ரிசர்வ் செய்த டிக்கெட்.. உங்களுக்கு பதில் மற்றொருவர் பயணம்!

train 2 - 2026

உங்களிடம் உறுதிசெய்யப்பட்ட ரயில் முன்பதிவு டிக்கெட் உள்ள நிலையில், தவிர்க்க முடியாத ஏதோ ஒரு காரணத்திற்காக உங்களால் பயணம் செய்ய முடியவில்லை என்றாலோ, உங்களுக்கு பதிலாக உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டாலோ, உங்களது டிக்கெட்டை அவர் பெயரில் மாற்ற ரயில்வே அனுமதிக்கிறது.

இதற்கான சிறப்பு வசதியை ரயில்வே வழங்கியுள்ளது. இந்திய ரயில்வேயின் இந்த சிறப்பு வசதியை நீங்கள் எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

சில சமயங்களில், ரயில் பயணச்சீட்டை முன்பதிவு செய்த பின் பயணிக்க முடியாத நிலை ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலையில் டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு, அவர்களுக்குப் பதிலாக புதிய டிக்கெட்டை எடுக்க வேண்டிய அவலநிலையை ரயில்வே பயணிகள் அடிக்கடி எதிர்கொள்கின்றனர்.

ஆனால் கன்பார்ம் செய்யப்பட்ட டிக்கெட் கிடைப்பது மிகவும் கடினம். அதனால்தான் பயணிகளுக்கு இந்த வசதியை ரயில்வே வழங்கியுள்ளது. இந்த வசதி நீண்ட காலமாக இருந்து வருகிறது,

ஆனால் அதிகமான பேருக்கு இது பற்றி தெரியவில்லை. ரயில்வேயின் இந்த வசதியை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்வோம்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

ஒரு பயணி தனது உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை தந்தை, தாய், சகோதரன், சகோதரி, மகன், மகள், கணவன் மற்றும் மனைவி போன்ற அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் அல்லது நண்பர்கள் என வேறு யாருடைய பெயரிலும் மாற்றலாம்.

இதற்கு, ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன், பயணிகள் கோரிக்கை விடுக்க வேண்டும். இதற்குப் பிறகு, பயணச்சீட்டில் பயணிகளின் பெயர் துண்டிக்கப்பட்டு, யாருடைய பெயரில் டிக்கெட் மாற்றப்பட்டதோ அந்த உறுப்பினரின் பெயர் போடப்படுகிறது.

விண்ணப்பத்தை 24 மணி நேரத்திற்கு முன்பே சமர்ப்பிக்க வேண்டும்

பயணி ஒரு அரசு ஊழியராக இருந்து தனது பணிக்காக செல்கிறார் என்றால், ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு அவர் கோரலாம். இந்த டிக்கெட் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நபரின் பெயருக்கு மாற்றப்படும்.

திருமணத்திற்கு செல்பவர்களுக்கு இது போன்ற நிலை வந்தால், திருமண ஏற்பாடு செய்பவர்கள், 48 மணி நேரத்திற்கு முன், தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வசதியை ஆன்லைனிலும் பெறலாம். இந்த வசதி என்சிசி கேடட்களுக்கும் கிடைக்கும்.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

பயணச்சீட்டுகளை மாற்றுவது என்பது ஒரு முறை மட்டுமே செய்ய முடியும் என்று இந்திய ரயில்வே கூறுகிறது. அதாவது ஒரு பயணி தனது பயணச்சீட்டை வேறொரு நபருக்கு மாற்றியிருந்தால், அதை மீண்டும் மாற்ற முடியாது.

உங்கள் டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றும் வழிமுறை:

டிக்கெட்டின் பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

அருகிலுள்ள ரயில் நிலையத்தின் முன்பதிவு கவுண்டருக்கு செல்லவும்.

டிக்கெட் யாருடைய பெயரில் மாற்றப்பட வேண்டுமோ, அவரது ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற அவரது அடையாளச் சான்று எடுத்துச் செல்ல வேண்டும்.

கவுண்டரில் டிக்கெட் பரிமாற்றத்திற்கு விண்ணப்பிக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

Topics

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories