இன்டர்நேஷனல் ஃப்ராடு.. சீமானை நார் நாராகக் கிழித்துத் தொங்கவிடும் வைகோ!

seeman vaiko - 2026

விடுதலைப்புலிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் யார் ஏஜெண்ட் என்பதில் முட்டிமோதும் நிலையைப் போல் தோற்றம் அளிக்கிறது, வைகோ மற்றும் சீமானின் அண்மைக் கால அடிதடிகள்!

மேலும் தன்னை தரக்குறைவாகத்தாக்கியும், ஸ்டெர்லைட் ஆலையுடன் சம்பந்தப் படுத்தி ரொம்பவே டேமேஜ் செய்வதாகவும், நியூட்ரினோ உள்ளிட்ட விவகாரங்களில் தன் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் மீம்ஸ் போடுகின்றனர் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை உசிலம்பட்டி அருகே மதிமுக.,வினர் செவ்வாய்க்கிழமை நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுக்கும் நாம் தமிழர் கட்சியினர் சிலருக்கும் மோதல் ஏற்பட்டது. இது நேற்று ஊடகங்களில் பெரிதாக விவாதிக்கப்பட்டது.

vaiko seeman - 2026

இதனிடையே நாம் தமிழர் கட்சிக்கும், மதிமுகவுக்கும் இடையே அவ்வப்போது ஏற்படும் மோதல்கள் குறித்து மதிமுக பொதுச் செயலர் வைகோ விளக்கம் அளித்தார். ஆண்டிப்பட்டியில் புதன்கிழமை இன்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, நேற்று நடைபெற்ற சம்பவம் குறித்தும், தாம் மனத்தளவில் சீமானால் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பது குறித்தும், சீமானின் சர்வதேச பித்தலாட்டங்கள் குறித்தும் பேசினார்.

அவர் கூறியவை: “நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு பேரணியின்போது இருசக்கர வாகனங்களில் வந்த நாம் தமிழர் கட்சியினர் சிலர் என்னருகே வந்து ‘வீரவணக்கம்’ என முழக்கமிட்டனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நான் தமிழரல்ல எனவும் தெலுங்கர் எனவும் பிரச்சாரம் செய்து வருகிறார். பொது மேடைகளில் பெரியாரையும், அண்ணாவையும் சீமான் இழிவாகப் பேசி வருகிறார். பல ஆண்டுகளாக இவற்றையெல்லாம் நான் பொறுத்துக்கொண்டே இருந்தேன்.

8 ஆண்டுகளாக நான் பொறுமையாக இருக்கிறேன். நான் தமிழர் அல்ல என்றும், தெலுங்கன் என்றும் சீமான் கீழ்த்தரமாக பேசி வருகிறார். ஈரோடு ராமசாமி நாயக்கர் பயல் என்று கீழ்த்தரமாக பேசி வருகிறார். தெலுங்கன் என்று விமரிசித்து அரசியலில் இருந்து என்னை ஓரங்கட்டப் பார்க்கிறார் சீமான்.

அண்ணாதுரை என்ற முட்டாள் தமிழகத்தை கெடுத்துவிட்டார் என சீமான் பேசினார். அண்ணாவையும், பெரியாரையும் தாக்கிப் பேசினார். அவர்களை தாக்கிப் பேசுவது மறைமுகமாக என்னைத் தாக்குவதற்காகவே என்பதை பிறகுதான் தெரிந்து கொண்டேன்.

seeman vaiko - 2026

நியூட்ரினோ, ஸ்டெர்லைட் உள்ளிட்ட விவகாரங்களில் என்னுடைய போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி நாம் தமிழர் கட்சியினர் சமூக வலை தளங்களில் மீம்ஸ் போடுகின்றனர். இதனால், மக்கள் மத்தியில் என்னுடைய பெயர் கெட்டுப்போகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், சீமானை சந்திக்க வெறும் 8 நிமிடம்தான் அனுமதித்தார். புகைப்படம் எடுக்கக் கூட அனுமதிக்கவில்லை. ஆனால், பிரபாகரனுடன் வெகுகாலம் நட்பில் இருந்ததுபோல காட்டிக்கொள்கிறார் சீமான். பிரபாகரனுடன் சீமான் எடுத்ததாக உலா வரும் புகைப்படம் கிராஃபிக்ஸ் செய்யப்பட்டவை.

vaiko seeman1.jpg - 2026

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இல்லை என்று கருதிக் கொண்டு, அவரோடு பழகியவர் போல பொய் கூறி வருகிறார். விடுதலைப் புலிகளின் சின்னத்தை தனது கட்சிக் கொடியில் வைத்துக் கொண்டுள்ளார். நான் ஒரு மாத காலத்துக்கும் மேல், விடுதலைப் புலிகள் இயக்க சீருடை அணிந்து கொண்டு பிரபாகரனுடன் இருந்தவன் என்று வைகோ தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories