என்ன ஆச்சு தமிழக பாஜக.,வுக்கு? ஏன் இந்த குரங்குத் தனம்?

06 Auguest 01 Tamilisai - 2026

திமுகவின் தாய் அமைப்பான திராவிடர் கழகம் கூட கருணாநிதியின் மறைவுக்கு துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் திராவிடர் கழக நிகழ்ச்சிகளை ஒரு வாரத்திற்கு ரத்து செய்வதாக அறிவிக்கவில்லை

திமுகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கூட கருணாநிதியின் மறைவுக்காக தங்கள் கட்சியின் நிகழ்ச்சிகளை ஒரு வாரத்திற்கு இரத்து செய்வதாக அறிவிக்கவில்லை

ஏன் கருணாநிதி தலைவராக இருந்து ஐம்பது வருடங்கள் வழிநடத்திய அவருடைய கட்சியான திமுகவே அதிகாரபூர்வமாக இப்படி ஒரு அறிவிப்பை இந்த நிமிடம் வரை வெளியிடவில்லை!!!

தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌர்ந்தரராஜன் கருணாநிதியின் மறைவுக்கு துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக தமிழக பாஜக நிகழ்ச்சிகளை ஒரு வாரத்திற்கு இரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார்!!!

பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை அதிமுக நாடாளுமன்றத்தில் பாஜகவின் ஆதரவு நிலைப்பாட்டையே அனைத்து நிலைகளிலும் எடுத்து வந்திருக்கிறது…

ALSO READ:  ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

இந்நிலையில் ஜெயலலிதா அவர்கள் இறந்த போது அவரது மறைவுக்கு துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் தமிழக பாஜக ஏன் அப்போது தங்கள் நிகழ்ச்சிகளை ஒத்தி வைப்பதாக அறிவிக்கவில்லை?

கருணாநிதி ஜெயலலிதா இருவருமே தமிழக முதல்வராக பதவி வகித்தவர்கள் தான்…

இதில் கருணாநிதி பாஜக கூட்டணியை விட்டு வெளியேறிய பிறகு பண்டாரம் வாஜ்பாய், பரதேசி அத்வானி, ஆக்டோபஸ் மோடி என்று பாஜக தலைவர்களை அநாகரீமாக விமர்சித்தவர்…

ஜெயலலிதாவோ பாஜக தலைவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தவர்!!

இன்று வரையிலும் பாஜகவின் பிரதான அரசியல் எதிரியான காங்கிரஸின் கூட்டணியில் அங்கம் வகிப்பதோடு தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடமாட்டோம் என மேடைகள் முழங்கி வருகிறது திமுக!!!

திமுக இளைய வாரிசான கனிமொழியோ ஒருபடி மேலே சென்று பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பை தமிழகத்திலிருந்து விரட்டி அடிக்க வேண்டும் என்றும் அழிக்க வேண்டும என்று பகிரங்கமாக பேசி வருகிறார்!!!

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கருணாநிதியின் மறைவுக்காக ஒரு வாரகாலம் தமிழக பாஜகவின் நிகழ்ச்சிகளை ஒத்தி வைப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் அறிவித்ததன் பின்னணி காரணம் என்ன

ALSO READ:  மலர்வளையம் வைப்பவர்கள்... சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

கருணாநிதி தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் என்கிற முறையில் அரசியல் நாகரீகம் என்கிற வகையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது நலம் விசாரித்ததும் அவருக்காக பிரார்த்தனை செய்வதாக சொன்னதும் மனிதாபிமான அடிப்படையில் சரி, அவருடைய மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியம் அரசியல் நாகரீகத்தின் அடிப்படையில் சரி !!

அதற்காக தமிழக பாஜகவை திமுகவின் கிளை அமைப்பு போல செயல்பட வைப்பது சரியா

தமிழகத்தில் பாஜகவை கட்டமைத்த காலம் சென்ற முன்னாள் பாஜக தேசிய தலைவர் திரு.ஜனா.கிருஷ்ணமூர்த்தி ஜி அவர்களின் பிறந்த தினத்தன்றோ நினைவு தினத்தன்றோ தமிழக பாஜக மாநில தலைவரோ அல்லது கருணாநிதி மீது அளவற்ற அன்பை பொழியும் திராவிட ஆதரவு பாஜக தலைவர்ளோ வெளிப்படுத்தியது உண்டா?

கட்சிக்காகவும், காவி சிந்தனைகளுக்காகவும் உயிர் நீத்த பலிதானிகளுக்கு செய்யாத மரியாதையை கருணாநிதிக்கு செய்யும் தமிழக பாஜக மாநில நிர்வாகத்தை என்ன சொல்வதென்றே தெரியவில்லை

– பாமர நாடோடி #யாரோ?

ALSO READ:  அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி...!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories