சகுந்தலா தேவிக்கு பிறகு… மற்றுமொரு ‘சேலஞ்சிங் பயோபிக்’!

Published:

vidyabalan2
vidyabalan2

பாலிவுட் திறமைசாலியான நடிகை வித்யாபாலன் வரிசையாக சேலஞ்சிங் படங்களில் நடித்து வருகிறார். இதற்குமுன் என்டிஆர் பயோபிக் கில் அவர் மனைவி பசவதாரகம் பாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

தெலுங்கு சம்பிரதாயங்களான புடவைக் கட்டு மற்றும் கலாச்சாரத்தில் நந்தமூரி அபிமானிகளை ரசிகர்களை வித்யாபாலன் மெய்மறக்கச் செய்தார். அதற்கு முன் ஐட்டம் கேர்ள் விஜயலட்சுமி என்னும் சிலுக்குசுமிதா பாத்திரத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஒவ்வொரு முறையும் வித்யாபாலன் எந்த பிரயோகம் செய்தாலும் அது ரசிகர்களை சென்று சேர்கிறது. ஹாட் டாபிக் ஆகிறது. தன்னில் உள்ள சிறந்த நடிகையை திருப்திப்படுத்தும் முயற்சியாலேயே இது சாத்தியமாகிறது. அதனால் தான் பாலிவுட்டில் எத்தனை போட்டி இருந்தாலும் முதல் இட நடிகைகளுக்குள் சேலஞ்சர் ஆக வித்யா பாலன் உயர்ந்துள்ளார்.

vidyabalan1
vidyabalan1

வித்யா பாலன் தன் கேரியரில் மற்றுமொரு சேலஞ்சிங் பாத்திரத்தில் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டுள்ளார். இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கை கதையில் நடிப்பதற்கு ஏற்பாடுகளில் உள்ளார். இந்தப் படத்தை ஆவர் கணவர் சித்தார்த் ராய் கபூர் தயாரிக்க உள்ளார்.

அனைத்தும் சரியாக அமைந்தால் இப்போது இந்த மூவி தொடங்கி விட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த கொரோனா நோய்த்தொற்று லாக்டௌனால் இதெல்லாம் வாய்தாவாகி விட்டது. இதற்கு துணையாக இந்திரா காந்தி வாழ்க்கை மீது நிறைய ரிசெர்ச் செய்ய வேண்டியுள்ளது. ஸ்கிரிப்ட் ரெடி ஆவதற்கு தாமதமாகியதற்கு காரணம் என்று வித்யாபாலன் அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

வரும் ஆண்டில் இந்த திரைப்படம் தொடங்குவோம் என்று கூட குறிப்பிட்டார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img