December 6, 2025, 1:23 AM
26 C
Chennai

சிறுவனை சிறுமி என்று பதிவிட்ட ஆனந்த் மஹிந்தரா! வைரலான பதிவுகள்!

neelakandan
neelakandan

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா எப்போதும் இளம் திறமைகளை ஊக்குவிப்பதில் முன்னுரிமை கொடுப்பவர். அவரின் வலைதள பக்கங்களை பின்தொடர்பவர்களுக்கு இது தெரியும்.

இதற்கிடையே, இன்று ஆனந்த் மஹிந்திரா ஒரு சிறுவன் களரிபயட்டு பயிற்சி செய்யும் வீடியோவால் மிகவும் ஈர்க்கப்பட்டு, அந்த வீடியோவை பகிர்ந்துகொண்டார். கூடவே,

‘எச்சரிக்கை: இந்த இளம் பெண்ணின் வழியில் செல்லாதீர்கள்! நம் விளையாட்டு முன்னுரிமைகளில் களரிபயட்டுக்கு குறிப்பிடத்தக்க அளவு வெளிச்சம் கொடுக்கப்பட வேண்டும். இது உலகத்தின் கவனத்தை ஈர்க்கும்…” என்று பதிவிட்டு இருந்தார்.
ஆனால் இவரின் பதிவுக்கு அந்த வீடியோவில் இருக்கும் சிறுவன் பதில் கொடுத்தான். விரைவாகவே அந்த சிறுவனின் பதிவு ஆனந்த் மஹிந்த்ராவின் பதிவை விட வைரலாகச் சென்றது. காரணம் ஆனந்த் மஹிந்திரா தவறாக பதிவிட்டிருந்தது தான். அதாவது,

வீடியோவில் களரி விளையாடியது கேரளாவில் உள்ள ஏகவீர களரிபயட்டு அகாடமியின் மாணவரான நீலகண்டன் நாயர் என்ற சிறுவன். ஆனால், ஆனந்த் மஹிந்திரா சிறுவனின் நீள முடி உள்ளிட்டவற்றை வைத்து அவரை சிறுமி என்று அடையாளப்படுத்தி பதிவிட்டு இருந்தார்.
பின்னர் ஆனந்த் மஹிந்திராவின் பதிவுக்கு நீலகண்டன் பதிலளித்தார்.

‘உங்கள் ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சார். ஒரு சிறிய திருத்தம் – நான் ஒரு பெண் அல்ல, நான் 10 வயது சிறுவன். களரி குறித்த ஒரு குறும்படத்தில் நடிப்பதற்காக என் தலைமுடியை நீளமாக வளர்த்து வருகிறேன்,” என்று பதில் கொடுத்திருந்தார்.
இந்த இரண்டு பதிவும் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. சிலர் சிறுவனை பாராட்டி வரும் நிலையில், சிலர் ஆனந்த் மஹிந்திராவின் பதிவை ட்ரோல் செய்து வருகின்றனர்.

இன்னும் சிலர் களரி குறித்தும் பதிவிட்டு வருகின்றனர். பண்டைய தற்காப்புக் கலை வடிவமான களரிபயட்டு கேரளாவில் உருவானது. களரி என்றும் அழைக்கப்படும் களரிபயட்டு, இந்தியாவிற்கு தனித்துவமான ஆயுதங்களான குண்டுகள், குச்சிகள் மற்றும் வாள்களுடன் பண்டைய போர்க்களத்திற்காக வடிவமைக்கப்பட்டது.

வீடியோவில், நீலகண்டன் நாயர் ஒரு நீண்ட குச்சியைப் பயன்படுத்தி சிரமமின்றி களரிபயட்டு பயிற்சி செய்கிறார். இவரின் பயிற்சி தொடர்பான நிறைய வீடியோக்கள் வலைதளங்களில் காண முடிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories