ரூபிக் க்யூப் இல் 5 வயது சிறுமி உலக சாதனை!

kothai - 2026

சென்னையை சேர்ந்த கௌசல்யா – பிரபு தம்பதிகளின் மகளான கோதை வாஹ்ருணி முதலாம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறு வயது முதலே கதைகள் கேட்பது, புதிர் போடுவதை அதை விடுவிப்பது, கணிதம் உள்ளிட்டவற்றில் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளார் கோதை. பெரியவர்களே விடைகண்டறிய திணறும் 9*9 சுடோகு விளையாட்டை 5 வயதிலேயே சுலபமாக முடித்துள்ளார்.

இந்த திறனை கண்டறிந்த இவரது பெற்றோர்கள் சுடோகு போல் உள்ள ரூபிக் கனசதுர புதிர் விளையாட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ஆர்வத்துடன் விளையாடத்தொடங்கிய கோதை அதில் வல்லுனராகவும் ஜொலிக்க தொடங்கியுள்ளார். இந்த விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பயிற்சியை தொடங்கிய கோதையின் சாதனை பயணம் இன்று கின்னஸ் உலக சாதனை வரை நீண்டுகொண்டிருக்கிறது.

பல கோணங்கள், பல வண்ணங்களில் இருக்கும் ரூபிக் கனசதுரத்தை தனது மாயஜால விரல்களால் அசால்டாக வரிசைப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படவைக்கிறார் கோதை.

குறிப்பாக ஹூலா ஹூபிங் எனப்படும் சாகச வளையத்தை இடுப்பில் சுற்றிக்கொண்டே டெட்ராஹெட்ரான் எனப்படும் முக்கோண வடிவ ரூபிக் கனசதுரத்தை 6.88 நொடிக்குள் வரிசைப்படுத்தி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

kothai1 - 2026

18 வயது இளைஞர் 13.86 நொடியில் நிகழ்த்திய சாதனையை கோதை 6.88 நொடியில் செய்து காண்பித்து சாதனைகளை தகர்த்தெறிந்துள்ளார்.

அம்மா, அப்பா மூலம் அறிமுகமான ரூபிக் கனசதுர புதிர் விளையாட்டை தனது ஆர்வத்தால் யூ டியூபில் கற்றுத்தேர்ந்து இன்று கின்னஸ் சாதனை வரை பயணப்பட்டுள்ளார் கோதை.

மேலும் மாஸ்டர்மார்பிக்ஸ் எனப்படும் மிகக்கடினமான ரூபிக் கனசதுர புதிர் விளையாட்டை ஹூலா ஹூபிங் செய்துகொண்டே 1 நிமிடம் 59 நொடிக்குள்ளும், மெகாமின்க்ஸ் எனப்படும் 8 பக்கம் கொண்ட கனசதுரத்தை 3.3 நிமிடத்தில் செய்துமுடித்து மேலும் இரண்டு உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இவரது திறமையை அங்கீகரிக்குக் விதமாக தமிழ்நாடு கியூப் சங்கம் பதக்கமும், சான்றிதழும் வழங்கி கௌரவித்துள்ளது.

செல்போன், டிவி என மின்னணு சாதனத்தில் மூழ்கிக்கிடக்கும் குழந்தைகளின் ஆர்வத்தை திசைதிருப்பி அந்த சாதனங்களை பயனுள்ளவகையில் பயன்படுத்த கற்றுக்கொடுத்தால் கோதையை போல் சாதனையாளர்களை நாமும் உருவாக்கலாம் என பொற்றோர்களுக்கு பாடம் புகட்டியுள்ளார் இந்த சாதனை சிறுமி கோதை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories