செப்டம்பர் 1 முதல் எதற்கெல்லாம் அனுமதி..! தமிழக அரசு!

tn-cm

தமிழகத்தில் செப்டம்பர் 30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.முதலில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தற்போது நாளை வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இதனிடையே நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதில், செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று தெரிவித்தது. பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்.

மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் திறந்தவெளி திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவித்தது.

மேலும், செப்டம்பர் 21 -ஆம் தேதி முதல் முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, அரசியல் நிகழ்ச்சிகளை 100 பேருடன் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது மத்திய அரசு.குறிப்பாக அரசின் உத்தரவு இல்லாமல் எந்த மாநிலங்களும் ஊரடங்கை அறிவிக்க கூடாது எனவும் மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் தான் நாளையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் நேற்று காலை முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

ALSO READ:  பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பின் மருத்துவ நிபுணர் குழுவுடன் மாலை முதலமைச்சர் பழனிசாமி மேற்கொண்டார் .இந்நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 30 -ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும் செப்டம்பர் 7 முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் தமிழகத்திற்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு தீபா தேவையில்லை என்றும் பிற மாநிலங்களில் இருந்து வருவதற்கும் ரயில் பேருந்து விமானம் மற்றும் மற்ற வாகனங்களில் பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு அதே முறை தொடரும். அலைபேசி எண் ஆதார் எண் போன்றவற்றுடன் இ பாஸ் விண்ணப்பம் செய்பவர்களுக்கு உடனே இ பாஸ் வழங்கப்படும்

அனைத்து வழிபாட்டு தலஙகளிலும் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. பொதுமக்கள் தரிசனம் வழிபாட்டு தலங்களை இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் இதற்கான முழு நெறிமுறைகளும் பின்னர் அறிவிக்கப்படும் எத்தனை நபர்கள் உள்ளே செல்லலாம் என்பது குறித்தான நெறிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும்.

மாவட்டத்திற்குள்ளும் சென்னை பெருநகர போக்குவரத்து சேவை தனியார் மற்றும் அரசு போக்குவரத்து நிலையான நெறிமுறைகளின் அடிப்படையில் 19 1 2020 முதல் அனுமதிக்கப்படுகிறது.

மெட்ரோ ரயில் போக்குவரத்து 7 9 2020 முதல் நிலையான நெறிமுறைகள் உடன் அனுமதிக்கப்படுகிறது

ALSO READ:  ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

வணிக வளாகங்கள் மற்றும் ஷோரூம்கள் பெரிய கடைகள் நூறு சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது குளிர்சாதன வசதியுடன் இயங்கும் வணிகங்கள் மத்திய அரசின் நெறிமுறைகளை பின்பற்றி நிலையான நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப் படுகிறது வளாகத்தில் இருக்கும் திரையரங்குகளுக்கு அனுமதி கிடையாது அதே நிலை தொடரும்

தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடைகளும் 8 மணி வரை இயங்க அனுமதிக்கப் படுகிறது.

அரசால் வெளியிடப்பட்ட நிலையான நெறிமுறைகளை பின்பற்றி தேனீர் கடைகள் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப் படுகிறது பார்சல் 9 மணி வரை இயங்க அனுமதிக்கப் படுகிறது

சென்னை உட்பட தமிழ்நாட்டு தொழிற்சாலைகள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது மேலும் தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள் முக்கியமான பணியாளர்களை மட்டும் கொண்டு இயங்கவும் மீதி உள்ளவர்கள் வீட்டில் இருந்து இயங்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

தங்கும் விடுதிகள், ஹோட்டல், ரிசார்ட், கேளிக்கை விடுதிகள் பிற விருந்தோம்பல் சேவைகள், நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது

உடற்பயிற்சி மைதானங்கள் விளையாட்டு பயிற்சி மையங்கள் தொடங்க அனுமதிக்கப்படுகிறது ஆனால் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

திறன் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 21 9 2020 முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் அரசு அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப் படுகிறது மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒரு கொரோனா பாதுகாப்பு அதிகாரியை நியமித்து தொற்று உள்ளவர்களை பரிசோதிக்கவும் தனிமைப்படுத்தவும் வருபவர்களை பரிசோதனை செய்து அனுப்பவும் முறையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

வங்கிகள் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் அனுமதிக்கப்படுகின்றது

நீலகிரி கொடைக்கானல் போன்ற மலை வாழ் தலங்ககுக்கு செல்வதற்கு நோய்த்தொற்றை தடுப்பதற்காக நீட் பாஸ் எடுத்து செல்லும் முறையை பின்பற்றி அனுமதிக்கப்படுகிறது.

திரைப்பட தொழில் நுட்ப படப்பிடிப்பு பணிகளுக்கு 75 நபர்களுக்கு மிகாமல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பணி செய்ய அனுமதிக்கப்படுகிறது

ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது.

sep lockdown 1 - 2026
sep lockdown - 2026
cm permission - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories