடல்களுக்கும் எம்பெருமான் சரீரத்தையுடையவன் (சரீரி) ஏனைய உலகமனைத்தும் அவனுக்கு சரீரம் என்ற விசிஷ்டாத்வைத வேதாந்தக் கருத்துக்கு இணங்கப் பொருள் கொள்ள வேண்டும். அடுத்த பதிப்பில் இக்குறைகள் நீக்கப் பட்டு, ஆழ்வார் பாசுரங்களுக்கு முன்னோர் மொழிந்த முறையில் உண்மைப் பொருள் உரைப்பார் என்று நம்புகிறோம்.

& ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம் & பிப்ரவரி 2008

Sinthupatti Perumal koil- near Madurai Thirumangalam





 





 

 





 





 

 





 





 

 





 

மதுரை – திருமங்கலம் – சிந்துபட்டி – தென் திருப்பதி ஸ்ரீவேங்கடாசலபதி திருக்கோயில்இங்கே நீங்கள் காண்பது, மதுரை மாவட்டம், திருமங்கலத்திலிருந்து உசிலம்பட்டி செல்லும் பாதையில் சுமார் 16 கி.மீ தொலைவில் உள்ள சிந்துப்பட்டி ஊரில் உள்ள தென் திருப்பதி என்று போற்றப்படும் ஸ்ரீவேங்கடாசலபதி திருக்கோயில் படங்கள்.
இந்தக் கோயில் மிக அழகாக, புதுமையும் பழமையும் நிறைந்ததாக உள்ளது. அருமையான சுற்றுப் புறம். அழகான சிறிய கோபுரம். கோயிலின் உள்ளே ஒரு கிணறு. பெருமாளுக்கும் தாயாருக்கும் தனித்தனி சன்னிதிகள். சக்கரத்தாழ்வாருக்கு தனியாக சன்னிதி கட்டியிருக்கிறார்கள். அண்மையில் இந்தக் கோயிலுக்கு திருக்குடமுழுக்கு வைபோகம் நன்றாக நடந்தேறியுள்ளது. இங்கு கம்பம் கழுவுதல் என்பது பாரம்பரியமாக நடைபெற்றுவரும் வழிபாடு. அதை கம்பத் திருமஞ்சனம் என்று சொல்வர்.
எல்லாக் கோயில்களிலும் கொடிமரம் கருடக் கொடியோடு திகழும். ஆனால் இந்தப் பெருமாள் கோயிலில் கருப்பண்ண சாமி கொடிமரம் உள்ளது. ஆகவே வரும் மக்களுக்கு பிரசாதமாக விபூதியும் வழங்கப்படுகிறது – இந்தக் கொடிமரத்தின் கீழ்…
நல்ல அமைப்பான வாகனங்கள் இருக்கின்றன. எங்கள் குடும்பத்தின் குலதெய்வமாக விளங்கும் இந்த வேங்கடாசலபதிப் பெருமானை தரிசிப்பதற்காக பிப்ரவரி 10ம் தேதி சென்னையில் இருந்து சிந்துப்பட்டிக்குச் சென்றிருந்தேன். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் இவை…

இனி கோயிலின் வரலாறு…
————————————————————————————————–

இங்கே நீங்கள் காண்பது, சிந்துப்பட்டி கிராமத்தில், கிராம தேவதையாக வழிபடப்படும் கருப்பர் சந்நிதி. இவர், பெருமாள் சந்நிதியைப் பார்த்தவாறு உள்ளார். இவருக்க்கும் பெருமாள் கோவிலுக்கும் தொடர்பு உண்டு என்பது தல வரலாறு.

அடுத்தது, சிந்துப்பட்டி கிராமத்திலுள்ள மிகப்பெரிய ஏரியைக் காத்துக் கொண்டிருக்கும் காவல்தெய்வம்…

————————————————————————————————-
இவர்தான் சிந்துப்பட்டி ஸ்ரீ பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள்…

பெருமாள் கோயில் என்றால், துளசியும் தீர்த்தமும்தானே பிரசாதமாகப் பெறுவோம். கூடவே, விபூதியும் தருகிறார்கள் என்றால்பெறுகின்ற நமக்கு வியப்பாகத்தானே இருக்கும். அது எந்தக் கோயில்? விபூதி தருவதற்கு என்ன காரணம்?
 
அதற்கு நாம் சிந்துப்பட்டி செல்ல வேண்டும். மதுரை மாவட்டம்திருமங்கலம்உசிலம்பட்டி சாலையில், சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது சிந்துப்பட்டி. இங்குள்ள பழைமையான வேங்கடேச பெருமாள் கோயிலில்தான் இந்த விசித்திரம். கோயிலின் வரலாற்றைத் தெரிந்துகொண்டால், இதற்கான விளக்கம் கிடைக்கும்.
 
கி.பி. 12, 13-ஆம் நூற்றாண்டுகளில், தக்காண பீடபூமி மற்றும் தென்பகுதியில் சுல்தான்களின் ஆதிக்கம் இருந்தது. அவர்கள் ஆளுகைக்கு எதிராகத்தான், விஜயநகர சாம்ராஜ்ஜியம் தோன்றியது. நலிவுற்றிருந்த ஆலயங்கள் பல அதன் பிறகு புத்துயிர் பெற்றன.
திருப்பதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சந்திரகிரிக் கோட்டை பகுதி, விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரின் ஆளு கையில் இருந்தது. கி.பி.1530-களில், கிருஷ்ணதேவராயரின் மறைவுக்குப் பிறகு, சுல்தான்கள் படையெடுத்து, சந்திரகிரிக் கோட்டையை தாக்கி சின்னாபின்னப் படுத்தினர்.
 
சந்திரகிரிக்கோட்டை பகுதியில், கஞ்சி தேசத்தைச் சேர்ந்த நாயக்கர் இனத்தவர் ஏராளமாக வசித்தனர். அவர்களில் சிலர் விஜயநகர வம்சாவளியினர். சுல்தான்களால், அவர்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்தனர். அவர்களுடைய இனத்துப் பெண்களை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து, அந்தப்புரத்தில் தள்ளினராம். ஒருமுறைதாங்கள் கௌரவமாகக் கருதும் ஒரு பெண்ணை திருமணம் செய்து தருமாறு சுல்தான் கட்டளையிட, அதற்கு கால அவகாசம் கேட்டுள்ளனர் அந்தக் குடும்பத்தார்.
 
ஆனால் தங்கள் இனத்துப் பெண்கள், சுல்தான்களின் அந்தப்புரத்தில் அவதியுறு வதை விரும்பாத சில குடும்பங்கள், இரவோடு இரவாக நாட்டை விட்டுக் கிளம்பி தெற்கு நோக்கிச் சென்றன. அப்போது, தாங்கள் பூஜித்து வந்த வேங்கடாசலபதி பெருமான், ஸ்ரீதேவிபூதேவி விக்கிரகங்களையும் தங்களுடன் எடுத்துச் சென்றனர். வைகை ஆற்றையும் தாண்டி தொலைவுக்குச் சென்றுவிட வேண்டும் என்பது அவர்கள் எண்ணம். வழியில், ஒரு கிராமத்தில் அன்று இரவு தங்க நேர்ந்தது. தாங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களை ஓர் இடத்தில் வைத்தனர். தங்களுடன் எடுத்து வந்த பூஜைப் பொருட்களைக் கொண்டு, உற்ஸவ விக்கிரகங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பத்திரப்படுத்தி வைத்தனர்.
 
பொழுது விடிந்தது. தொடர்ந்து பயணிக்க வேண்டுமே என்று எண்ணி, பூஜைப் பொருள்கள் வைத்திருந்த பெட்டிகளுடன், பெருமாள் உற்ஸவ விக்கிரகங்களை வைத்திருந்த பெட்டிகளையும் தூக்க முயன்றனர். ஆனால், ஆச்சரியம்அந்தப் பெட்டிகளை கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை! அப்படி ஒரு கனம். வேறு வழியில்லாமல், பெட்டிகளை அங்கேயே வைத்துவிட்டு அங்கேயே தங்கினர்.
 
அன்று இரவுஅந்தக் குழுவிலிருந்த பெரியவர் ஒருவரின் கனவில் பெருமாள் காட்சி தந்தார். ”நீங்கள் யாரும் பயம் கொள்ள வேண்டாம்இந்தப் பகுதி மக்கள் உங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள். அவர்களால் உங்களுக்கு எந்தத் தீங்கும் நேராது. அப்படி ஏதும் நடக்காமல் நான் உங்களைக் காப்பேன். நாளை காலைபெட்டியிலிருந்து ஓர் அங்கவஸ்திரத்தை கருடன் தூக்கிச் சென்று கண்மாய்க்குக் கீழ்ப்புறத்தில் உள்ள ஒரு புளிய மரத்தில் போட்டுவிட்டு, மூன்று முறை குரல் எழுப்பிச் செல்லும். அந்த இடத்தில் என் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்புங்கள்…’என்று சொல்லி மறைந்தார். கண்விழித்த பெரியவர், தனது கனவு பற்றி அருகில் இருந்தவர்களிடம் சொல்ல, எல்லோரும் பெருமாளின் திருவருளை வியந்து போற்றி விடியலுக்காகக் காத்திருந்தனர்.
 
 
மறுநாள் காலையில், கனவில் பெருமாள் சொன்னது போல், வானத்தில் வட்ட மிட்ட கருடன், பெட்டியில் இருந்த அங்கவஸ்திரத்தைத் தூக்கிச் சென்று, சற்று தொலைவில் இருந்த புளிய மரத்தில் போட்டது. அந்த இடத்திலேயே விக்கிரகத்தை வைத்து, தேவியர் சகிதராக பெருமாள் மூலவரையும் பிரதிஷ்டை செய்து, கோயிலும் எழுப்பினர்.
 
புளியம்பழத்தை தெலுங்கில் சித்தப்பண்டு என்பர். புளிய மரத்தின் அருகே கோயில் அமைந்ததாலும், அங்கவஸ்திரம் புளியமரத்தில் விழுந்து இடத்தைக் காட்டிக் கொடுத்ததாலும், அந்த இடத்தை சித்தப்பண்டூர் என்றார்களாம். அதுவே பின்னாளில் சிந்துப்பட்டி ஆனதாம். மேலும், இங்குள்ளோர் பெருமாள் மீது சிந்துப் பாடல்கள் நிறைய பாடியிருக் கிறார்களாம். அதனாலும் சிந்துப்பட்டி என்று பெயர் வந்திருக்கலாம் என்கிறார்கள்.
 
இந்தக் கோயிலில் மூலவர் ஸ்ரீவேங்கடாசலபதி. தாயார் அலர்மேல் மங்கையாக அருள்கிறாள். திருப்பதியில் உள்ளது போன்ற அமைப்புதான். ஆனால் பெருமாள், ஸ்ரீதேவிபூதேவி என உபயநாச்சிமாரோடு காட்சி தருகிறார்.
 
கொடிமரமும் விபூதி பிரசாதமும்
கோயிலின் கொடிமரம் வித்தியாசமாக அமைந்துள்ளது. பொதுவாக கருடக் கொடியுடனும், கொடி மர உச்சியில் கூப்பிய கரங்களுடன் கருடன் இருப்பதுபோலும்தான் கொடிமரம் இருக்கும். பிரம்மோற்ஸவம் போன்ற உற்ஸவக் காலங்களில்தான் கொடிமரத்துக்கு விசேஷ பூஜைகள் நடக்கும்.
 
ஆனால் இங்கேகொடிமரத்தில் கருப்பண்ணசாமி ஆவாஹனம் செய்யப்பட்டுள்ளார். அதனால், இந்தக் கொடிமரத்தின் கீழே விபூதி பிரசாதம்தான் கொடுக்கப்படுகிறது. பக்தர்கள் இந்தக் கொடிமரத்துக்கு திருமஞ்சனம் செய்விப்பதாக வேண்டிக் கொண்டு, தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறப் பெறுகிறார்கள். இதற்கு கம்பம் கழுவுதல்என்று பெயர். விளக்கெண்ணெய் மற்றும் தயிர் கலந்து, கொடிமரத்தின் மேல் உச்சியில் இருந்து தடவி, அதற்கு திருமஞ்சனம் நடக்கிறது. பிறகு, கொடி மரத்துக்கு மிகப் பெரிய வஸ்திரம் சார்த்தி, விபூதி அர்ச்சனை செய்யப்படுகிறது. அதுவே பிரசாதமாக வழங்கப்படுகிறது.
 
ஊருக்குள் நுழையும்போது, கருப்பர் சந்நிதி ஒன்றைக் காண்கிறோம். அவருக்கு முதலில் பூஜை செய்துவிட்டு, இங்கு வருவார்களாம். அவரே இவர்களுக்கு காவல் தெய்வமாம். இந்தக் கொடிமரத்துக்கும் அந்தக் கருப்பண்ணசாமிக்கும் தொடர்பு உண்டாம்!
 
கோயில் சந்நிதிகள்
கொடிமரத்துக்குப் பின், கருடாழ்வார் சந்நிதி. எதிரே, ஸ்ரீதேவிபூதேவி உடன் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள். முன்மண்டபத்தின் வெளிப்புறம்அலர்மேல்மங்கை தாயாருக்கு தனி சந்நிதி. அழகான ஊஞ்சல் மண்டபம்உற்ஸவ மண்டபம்! பிராகாரத்தில் அண்மையில் புதிதாக சக்கரத்தாழ்வாருக்கு சந்நிதி அமைத்திருக்கின்றனர். திருத்தமான விக்கிரகம்சக்கரத்தாழ்வாரும் யோக நரசிம்மரும் அருள்புரிகின்றனர். பிராகாரம் சுற்றி வரும்போது, வாகன மண்டபத்தைக் காண்கிறோம். ஒவ்வொரு சமூகத்தவரும் ஒவ்வொரு வாகன உற்ஸவத்தை நிகழ்த்துகிறார்கள்.
 
உற்ஸவங்கள்
இந்தக் கோயிலில், வைகாசி பிரம்மோற்ஸவம், ஆடிப் பெருந்திருவிழா, ஆவணி மாத கிருஷ்ணன் பிறப்பு, புரட்டாசி சனிக்கிழமைகள், கார்த்திகை தீபத் திருவிழா, மார்கழி மாத சிறப்பு வழிபாடுகள், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு, தைமாதப் பிறப்பு (பொங்கல் சிறப்பு விழா) ஆகியவை முக்கியமான உற்ஸவங்கள்.
 
வைணவக் கோயிலான இங்கே மகிஷாசுரவதம் நிகழ்ச்சி, வித்தியாசமானது. இங்கே நடைபெறும் கோமாதா சிறப்பு வழிபாடு, கிராமத்துடன் இயைந்த வாழ்க்கையைக் காட்டுகிறது.
 
சுமார் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயில். பன்னிரண்டு பட்டி நாயக்கர்களும் வழிபட்டு, நிர்வாகம் செய்துள்ளனர். இந்தக் கோயில் தற்போது, தமிழக அரசின் அறநிலையத் துறையின் மேற்பார்வையில் உள்ளது. அரசு நியமனம் செய்த அறங்காவலர் குழு கோயில் நிர்வாகத்தை கவனித்து வருகிறது.
 
திருப்பதி வேங்கடாசலபதிக்கு நேர்ச்சை செய்வதாக வேண்டிக் கொள்பவர்கள், ஏதாவது அசௌகரியத்தால் திருப்பதி செல்ல முடியாமல் போனால், அதை இங்கே நிறைவேற்றிக் கொள்ளலாம். பெருமாளும் திருப்பதி பகுதியில் இருந்து வந்தவர் என்பதால், இந்தத் தலம் தென்திருப்பதி என்றே போற்றப்படுகிறது.
இந்தக் கோயிலை, வானமாமலை ஜீயர் போற்றி, வணங்கி அபிமானித்துள்ளார்.
பெருமாளை அங்கப் பிரதட்சிணம் செய்து, இந்திரன் சாப விமோசனம் பெற்றதால், இங்கே அங்கப்பிரதட்சிணம் செய்து, தங்கள் பாவங்கள் நீங்க பிரார்த்திக்கிறார்கள் பக்தர்கள்.
கம்பத்துக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால், குழந்தைப் பேறு உண்டாகும்; தடைபெற்ற திருமணம் நடந்தேறும்; தொலைந்துபோன பொருள்கள் உடனே கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு.
கோமாதா வழிபாடு செய்து வழக்கில் வெற்றி, சந்தான பாக்கியம் ஆகியவற்றைப் பெறுகிறார்கள் பக்தர்கள்.
இந்தக் கோயிலில் மற்றொரு சிறப்பம்சம்புதுமணத் தம்பதியர், அந்த வருடத்தில் வரும் விஜயதசமித் திருநாளில் இங்கே வந்து, நோன்பு எடுத்து, அர்ச்சனை செய்து, பெருமாள், தாயார் அருள்பெற்றுச் செல்வதுதான்! இதை மகர்நோன்பு என்கிறார்கள். இந்தப் பழக்கம் இப்போதும் பரம்பரையாக இந்தப் பகுதிகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.



தொடர்புக்கு:ராமானுஜம் (அர்ச்சகர்) 97918 35580 

பின்குறிப்பு: மீண்டும் கடந்த 2010-மார்ச்-29ம் தேதி சிந்துப்பட்டி கோயிலுக்குச் சென்றேன். அங்கே வைகாசி பிரம்மோற்ஸவம் நடந்து எட்டு ஆண்டுகள் ஆகிறதாம். ஊரில் ஒற்றுமையுடன் நடந்து வந்த திருவிழாவுக்கு யார் கண் பட்டதோ..?  பிரிவினைகளால் பிரம்மோற்ஸவம் நடக்காமல் உள்ளதாம். நாயக்கர் சமுதாயம் மனது வைத்து ஒன்று சேர்ந்தால், மீண்டும் இந்த பிரம்மோற்ஸவம் நடக்க வாய்ப்பு உண்டு. கடவுளுக்கு உற்ஸவம் நடத்த மனிதன்தான் மனது வைக்க வேண்டும்



கட்டுரை மற்றும் படங்கள்: செங்கோட்டை ஸ்ரீராம்.

Sinthupatti Perumal koil- near Madurai Thirumangalam





























மதுரை – திருமங்கலம் – சிந்துபட்டி – தென் திருப்பதி ஸ்ரீவேங்கடாசலபதி திருக்கோயில்இங்கே நீங்கள் காண்பது, மதுரை மாவட்டம், திருமங்கலத்திலிருந்து உசிலம்பட்டி செல்லும் பாதையில் சுமார் 16 கி.மீ தொலைவில் உள்ள சிந்துப்பட்டி ஊரில் உள்ள தென் திருப்பதி என்று போற்றப்படும் ஸ்ரீவேங்கடாசலபதி திருக்கோயில் படங்கள்.
இந்தக் கோயில் மிக அழகாக, புதுமையும் பழமையும் நிறைந்ததாக உள்ளது. அருமையான சுற்றுப் புறம். அழகான சிறிய கோபுரம். கோயிலின் உள்ளே ஒரு கிணறு. பெருமாளுக்கும் தாயாருக்கும் தனித்தனி சன்னிதிகள். சக்கரத்தாழ்வாருக்கு தனியாக சன்னிதி கட்டியிருக்கிறார்கள். அண்மையில் இந்தக் கோயிலுக்கு திருக்குடமுழுக்கு வைபோகம் நன்றாக நடந்தேறியுள்ளது. இங்கு கம்பம் கழுவுதல் என்பது பாரம்பரியமாக நடைபெற்றுவரும் வழிபாடு. அதை கம்பத் திருமஞ்சனம் என்று சொல்வர்.
எல்லாக் கோயில்களிலும் கொடிமரம் கருடக் கொடியோடு திகழும். ஆனால் இந்தப் பெருமாள் கோயிலில் கருப்பண்ண சாமி கொடிமரம் உள்ளது. ஆகவே வரும் மக்களுக்கு பிரசாதமாக விபூதியும் வழங்கப்படுகிறது – இந்தக் கொடிமரத்தின் கீழ்…
நல்ல அமைப்பான வாகனங்கள் இருக்கின்றன. எங்கள் குடும்பத்தின் குலதெய்வமாக விளங்கும் இந்த வேங்கடாசலபதிப் பெருமானை தரிசிப்பதற்காக பிப்ரவரி 10ம் தேதி சென்னையில் இருந்து சிந்துப்பட்டிக்குச் சென்றிருந்தேன். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் இவை…

இனி கோயிலின் வரலாறு…
————————————————————————————————–

இங்கே நீங்கள் காண்பது, சிந்துப்பட்டி கிராமத்தில், கிராம தேவதையாக வழிபடப்படும் கருப்பர் சந்நிதி. இவர், பெருமாள் சந்நிதியைப் பார்த்தவாறு உள்ளார். இவருக்க்கும் பெருமாள் கோவிலுக்கும் தொடர்பு உண்டு என்பது தல வரலாறு.

அடுத்தது, சிந்துப்பட்டி கிராமத்திலுள்ள மிகப்பெரிய ஏரியைக் காத்துக் கொண்டிருக்கும் காவல்தெய்வம்…

————————————————————————————————-
இவர்தான் சிந்துப்பட்டி ஸ்ரீ பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள்…

பெருமாள் கோயில் என்றால், துளசியும் தீர்த்தமும்தானே பிரசாதமாகப் பெறுவோம். கூடவே, விபூதியும் தருகிறார்கள் என்றால்பெறுகின்ற நமக்கு வியப்பாகத்தானே இருக்கும். அது எந்தக் கோயில்? விபூதி தருவதற்கு என்ன காரணம்?


அதற்கு நாம் சிந்துப்பட்டி செல்ல வேண்டும். மதுரை மாவட்டம்திருமங்கலம்உசிலம்பட்டி சாலையில், சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது சிந்துப்பட்டி. இங்குள்ள பழைமையான வேங்கடேச பெருமாள் கோயிலில்தான் இந்த விசித்திரம். கோயிலின் வரலாற்றைத் தெரிந்துகொண்டால், இதற்கான விளக்கம் கிடைக்கும்.


கி.பி. 12, 13-ஆம் நூற்றாண்டுகளில், தக்காண பீடபூமி மற்றும் தென்பகுதியில் சுல்தான்களின் ஆதிக்கம் இருந்தது. அவர்கள் ஆளுகைக்கு எதிராகத்தான், விஜயநகர சாம்ராஜ்ஜியம் தோன்றியது. நலிவுற்றிருந்த ஆலயங்கள் பல அதன் பிறகு புத்துயிர் பெற்றன.

திருப்பதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சந்திரகிரிக் கோட்டை பகுதி, விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரின் ஆளு கையில் இருந்தது. கி.பி.1530-களில், கிருஷ்ணதேவராயரின் மறைவுக்குப் பிறகு, சுல்தான்கள் படையெடுத்து, சந்திரகிரிக் கோட்டையை தாக்கி சின்னாபின்னப் படுத்தினர்.


சந்திரகிரிக்கோட்டை பகுதியில், கஞ்சி தேசத்தைச் சேர்ந்த நாயக்கர் இனத்தவர் ஏராளமாக வசித்தனர். அவர்களில் சிலர் விஜயநகர வம்சாவளியினர். சுல்தான்களால், அவர்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்தனர். அவர்களுடைய இனத்துப் பெண்களை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து, அந்தப்புரத்தில் தள்ளினராம். ஒருமுறைதாங்கள் கௌரவமாகக் கருதும் ஒரு பெண்ணை திருமணம் செய்து தருமாறு சுல்தான் கட்டளையிட, அதற்கு கால அவகாசம் கேட்டுள்ளனர் அந்தக் குடும்பத்தார்.


ஆனால் தங்கள் இனத்துப் பெண்கள், சுல்தான்களின் அந்தப்புரத்தில் அவதியுறு வதை விரும்பாத சில குடும்பங்கள், இரவோடு இரவாக நாட்டை விட்டுக் கிளம்பி தெற்கு நோக்கிச் சென்றன. அப்போது, தாங்கள் பூஜித்து வந்த வேங்கடாசலபதி பெருமான், ஸ்ரீதேவிபூதேவி விக்கிரகங்களையும் தங்களுடன் எடுத்துச் சென்றனர். வைகை ஆற்றையும் தாண்டி தொலைவுக்குச் சென்றுவிட வேண்டும் என்பது அவர்கள் எண்ணம். வழியில், ஒரு கிராமத்தில் அன்று இரவு தங்க நேர்ந்தது. தாங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களை ஓர் இடத்தில் வைத்தனர். தங்களுடன் எடுத்து வந்த பூஜைப் பொருட்களைக் கொண்டு, உற்ஸவ விக்கிரகங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பத்திரப்படுத்தி வைத்தனர்.


பொழுது விடிந்தது. தொடர்ந்து பயணிக்க வேண்டுமே என்று எண்ணி, பூஜைப் பொருள்கள் வைத்திருந்த பெட்டிகளுடன், பெருமாள் உற்ஸவ விக்கிரகங்களை வைத்திருந்த பெட்டிகளையும் தூக்க முயன்றனர். ஆனால், ஆச்சரியம்அந்தப் பெட்டிகளை கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை! அப்படி ஒரு கனம். வேறு வழியில்லாமல், பெட்டிகளை அங்கேயே வைத்துவிட்டு அங்கேயே தங்கினர்.


அன்று இரவுஅந்தக் குழுவிலிருந்த பெரியவர் ஒருவரின் கனவில் பெருமாள் காட்சி தந்தார். ”நீங்கள் யாரும் பயம் கொள்ள வேண்டாம்இந்தப் பகுதி மக்கள் உங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள். அவர்களால் உங்களுக்கு எந்தத் தீங்கும் நேராது. அப்படி ஏதும் நடக்காமல் நான் உங்களைக் காப்பேன். நாளை காலைபெட்டியிலிருந்து ஓர் அங்கவஸ்திரத்தை கருடன் தூக்கிச் சென்று கண்மாய்க்குக் கீழ்ப்புறத்தில் உள்ள ஒரு புளிய மரத்தில் போட்டுவிட்டு, மூன்று முறை குரல் எழுப்பிச் செல்லும். அந்த இடத்தில் என் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்புங்கள்…’என்று சொல்லி மறைந்தார். கண்விழித்த பெரியவர், தனது கனவு பற்றி அருகில் இருந்தவர்களிடம் சொல்ல, எல்லோரும் பெருமாளின் திருவருளை வியந்து போற்றி விடியலுக்காகக் காத்திருந்தனர்.


மறுநாள் காலையில், கனவில் பெருமாள் சொன்னது போல், வானத்தில் வட்ட மிட்ட கருடன், பெட்டியில் இருந்த அங்கவஸ்திரத்தைத் தூக்கிச் சென்று, சற்று தொலைவில் இருந்த புளிய மரத்தில் போட்டது. அந்த இடத்திலேயே விக்கிரகத்தை வைத்து, தேவியர் சகிதராக பெருமாள் மூலவரையும் பிரதிஷ்டை செய்து, கோயிலும் எழுப்பினர்.


புளியம்பழத்தை தெலுங்கில் சித்தப்பண்டு என்பர். புளிய மரத்தின் அருகே கோயில் அமைந்ததாலும், அங்கவஸ்திரம் புளியமரத்தில் விழுந்து இடத்தைக் காட்டிக் கொடுத்ததாலும், அந்த இடத்தை சித்தப்பண்டூர் என்றார்களாம். அதுவே பின்னாளில் சிந்துப்பட்டி ஆனதாம். மேலும், இங்குள்ளோர் பெருமாள் மீது சிந்துப் பாடல்கள் நிறைய பாடியிருக் கிறார்களாம். அதனாலும் சிந்துப்பட்டி என்று பெயர் வந்திருக்கலாம் என்கிறார்கள்.


இந்தக் கோயிலில் மூலவர் ஸ்ரீவேங்கடாசலபதி. தாயார் அலர்மேல் மங்கையாக அருள்கிறாள். திருப்பதியில் உள்ளது போன்ற அமைப்புதான். ஆனால் பெருமாள், ஸ்ரீதேவிபூதேவி என உபயநாச்சிமாரோடு காட்சி தருகிறார்.


கொடிமரமும் விபூதி பிரசாதமும்

கோயிலின் கொடிமரம் வித்தியாசமாக அமைந்துள்ளது. பொதுவாக கருடக் கொடியுடனும், கொடி மர உச்சியில் கூப்பிய கரங்களுடன் கருடன் இருப்பதுபோலும்தான் கொடிமரம் இருக்கும். பிரம்மோற்ஸவம் போன்ற உற்ஸவக் காலங்களில்தான் கொடிமரத்துக்கு விசேஷ பூஜைகள் நடக்கும்.


ஆனால் இங்கேகொடிமரத்தில் கருப்பண்ணசாமி ஆவாஹனம் செய்யப்பட்டுள்ளார். அதனால், இந்தக் கொடிமரத்தின் கீழே விபூதி பிரசாதம்தான் கொடுக்கப்படுகிறது. பக்தர்கள் இந்தக் கொடிமரத்துக்கு திருமஞ்சனம் செய்விப்பதாக வேண்டிக் கொண்டு, தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறப் பெறுகிறார்கள். இதற்கு கம்பம் கழுவுதல்என்று பெயர். விளக்கெண்ணெய் மற்றும் தயிர் கலந்து, கொடிமரத்தின் மேல் உச்சியில் இருந்து தடவி, அதற்கு திருமஞ்சனம் நடக்கிறது. பிறகு, கொடி மரத்துக்கு மிகப் பெரிய வஸ்திரம் சார்த்தி, விபூதி அர்ச்சனை செய்யப்படுகிறது. அதுவே பிரசாதமாக வழங்கப்படுகிறது.


ஊருக்குள் நுழையும்போது, கருப்பர் சந்நிதி ஒன்றைக் காண்கிறோம். அவருக்கு முதலில் பூஜை செய்துவிட்டு, இங்கு வருவார்களாம். அவரே இவர்களுக்கு காவல் தெய்வமாம். இந்தக் கொடிமரத்துக்கும் அந்தக் கருப்பண்ணசாமிக்கும் தொடர்பு உண்டாம்!


கோயில் சந்நிதிகள்

கொடிமரத்துக்குப் பின், கருடாழ்வார் சந்நிதி. எதிரே, ஸ்ரீதேவிபூதேவி உடன் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள். முன்மண்டபத்தின் வெளிப்புறம்அலர்மேல்மங்கை தாயாருக்கு தனி சந்நிதி. அழகான ஊஞ்சல் மண்டபம்உற்ஸவ மண்டபம்! பிராகாரத்தில் அண்மையில் புதிதாக சக்கரத்தாழ்வாருக்கு சந்நிதி அமைத்திருக்கின்றனர். திருத்தமான விக்கிரகம்சக்கரத்தாழ்வாரும் யோக நரசிம்மரும் அருள்புரிகின்றனர். பிராகாரம் சுற்றி வரும்போது, வாகன மண்டபத்தைக் காண்கிறோம். ஒவ்வொரு சமூகத்தவரும் ஒவ்வொரு வாகன உற்ஸவத்தை நிகழ்த்துகிறார்கள்.


உற்ஸவங்கள்

இந்தக் கோயிலில், வைகாசி பிரம்மோற்ஸவம், ஆடிப் பெருந்திருவிழா, ஆவணி மாத கிருஷ்ணன் பிறப்பு, புரட்டாசி சனிக்கிழமைகள், கார்த்திகை தீபத் திருவிழா, மார்கழி மாத சிறப்பு வழிபாடுகள், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு, தைமாதப் பிறப்பு (பொங்கல் சிறப்பு விழா) ஆகியவை முக்கியமான உற்ஸவங்கள்.


வைணவக் கோயிலான இங்கே மகிஷாசுரவதம் நிகழ்ச்சி, வித்தியாசமானது. இங்கே நடைபெறும் கோமாதா சிறப்பு வழிபாடு, கிராமத்துடன் இயைந்த வாழ்க்கையைக் காட்டுகிறது.


சுமார் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயில். பன்னிரண்டு பட்டி நாயக்கர்களும் வழிபட்டு, நிர்வாகம் செய்துள்ளனர். இந்தக் கோயில் தற்போது, தமிழக அரசின் அறநிலையத் துறையின் மேற்பார்வையில் உள்ளது. அரசு நியமனம் செய்த அறங்காவலர் குழு கோயில் நிர்வாகத்தை கவனித்து வருகிறது.


திருப்பதி வேங்கடாசலபதிக்கு நேர்ச்சை செய்வதாக வேண்டிக் கொள்பவர்கள், ஏதாவது அசௌகரியத்தால் திருப்பதி செல்ல முடியாமல் போனால், அதை இங்கே நிறைவேற்றிக் கொள்ளலாம். பெருமாளும் திருப்பதி பகுதியில் இருந்து வந்தவர் என்பதால், இந்தத் தலம் தென்திருப்பதி என்றே போற்றப்படுகிறது.

இந்தக் கோயிலை, வானமாமலை ஜீயர் போற்றி, வணங்கி அபிமானித்துள்ளார்.

பெருமாளை அங்கப் பிரதட்சிணம் செய்து, இந்திரன் சாப விமோசனம் பெற்றதால், இங்கே அங்கப்பிரதட்சிணம் செய்து, தங்கள் பாவங்கள் நீங்க பிரார்த்திக்கிறார்கள் பக்தர்கள்.

கம்பத்துக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால், குழந்தைப் பேறு உண்டாகும்; தடைபெற்ற திருமணம் நடந்தேறும்; தொலைந்துபோன பொருள்கள் உடனே கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு.

கோமாதா வழிபாடு செய்து வழக்கில் வெற்றி, சந்தான பாக்கியம் ஆகியவற்றைப் பெறுகிறார்கள் பக்தர்கள்.

இந்தக் கோயிலில் மற்றொரு சிறப்பம்சம்புதுமணத் தம்பதியர், அந்த வருடத்தில் வரும் விஜயதசமித் திருநாளில் இங்கே வந்து, நோன்பு எடுத்து, அர்ச்சனை செய்து, பெருமாள், தாயார் அருள்பெற்றுச் செல்வதுதான்! இதை மகர்நோன்பு என்கிறார்கள். இந்தப் பழக்கம் இப்போதும் பரம்பரையாக இந்தப் பகுதிகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.



தொடர்புக்கு:ராமானுஜம் (அர்ச்சகர்) 97918 35580 

பின்குறிப்பு: மீண்டும் கடந்த 2010-மார்ச்-29ம் தேதி சிந்துப்பட்டி கோயிலுக்குச் சென்றேன். அங்கே வைகாசி பிரம்மோற்ஸவம் நடந்து எட்டு ஆண்டுகள் ஆகிறதாம். ஊரில் ஒற்றுமையுடன் நடந்து வந்த திருவிழாவுக்கு யார் கண் பட்டதோ..?  பிரிவினைகளால் பிரம்மோற்ஸவம் நடக்காமல் உள்ளதாம். நாயக்கர் சமுதாயம் மனது வைத்து ஒன்று சேர்ந்தால், மீண்டும் இந்த பிரம்மோற்ஸவம் நடக்க வாய்ப்பு உண்டு. கடவுளுக்கு உற்ஸவம் நடத்த மனிதன்தான் மனது வைக்க வேண்டும்



கட்டுரை மற்றும் படங்கள்: செங்கோட்டை ஸ்ரீராம்.

Exit mobile version