Thirumayam- near pudukkoottai, Tamil Nadu. Perumal Koil
புத்தகம் -1857 ல் தமிழ்மண்
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை – 600 002.
புத்தகத்தின் ஆசிரியர் குறிப்பிலிருந்து…
சுதந்திரக் காற்றை சுவாசித்து நாம் சுகமாக வாழ்கிறோம் என்றால், அதற்குக் காரணம் நம் முன்னோர் செய்த தியாகம்தான். நிஜாம் மற்றும் நவாபுகளின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பதவி மோகம், வரி வசூலிப்பதில் உண்டான போட்டி, சுதேச ஆட்சியாளர்களிடையே இருந்த ஒற்றுமையற்ற சூழல் போன்றவை, வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயருக்கு சாதகமாகப் போயிற்று.அதன்பின் இருநூறு ஆண்டுகள் நம் நாடு அடிமைப்பட்டு மக்கள் அளவற்ற துன்பங்களுக்கு ஆளாக நேர்ந்தது. இவை நமக்கு இந்திய வரலாறு கூறும் விஷயங்கள்.
ஆங்கிலேயருக்கு எதிரான 1857 முதல் சுதந்திரப் போர் சிப்பாய் கலகமே என்றும், இல்லை அது ஒரு தேசிய எழுச்சி என்றும், இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. இவற்றை மையமாகக் கொண்டு, 1857-ல் தமிழகத்தில் ஏற்பட்ட சுதந்திர எழுச்சியையும்,அதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பூலித்தேவன் என்ற தமிழக பாளையக்காரர் எழுப்பிய முதல் சுதந்திரப் போர்க்குரலையும், அதனைத் தொடர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரர்களின் செயல்களையும் ஆவணங்களின் குறிப்புகளோடு இந்நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.
நவாபுகளுக்குள் உண்டான காழ்ப்பு உணர்ச்சியால், எப்படி நம் நாடு ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டது, வாணிபம் செய்யவந்தவர்கள் நம்மை ஆட்சி செய்ய நேர்ந்தது எப்படி போன்ற பல வரலாற்றுச் செய்திகளை நூலாசிரியர் அழகாகத் தொகுத்துள்ளார். நம் நாட்டின் சுதந்திர வரலாற்றில், சரியாகப் பதிவாகாமல் போய்விட்ட 1857-ம் ஆண்டு நிகழ்வுகளில் தமிழகத்தின் பங்கினையும், புதிய பரிமாணத்தோடு சில சம்பவங்களையும் நூலாசிரியர் நம் சிந்தனைக்குக் கொண்டு வந்திருக்கிறார்.வரலாற்றுப் பதிவுகளும் அவை சார்ந்த விஷயங்களும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை. இந்த நூல் வரலாற்றுப் பதிவினைத் தெரிவிக்கும் தகவல் பெட்டகமாகவும்,வீர உணர்வை வெளிப்படுத்தும் தூண்டு கோலாகவும் அமைந்துள்ளது.
நூலாசிரியர் குறிப்பிலிருந்து …
கலகமா? போராட்டமா?
ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் வீர வரலாறு மிக முக்கியம். நம் நாட்டுக்கும் அத்தகைய வரலாறு இருக்கிறது. காந்திஜியின் வருகைக்குப் பிறகு சாத்வீக முறையில் நாம் சுதந்திரம் பெற்றோம் என்றாலும், அதற்கு முன் நம் நாட்டில் நடைபெற்ற ஆயுதப் போராட்டங்கள் சுதந்திரத்தின் வலியை உணரச் செய்பவை. அந்த விடுதலைப் போராட்டத்தை நம் இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் இந்த நூலைத் தொகுக்க முயன்றேன். இந்த நூலில், ஆயுதம் தாங்கிய நம் நாட்டின் விடுதலைப் போரை நான்கு பகுதிகளாக்கி அலசியுள்ளேன்.
முதல் பகுதியில் இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வை மிகப் பெரிய அளவில் கிளப்பிய பூலித்தேவன் வரலாறு, அவனுடைய வீரம், அவன் பிரிட்டிஷாரை எதிர்த்த விதம், மக்கள் அதற்கு அளித்த ஆதரவு ஆகியவற்றைத் தந்துள்ளேன்.அடுத்த பகுதியில், பூலித்தேவனுக்குப் பிறகு தொடர்ந்த ஆங்கில எதிர்ப்புப் போர்களில் கட்டபொம்மன், மருது சகோதரர்கள், 1806-ல் நடைபெற்ற வேலூர் சிப்பாய்களின் புரட்சி போன்றவற்றைத் தந்துள்ளேன்.
1857-ல் வடக்கே சிப்பாய்களை முதன்மையாக வைத்து நடந்த பிரிட்டிஷ் எதிர்ப்புப் போராட்டம், அதன் தோற்றுவாய் என்ன என்பதை அலசியுள்ளேன். நிறைவுப் பகுதியில், அதே காலகட்டத்தில், தமிழகத்தின் முக்கியஇடங்களில் பொதுமக்களிடையே இருந்த பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வுமற்றும் தமிழகத்து மக்களின் போராட்ட பங்களிப்பு ஆகியவற்றை ஆங்கிலேய அரசே ஏற்படுத்திய ஆவணங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்துத் தொகுத்துள்ளேன். இவற்றை நீங்கள் ஊன்றிப் படித்தால், பொதுமக்கள் பங்களிப்பு 1857காலகட்டத்தில் எப்படி இருந்தது என்பதையும், அதனால் இதை சிப்பாய்கலகம் என்று சொல்லி சிறுமைப்படுத்தக்கூடாது என்பதையும்உணர்வீர்கள். அதுவே இந்த நூல் மூலம் நான் சொல்ல வந்த செய்தி!
அன்பன்,
செங்கோட்டை ஸ்ரீராம்
https://www.viruba.com/atotalbooks.aspx?id=663
மகா சுதர்சன வழிபாடு – புத்தகம்
வணக்கம்
அடியேன் எழுதி விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள மஹா சுதர்சன வழிபாடு புத்தகம் பற்றிய தகவலை இங்குக் கொடுத்துள்ளேன்.
இந்தப் புத்தகத்தைப் பற்றி …
உலகம் முழுவதும் முருக வழிபாடு பரவியுள்ளதுபோல் முருகனின் ஆயுதமான வேல் வழிபாடும் பரவியுள்ளது. வேல் வழிபாடு என்பது, முருக வழிபாட்டின் ஓர் அங்கம்.
உலகைக் காக்கும் கடவுளாக வேதங்கள் போற்றும் விஷ்ணுவின் கையில் உள்ள சக்கரத்தை வழிபடுவது விஷ்ணு வழிபாட்டின் ஓர் அங்கம். இதுவும் தொன்றுதொட்டு வந்துள்ளது என்பதற்கான உதாரணங்கள், வேதங்கள், ஆழ்வார் பாசுரங்கள் போன்றவற்றிலிருந்து தரப்பட்டுள்ளன. ஆண்டவன் கை ஆயுதம் எதற்காக என்பதையும், அதை வழிபடும் முறையையும் இந்நூல் எளிதாக விளக்குகிறது.
அம்பரீஷ மன்னனுக்கு உதவியது; அர்ஜுனன் உயிரைக் காத்தது, கஜேந்திரன் என்ற யானையின் உயிரைக் காத்தது உள்ளிட்ட சக்கரத்தாழ்வார் தொடர்புடைய கதைகள்… கும்பகோணம் சக்கரபாணி கோயில்; திருமோகூர் சக்கரத்தாழ்வார் கோயில் உள்ளிட்ட சுதர்ஸன வழிபாடுள்ள முக்கியத் திருத்தலங்கள்… சுதர்ஸனரை வழிபடும் முறை, சுதர்ஸன ஹோமம் செய்வதன் பலன், சுதர்ஸனரின் மகிமை, தேசிகர் அருளிய சுதர்ஸன அஷ்டகம்; சுதர்ஸன கவசம்; சுதர்ஸன ஷட்கம் போன்ற சுதர்ஸனர் சுலோகங்கள், தோத்திரங்கள் என அனைத்தும் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
விலை: ரூ.35 முப்பத்தி ஐந்து மட்டும்
பக்கங்கள் : 96 ௯௬
புத்தகத்திலுள்ள ஆசிரியர் குறிப்பிலிருந்து…
புத்தகம் -1857 ல் தமிழ்மண்
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை – 600 002.
புத்தகத்தின் ஆசிரியர் குறிப்பிலிருந்து…
சுதந்திரக் காற்றை சுவாசித்து நாம் சுகமாக வாழ்கிறோம் என்றால், அதற்குக் காரணம் நம் முன்னோர் செய்த தியாகம்தான். நிஜாம் மற்றும் நவாபுகளின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பதவி மோகம், வரி வசூலிப்பதில் உண்டான போட்டி, சுதேச ஆட்சியாளர்களிடையே இருந்த ஒற்றுமையற்ற சூழல் போன்றவை, வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயருக்கு சாதகமாகப் போயிற்று.அதன்பின் இருநூறு ஆண்டுகள் நம் நாடு அடிமைப்பட்டு மக்கள் அளவற்ற துன்பங்களுக்கு ஆளாக நேர்ந்தது. இவை நமக்கு இந்திய வரலாறு கூறும் விஷயங்கள்.
ஆங்கிலேயருக்கு எதிரான 1857 முதல் சுதந்திரப் போர் சிப்பாய் கலகமே என்றும், இல்லை அது ஒரு தேசிய எழுச்சி என்றும், இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. இவற்றை மையமாகக் கொண்டு, 1857-ல் தமிழகத்தில் ஏற்பட்ட சுதந்திர எழுச்சியையும்,அதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பூலித்தேவன் என்ற தமிழக பாளையக்காரர் எழுப்பிய முதல் சுதந்திரப் போர்க்குரலையும், அதனைத் தொடர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரர்களின் செயல்களையும் ஆவணங்களின் குறிப்புகளோடு இந்நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.
நவாபுகளுக்குள் உண்டான காழ்ப்பு உணர்ச்சியால், எப்படி நம் நாடு ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டது, வாணிபம் செய்யவந்தவர்கள் நம்மை ஆட்சி செய்ய நேர்ந்தது எப்படி போன்ற பல வரலாற்றுச் செய்திகளை நூலாசிரியர் அழகாகத் தொகுத்துள்ளார். நம் நாட்டின் சுதந்திர வரலாற்றில், சரியாகப் பதிவாகாமல் போய்விட்ட 1857-ம் ஆண்டு நிகழ்வுகளில் தமிழகத்தின் பங்கினையும், புதிய பரிமாணத்தோடு சில சம்பவங்களையும் நூலாசிரியர் நம் சிந்தனைக்குக் கொண்டு வந்திருக்கிறார்.வரலாற்றுப் பதிவுகளும் அவை சார்ந்த விஷயங்களும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை. இந்த நூல் வரலாற்றுப் பதிவினைத் தெரிவிக்கும் தகவல் பெட்டகமாகவும்,வீர உணர்வை வெளிப்படுத்தும் தூண்டு கோலாகவும் அமைந்துள்ளது.
நூலாசிரியர் குறிப்பிலிருந்து …
கலகமா? போராட்டமா?
ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் வீர வரலாறு மிக முக்கியம். நம் நாட்டுக்கும் அத்தகைய வரலாறு இருக்கிறது. காந்திஜியின் வருகைக்குப் பிறகு சாத்வீக முறையில் நாம் சுதந்திரம் பெற்றோம் என்றாலும், அதற்கு முன் நம் நாட்டில் நடைபெற்ற ஆயுதப் போராட்டங்கள் சுதந்திரத்தின் வலியை உணரச் செய்பவை. அந்த விடுதலைப் போராட்டத்தை நம் இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் இந்த நூலைத் தொகுக்க முயன்றேன். இந்த நூலில், ஆயுதம் தாங்கிய நம் நாட்டின் விடுதலைப் போரை நான்கு பகுதிகளாக்கி அலசியுள்ளேன்.
முதல் பகுதியில் இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வை மிகப் பெரிய அளவில் கிளப்பிய பூலித்தேவன் வரலாறு, அவனுடைய வீரம், அவன் பிரிட்டிஷாரை எதிர்த்த விதம், மக்கள் அதற்கு அளித்த ஆதரவு ஆகியவற்றைத் தந்துள்ளேன்.அடுத்த பகுதியில், பூலித்தேவனுக்குப் பிறகு தொடர்ந்த ஆங்கில எதிர்ப்புப் போர்களில் கட்டபொம்மன், மருது சகோதரர்கள், 1806-ல் நடைபெற்ற வேலூர் சிப்பாய்களின் புரட்சி போன்றவற்றைத் தந்துள்ளேன்.
1857-ல் வடக்கே சிப்பாய்களை முதன்மையாக வைத்து நடந்த பிரிட்டிஷ் எதிர்ப்புப் போராட்டம், அதன் தோற்றுவாய் என்ன என்பதை அலசியுள்ளேன். நிறைவுப் பகுதியில், அதே காலகட்டத்தில், தமிழகத்தின் முக்கியஇடங்களில் பொதுமக்களிடையே இருந்த பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வுமற்றும் தமிழகத்து மக்களின் போராட்ட பங்களிப்பு ஆகியவற்றை ஆங்கிலேய அரசே ஏற்படுத்திய ஆவணங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்துத் தொகுத்துள்ளேன். இவற்றை நீங்கள் ஊன்றிப் படித்தால், பொதுமக்கள் பங்களிப்பு 1857காலகட்டத்தில் எப்படி இருந்தது என்பதையும், அதனால் இதை சிப்பாய்கலகம் என்று சொல்லி சிறுமைப்படுத்தக்கூடாது என்பதையும்உணர்வீர்கள். அதுவே இந்த நூல் மூலம் நான் சொல்ல வந்த செய்தி!
அன்பன்,
செங்கோட்டை ஸ்ரீராம்
https://www.viruba.com/atotalbooks.aspx?id=663
மகா சுதர்சன வழிபாடு – புத்தகம்
வணக்கம்
அடியேன் எழுதி விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள மஹா சுதர்சன வழிபாடு புத்தகம் பற்றிய தகவலை இங்குக் கொடுத்துள்ளேன்.
இந்தப் புத்தகத்தைப் பற்றி …
உலகம் முழுவதும் முருக வழிபாடு பரவியுள்ளதுபோல் முருகனின் ஆயுதமான வேல் வழிபாடும் பரவியுள்ளது. வேல் வழிபாடு என்பது, முருக வழிபாட்டின் ஓர் அங்கம்.
உலகைக் காக்கும் கடவுளாக வேதங்கள் போற்றும் விஷ்ணுவின் கையில் உள்ள சக்கரத்தை வழிபடுவது விஷ்ணு வழிபாட்டின் ஓர் அங்கம். இதுவும் தொன்றுதொட்டு வந்துள்ளது என்பதற்கான உதாரணங்கள், வேதங்கள், ஆழ்வார் பாசுரங்கள் போன்றவற்றிலிருந்து தரப்பட்டுள்ளன. ஆண்டவன் கை ஆயுதம் எதற்காக என்பதையும், அதை வழிபடும் முறையையும் இந்நூல் எளிதாக விளக்குகிறது.
அம்பரீஷ மன்னனுக்கு உதவியது; அர்ஜுனன் உயிரைக் காத்தது, கஜேந்திரன் என்ற யானையின் உயிரைக் காத்தது உள்ளிட்ட சக்கரத்தாழ்வார் தொடர்புடைய கதைகள்… கும்பகோணம் சக்கரபாணி கோயில்; திருமோகூர் சக்கரத்தாழ்வார் கோயில் உள்ளிட்ட சுதர்ஸன வழிபாடுள்ள முக்கியத் திருத்தலங்கள்… சுதர்ஸனரை வழிபடும் முறை, சுதர்ஸன ஹோமம் செய்வதன் பலன், சுதர்ஸனரின் மகிமை, தேசிகர் அருளிய சுதர்ஸன அஷ்டகம்; சுதர்ஸன கவசம்; சுதர்ஸன ஷட்கம் போன்ற சுதர்ஸனர் சுலோகங்கள், தோத்திரங்கள் என அனைத்தும் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
விலை: ரூ.35 முப்பத்தி ஐந்து மட்டும்
பக்கங்கள் : 96 ௯௬
புத்தகத்திலுள்ள ஆசிரியர் குறிப்பிலிருந்து…
My book Tamizhmarai thantha panniruvar – Review
அடியேன் எழுதி விகடன் பிரசுரம் மூலம் வெளியாகியிருக்கும் தமிழ்மறை தந்த பன்னிருவர் நூல் விமர்சனத்தை, திருச்சி, புத்தூர் வக்கீல், ஸுதர்சனர் ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் கீழ்க்காணும்படி தந்திருக்கிறார். அவருக்கு அடியேனின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு உங்களுக்கு தருகிறேன்…
அன்பன்
செங்கோட்டை ஸ்ரீராம்.
தமிழ்மறை தந்த பன்னிருவர்
பக்கங்கள்: 192
விலை ரூ.55,
நூலாசிரியர்: செங்கோட்டை ஸ்ரீராம்
விகடன் பிரசுரம் 757, அண்ணா சாலை, சென்னை 2
———————————————————————————–
விசதவாக் சிகாமணிகளான மணவாளமாமுனிகள் அருளிய உபதேச ரத்னமாலையை அனுசரித்து ஆழ்வார்கள் அவதாரம் ஏன் ஏற்பட்டது? பொய்கையாழ்வார் தொடக்காமாக திருமங்கையாழ்வார் ஈறாக ஆழ்வார்கள் வரலாறு, ஆழ்வார்கள் பாசுரங்களைத் தொகுத்துத் தந்த நாதமுனிகள் முதலிய பதினான்கு தலைப்புகளில் ஆழ்வார்களின் வரலாறும் அவர்கள் அருளிய பாடல்களின் பொருட்செறிவும் மிகவும் எளிய இனிய தமிழில் இந்நூலில் தரப்பட்டுள்ளது. ஆழ்வார்களின் திருவுருவப்படங்களைக் கொண்ட வண்ண அட்டைப்படம், ஒவ்வொரு ஆழ்வாரின் வரலாற்றை விளக்கும் அத்தியாயத்தில் அவரது திருவுருவப் படம் ஆகியவற்றோடு உயர்ந்த தாளில் சிறப்பாக அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
நூலாசிரியரின் முகவுரையில், திருச்சியில் கல்லூரியில் படித்த காலத்தே என்னுள் எழுந்த ஐயங்களைத் தீர்க்கும் அருமருந்தாக விளங்கியவர் வைணவப் பெரியவர் புத்தூர் ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார்ஒஒ (ஸுதர்ஸனர்) என்று எழுதியுள்ளதும் குறிக்கொள்ளத் தக்கது. விகடன் போன்ற பிரபல பதிப்பகத்தின் ஆதரவில் இந்த நூல் வெளிவந்துள்ளது ஆயிரக்கணக்கான வாசகர்கள் வைணவ ஆழ்வார்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை. நூலாசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியது.
இருபினும் ஒரு விஷயத்தை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. பக்கம் 25ல் பொய்கையாழ்வாரை சைவ வைணவ ஒற்றுமை பேசியவர்ஒஒ என்று குறிப்பிட்டுள்ளதும், அதற்குச் சான்றாக அவர் அருளிய முதல் திருவந்தாதியில் அரன் நாரணன் நாமம்(5) என்னும் பாட்டுக்கு ஒரே தெய்வத்துக்கு (அரன் நாரணன் ஆகியவை உனது) பெயர்கள், எருது கருடன் உமது வாகனங்கள், ஆகமமும் வேதமும் உன் பெருமை பறை சாற்றும் நூல்கள், கைலாய மலையும் திருப்பாற்கடலும் உன் இருப்பிடங்கள் என்று பொருள் உரைத்திருப்பது பொருந்தாது.
இப்பாசுரம் சிவனின் தாழ்ச்சியையும் அவனோடு ஒப்பிடும்போது ஸ்ரீமந் நாராயணனின் மேன்மையையும் விளக்குகிறது. அதாவது ஒருவனுக்கு அரன் என்று பெயர், அவனுக்கு ஞானமற்ற எருது வாஹனம், அவனைச் சொல்லும் நூல் வேத விருத்தமான அர்த்தங்களையும் சொல்லும் சைவாகமம். அவன் வசிக்கும் இடம் கடினத் தன்மையுடைய கைலாய மலை. அவனது தொழிலோ அழிப்பது. ஆயுதமோ வேல், அவனுடைய வடிவு எரிக்கும் நெருப்பு போன்றது என்று சிவனுடைய தாழ்ச்சியை வர்ணிக்கிறார்.
பொய்கையாழ்வார் அதுபோல் சிவனுள்ளிட்ட அனைத்துலகையும் படைத்த பரம்பொருளுக்குப் பெயர் நாராயணன், அவனுக்கு வாஹனம் வேதமயமான கருடன். அவனைப் பேசுவது அநாதியான வேதம். அவன் வசிக்கும் இடம் குளிர்ந்த கடல், அவனுக்குத் தொழிலோ அனைவரையும் ரட்சிப்பது, அவனுடைய ஆயுதம் அருளார் திருச்சக்கரம். அவனது வடிவு களைப்புகளை ஆற்றும் கார்மேகம் போன்றது.
இப்படிப்பட்ட இருவரில் அனைத்துலகையும் போலே சிவனும் எம்பெருமானுக்கு சரீரம் என்பதே இப்பாசுரத்தின் உண்மைப் பொருள். வியவேன் திருமாலையல்லாது தெய்வம் என்றேத்தேன் வருமாறென் நம்மேல் வினைஒஒ (64) என்று பாடிய ஆழ்வார் மீது தர்காலத்தில் பிரசாரம் செய்யப்பட்டு வரும் சமரசவாதத்தை ஏறிடுவது தகாது.
நூலாசிரியர் ஆழ்வார் சமரசம் பேசுவதாக எடுத்துக்காட்டியிருக்கும் மற்ற பாடல்களுக்கும் எம்பெருமான் சரீரத்தையுடையவன் (சரீரி) ஏனைய உலகமனைத்தும் அவனுக்கு சரீரம் என்ற விசிஷ்டாத்வைத வேதாந்தக் கருத்துக்கு இணங்கப் பொருள் கொள்ள வேண்டும். அடுத்த பதிப்பில் இக்குறைகள் நீக்கப் பட்டு, ஆழ்வார் பாசுரங்களுக்கு முன்னோர் மொழிந்த முறையில் உண்மைப் பொருள் உரைப்பார் என்று நம்புகிறோம்.
& ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம் & பிப்ரவரி 2008
My book Tamizhmarai thantha panniruvar – Review
அடியேன் எழுதி விகடன் பிரசுரம் மூலம் வெளியாகியிருக்கும் தமிழ்மறை தந்த பன்னிருவர் நூல் விமர்சனத்தை, திருச்சி, புத்தூர் வக்கீல், ஸுதர்சனர் ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் கீழ்க்காணும்படி தந்திருக்கிறார். அவருக்கு அடியேனின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு உங்களுக்கு தருகிறேன்…
அன்பன்
செங்கோட்டை ஸ்ரீராம்.
தமிழ்மறை தந்த பன்னிருவர்
பக்கங்கள்: 192
விலை ரூ.55,
நூலாசிரியர்: செங்கோட்டை ஸ்ரீராம்
விகடன் பிரசுரம் 757, அண்ணா சாலை, சென்னை 2
———————————————————————————–
விசதவாக் சிகாமணிகளான மணவாளமாமுனிகள் அருளிய உபதேச ரத்னமாலையை அனுசரித்து ஆழ்வார்கள் அவதாரம் ஏன் ஏற்பட்டது? பொய்கையாழ்வார் தொடக்காமாக திருமங்கையாழ்வார் ஈறாக ஆழ்வார்கள் வரலாறு, ஆழ்வார்கள் பாசுரங்களைத் தொகுத்துத் தந்த நாதமுனிகள் முதலிய பதினான்கு தலைப்புகளில் ஆழ்வார்களின் வரலாறும் அவர்கள் அருளிய பாடல்களின் பொருட்செறிவும் மிகவும் எளிய இனிய தமிழில் இந்நூலில் தரப்பட்டுள்ளது. ஆழ்வார்களின் திருவுருவப்படங்களைக் கொண்ட வண்ண அட்டைப்படம், ஒவ்வொரு ஆழ்வாரின் வரலாற்றை விளக்கும் அத்தியாயத்தில் அவரது திருவுருவப் படம் ஆகியவற்றோடு உயர்ந்த தாளில் சிறப்பாக அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
நூலாசிரியரின் முகவுரையில், திருச்சியில் கல்லூரியில் படித்த காலத்தே என்னுள் எழுந்த ஐயங்களைத் தீர்க்கும் அருமருந்தாக விளங்கியவர் வைணவப் பெரியவர் புத்தூர் ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார்ஒஒ (ஸுதர்ஸனர்) என்று எழுதியுள்ளதும் குறிக்கொள்ளத் தக்கது. விகடன் போன்ற பிரபல பதிப்பகத்தின் ஆதரவில் இந்த நூல் வெளிவந்துள்ளது ஆயிரக்கணக்கான வாசகர்கள் வைணவ ஆழ்வார்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை. நூலாசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியது.
இருபினும் ஒரு விஷயத்தை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. பக்கம் 25ல் பொய்கையாழ்வாரை சைவ வைணவ ஒற்றுமை பேசியவர்ஒஒ என்று குறிப்பிட்டுள்ளதும், அதற்குச் சான்றாக அவர் அருளிய முதல் திருவந்தாதியில் அரன் நாரணன் நாமம்(5) என்னும் பாட்டுக்கு ஒரே தெய்வத்துக்கு (அரன் நாரணன் ஆகியவை உனது) பெயர்கள், எருது கருடன் உமது வாகனங்கள், ஆகமமும் வேதமும் உன் பெருமை பறை சாற்றும் நூல்கள், கைலாய மலையும் திருப்பாற்கடலும் உன் இருப்பிடங்கள் என்று பொருள் உரைத்திருப்பது பொருந்தாது.
இப்பாசுரம் சிவனின் தாழ்ச்சியையும் அவனோடு ஒப்பிடும்போது ஸ்ரீமந் நாராயணனின் மேன்மையையும் விளக்குகிறது. அதாவது ஒருவனுக்கு அரன் என்று பெயர், அவனுக்கு ஞானமற்ற எருது வாஹனம், அவனைச் சொல்லும் நூல் வேத விருத்தமான அர்த்தங்களையும் சொல்லும் சைவாகமம். அவன் வசிக்கும் இடம் கடினத் தன்மையுடைய கைலாய மலை. அவனது தொழிலோ அழிப்பது. ஆயுதமோ வேல், அவனுடைய வடிவு எரிக்கும் நெருப்பு போன்றது என்று சிவனுடைய தாழ்ச்சியை வர்ணிக்கிறார்.
பொய்கையாழ்வார் அதுபோல் சிவனுள்ளிட்ட அனைத்துலகையும் படைத்த பரம்பொருளுக்குப் பெயர் நாராயணன், அவனுக்கு வாஹனம் வேதமயமான கருடன். அவனைப் பேசுவது அநாதியான வேதம். அவன் வசிக்கும் இடம் குளிர்ந்த கடல், அவனுக்குத் தொழிலோ அனைவரையும் ரட்சிப்பது, அவனுடைய ஆயுதம் அருளார் திருச்சக்கரம். அவனது வடிவு களைப்புகளை ஆற்றும் கார்மேகம் போன்றது.
இப்படிப்பட்ட இருவரில் அனைத்துலகையும் போலே சிவனும் எம்பெருமானுக்கு சரீரம் என்பதே இப்பாசுரத்தின் உண்மைப் பொருள். வியவேன் திருமாலையல்லாது தெய்வம் என்றேத்தேன் வருமாறென் நம்மேல் வினைஒஒ (64) என்று பாடிய ஆழ்வார் மீது தர்காலத்தில் பிரசாரம் செய்யப்பட்டு வரும் சமரசவாதத்தை ஏறிடுவது தகாது.
நூலாசிரியர் ஆழ்வார் சமரசம் பேசுவதாக எடுத்துக்காட்டியிருக்கும் மற்ற பாடல்களுக்கும் எம்பெருமான் சரீரத்தையுடையவன் (சரீரி) ஏனைய உலகமனைத்தும் அவனுக்கு சரீரம் என்ற விசிஷ்டாத்வைத வேதாந்தக் கருத்துக்கு இணங்கப் பொருள் கொள்ள வேண்டும். அடுத்த பதிப்பில் இக்குறைகள் நீக்கப் பட்டு, ஆழ்வார் பாசுரங்களுக்கு முன்னோர் மொழிந்த முறையில் உண்மைப் பொருள் உரைப்பார் என்று நம்புகிறோம்.
& ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம் & பிப்ரவரி 2008
Sinthupatti Perumal koil- near Madurai Thirumangalam
இந்தக் கோயில் மிக அழகாக, புதுமையும் பழமையும் நிறைந்ததாக உள்ளது. அருமையான சுற்றுப் புறம். அழகான சிறிய கோபுரம். கோயிலின் உள்ளே ஒரு கிணறு. பெருமாளுக்கும் தாயாருக்கும் தனித்தனி சன்னிதிகள். சக்கரத்தாழ்வாருக்கு தனியாக சன்னிதி கட்டியிருக்கிறார்கள். அண்மையில் இந்தக் கோயிலுக்கு திருக்குடமுழுக்கு வைபோகம் நன்றாக நடந்தேறியுள்ளது. இங்கு கம்பம் கழுவுதல் என்பது பாரம்பரியமாக நடைபெற்றுவரும் வழிபாடு. அதை கம்பத் திருமஞ்சனம் என்று சொல்வர்.
எல்லாக் கோயில்களிலும் கொடிமரம் கருடக் கொடியோடு திகழும். ஆனால் இந்தப் பெருமாள் கோயிலில் கருப்பண்ண சாமி கொடிமரம் உள்ளது. ஆகவே வரும் மக்களுக்கு பிரசாதமாக விபூதியும் வழங்கப்படுகிறது – இந்தக் கொடிமரத்தின் கீழ்…
நல்ல அமைப்பான வாகனங்கள் இருக்கின்றன. எங்கள் குடும்பத்தின் குலதெய்வமாக விளங்கும் இந்த வேங்கடாசலபதிப் பெருமானை தரிசிப்பதற்காக பிப்ரவரி 10ம் தேதி சென்னையில் இருந்து சிந்துப்பட்டிக்குச் சென்றிருந்தேன். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் இவை…
இனி கோயிலின் வரலாறு…
————————————————————————————————–
இங்கே நீங்கள் காண்பது, சிந்துப்பட்டி கிராமத்தில், கிராம தேவதையாக வழிபடப்படும் கருப்பர் சந்நிதி. இவர், பெருமாள் சந்நிதியைப் பார்த்தவாறு உள்ளார். இவருக்க்கும் பெருமாள் கோவிலுக்கும் தொடர்பு உண்டு என்பது தல வரலாறு.
அடுத்தது, சிந்துப்பட்டி கிராமத்திலுள்ள மிகப்பெரிய ஏரியைக் காத்துக் கொண்டிருக்கும் காவல்தெய்வம்…
————————————————————————————————-
இவர்தான் சிந்துப்பட்டி ஸ்ரீ பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள்…
தொடர்புக்கு:ராமானுஜம் (அர்ச்சகர்) 97918 35580
கட்டுரை மற்றும் படங்கள்: செங்கோட்டை ஸ்ரீராம்.
Sinthupatti Perumal koil- near Madurai Thirumangalam
இந்தக் கோயில் மிக அழகாக, புதுமையும் பழமையும் நிறைந்ததாக உள்ளது. அருமையான சுற்றுப் புறம். அழகான சிறிய கோபுரம். கோயிலின் உள்ளே ஒரு கிணறு. பெருமாளுக்கும் தாயாருக்கும் தனித்தனி சன்னிதிகள். சக்கரத்தாழ்வாருக்கு தனியாக சன்னிதி கட்டியிருக்கிறார்கள். அண்மையில் இந்தக் கோயிலுக்கு திருக்குடமுழுக்கு வைபோகம் நன்றாக நடந்தேறியுள்ளது. இங்கு கம்பம் கழுவுதல் என்பது பாரம்பரியமாக நடைபெற்றுவரும் வழிபாடு. அதை கம்பத் திருமஞ்சனம் என்று சொல்வர்.
எல்லாக் கோயில்களிலும் கொடிமரம் கருடக் கொடியோடு திகழும். ஆனால் இந்தப் பெருமாள் கோயிலில் கருப்பண்ண சாமி கொடிமரம் உள்ளது. ஆகவே வரும் மக்களுக்கு பிரசாதமாக விபூதியும் வழங்கப்படுகிறது – இந்தக் கொடிமரத்தின் கீழ்…
நல்ல அமைப்பான வாகனங்கள் இருக்கின்றன. எங்கள் குடும்பத்தின் குலதெய்வமாக விளங்கும் இந்த வேங்கடாசலபதிப் பெருமானை தரிசிப்பதற்காக பிப்ரவரி 10ம் தேதி சென்னையில் இருந்து சிந்துப்பட்டிக்குச் சென்றிருந்தேன். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் இவை…
இனி கோயிலின் வரலாறு…
————————————————————————————————–
இங்கே நீங்கள் காண்பது, சிந்துப்பட்டி கிராமத்தில், கிராம தேவதையாக வழிபடப்படும் கருப்பர் சந்நிதி. இவர், பெருமாள் சந்நிதியைப் பார்த்தவாறு உள்ளார். இவருக்க்கும் பெருமாள் கோவிலுக்கும் தொடர்பு உண்டு என்பது தல வரலாறு.
அடுத்தது, சிந்துப்பட்டி கிராமத்திலுள்ள மிகப்பெரிய ஏரியைக் காத்துக் கொண்டிருக்கும் காவல்தெய்வம்…
————————————————————————————————-
இவர்தான் சிந்துப்பட்டி ஸ்ரீ பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள்…
தொடர்புக்கு:ராமானுஜம் (அர்ச்சகர்) 97918 35580
கட்டுரை மற்றும் படங்கள்: செங்கோட்டை ஸ்ரீராம்.