சிறுவனை சிறுமி என்று பதிவிட்ட ஆனந்த் மஹிந்தரா! வைரலான பதிவுகள்!

neelakandan
neelakandan

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா எப்போதும் இளம் திறமைகளை ஊக்குவிப்பதில் முன்னுரிமை கொடுப்பவர். அவரின் வலைதள பக்கங்களை பின்தொடர்பவர்களுக்கு இது தெரியும்.

இதற்கிடையே, இன்று ஆனந்த் மஹிந்திரா ஒரு சிறுவன் களரிபயட்டு பயிற்சி செய்யும் வீடியோவால் மிகவும் ஈர்க்கப்பட்டு, அந்த வீடியோவை பகிர்ந்துகொண்டார். கூடவே,

‘எச்சரிக்கை: இந்த இளம் பெண்ணின் வழியில் செல்லாதீர்கள்! நம் விளையாட்டு முன்னுரிமைகளில் களரிபயட்டுக்கு குறிப்பிடத்தக்க அளவு வெளிச்சம் கொடுக்கப்பட வேண்டும். இது உலகத்தின் கவனத்தை ஈர்க்கும்…” என்று பதிவிட்டு இருந்தார்.
ஆனால் இவரின் பதிவுக்கு அந்த வீடியோவில் இருக்கும் சிறுவன் பதில் கொடுத்தான். விரைவாகவே அந்த சிறுவனின் பதிவு ஆனந்த் மஹிந்த்ராவின் பதிவை விட வைரலாகச் சென்றது. காரணம் ஆனந்த் மஹிந்திரா தவறாக பதிவிட்டிருந்தது தான். அதாவது,

வீடியோவில் களரி விளையாடியது கேரளாவில் உள்ள ஏகவீர களரிபயட்டு அகாடமியின் மாணவரான நீலகண்டன் நாயர் என்ற சிறுவன். ஆனால், ஆனந்த் மஹிந்திரா சிறுவனின் நீள முடி உள்ளிட்டவற்றை வைத்து அவரை சிறுமி என்று அடையாளப்படுத்தி பதிவிட்டு இருந்தார்.
பின்னர் ஆனந்த் மஹிந்திராவின் பதிவுக்கு நீலகண்டன் பதிலளித்தார்.

‘உங்கள் ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சார். ஒரு சிறிய திருத்தம் – நான் ஒரு பெண் அல்ல, நான் 10 வயது சிறுவன். களரி குறித்த ஒரு குறும்படத்தில் நடிப்பதற்காக என் தலைமுடியை நீளமாக வளர்த்து வருகிறேன்,” என்று பதில் கொடுத்திருந்தார்.
இந்த இரண்டு பதிவும் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. சிலர் சிறுவனை பாராட்டி வரும் நிலையில், சிலர் ஆனந்த் மஹிந்திராவின் பதிவை ட்ரோல் செய்து வருகின்றனர்.

இன்னும் சிலர் களரி குறித்தும் பதிவிட்டு வருகின்றனர். பண்டைய தற்காப்புக் கலை வடிவமான களரிபயட்டு கேரளாவில் உருவானது. களரி என்றும் அழைக்கப்படும் களரிபயட்டு, இந்தியாவிற்கு தனித்துவமான ஆயுதங்களான குண்டுகள், குச்சிகள் மற்றும் வாள்களுடன் பண்டைய போர்க்களத்திற்காக வடிவமைக்கப்பட்டது.

வீடியோவில், நீலகண்டன் நாயர் ஒரு நீண்ட குச்சியைப் பயன்படுத்தி சிரமமின்றி களரிபயட்டு பயிற்சி செய்கிறார். இவரின் பயிற்சி தொடர்பான நிறைய வீடியோக்கள் வலைதளங்களில் காண முடிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories