சிறுவனை சிறுமி என்று பதிவிட்ட ஆனந்த் மஹிந்தரா! வைரலான பதிவுகள்!

neelakandan
neelakandan

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா எப்போதும் இளம் திறமைகளை ஊக்குவிப்பதில் முன்னுரிமை கொடுப்பவர். அவரின் வலைதள பக்கங்களை பின்தொடர்பவர்களுக்கு இது தெரியும்.

இதற்கிடையே, இன்று ஆனந்த் மஹிந்திரா ஒரு சிறுவன் களரிபயட்டு பயிற்சி செய்யும் வீடியோவால் மிகவும் ஈர்க்கப்பட்டு, அந்த வீடியோவை பகிர்ந்துகொண்டார். கூடவே,

‘எச்சரிக்கை: இந்த இளம் பெண்ணின் வழியில் செல்லாதீர்கள்! நம் விளையாட்டு முன்னுரிமைகளில் களரிபயட்டுக்கு குறிப்பிடத்தக்க அளவு வெளிச்சம் கொடுக்கப்பட வேண்டும். இது உலகத்தின் கவனத்தை ஈர்க்கும்…” என்று பதிவிட்டு இருந்தார்.
ஆனால் இவரின் பதிவுக்கு அந்த வீடியோவில் இருக்கும் சிறுவன் பதில் கொடுத்தான். விரைவாகவே அந்த சிறுவனின் பதிவு ஆனந்த் மஹிந்த்ராவின் பதிவை விட வைரலாகச் சென்றது. காரணம் ஆனந்த் மஹிந்திரா தவறாக பதிவிட்டிருந்தது தான். அதாவது,

வீடியோவில் களரி விளையாடியது கேரளாவில் உள்ள ஏகவீர களரிபயட்டு அகாடமியின் மாணவரான நீலகண்டன் நாயர் என்ற சிறுவன். ஆனால், ஆனந்த் மஹிந்திரா சிறுவனின் நீள முடி உள்ளிட்டவற்றை வைத்து அவரை சிறுமி என்று அடையாளப்படுத்தி பதிவிட்டு இருந்தார்.
பின்னர் ஆனந்த் மஹிந்திராவின் பதிவுக்கு நீலகண்டன் பதிலளித்தார்.

‘உங்கள் ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சார். ஒரு சிறிய திருத்தம் – நான் ஒரு பெண் அல்ல, நான் 10 வயது சிறுவன். களரி குறித்த ஒரு குறும்படத்தில் நடிப்பதற்காக என் தலைமுடியை நீளமாக வளர்த்து வருகிறேன்,” என்று பதில் கொடுத்திருந்தார்.
இந்த இரண்டு பதிவும் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. சிலர் சிறுவனை பாராட்டி வரும் நிலையில், சிலர் ஆனந்த் மஹிந்திராவின் பதிவை ட்ரோல் செய்து வருகின்றனர்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

இன்னும் சிலர் களரி குறித்தும் பதிவிட்டு வருகின்றனர். பண்டைய தற்காப்புக் கலை வடிவமான களரிபயட்டு கேரளாவில் உருவானது. களரி என்றும் அழைக்கப்படும் களரிபயட்டு, இந்தியாவிற்கு தனித்துவமான ஆயுதங்களான குண்டுகள், குச்சிகள் மற்றும் வாள்களுடன் பண்டைய போர்க்களத்திற்காக வடிவமைக்கப்பட்டது.

வீடியோவில், நீலகண்டன் நாயர் ஒரு நீண்ட குச்சியைப் பயன்படுத்தி சிரமமின்றி களரிபயட்டு பயிற்சி செய்கிறார். இவரின் பயிற்சி தொடர்பான நிறைய வீடியோக்கள் வலைதளங்களில் காண முடிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories