விஜய்கிட்டே திருடி ‘நல’ம் பெற விஷால் முயற்சி!

vishal team - 2026

சென்னை: திருட்டு விசிடிக்கு எதிராக போராடியவர் விஷால். இப்போது, விஜய் இயக்கத்தின் பெயரை அவரே திருடலாமா என்று கேள்வி எழுப்புகின்றனர் நெட்டிசன்கள்.

திடீர் திடீரென கடைகளுக்குள் புகுந்து திருட்டு விசிடி குறித்து சோதனை செய்வதே விஷாலின் அடையாளமாக இருந்தது. அதன் மூலமே தொடக்க காலத்தில் பிரபலம் ஆனார்.

சிடி விற்பனை செய்யும் கடைகளில் அத்துமீறி நுழைவார். ஏதாவது திருட்டு விசிடி கண்ணில் பட்டால் போதும்… உடனே பொங்கிவிடுவார். உன் வீட்டுக்குள் வந்து நான் திருடினா நீ சும்மா இருப்பியா என்று கேட்டு, கேசட் கடைக்காரர்களை ஒரு வழி பண்ணிவிடுவார்.

அதுமட்டுமல்ல… புதுப்படங்கள் வெளியானதும் உடனே இணையதளத்தில் போட்டு விடும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட தளங்களுக்கு சவால் விட்டு போராடினார்.

இப்படி திருட்டு விசிடி, வெப்சைட் என்று அதற்கு எதிராக போராடிய விஷால், அரசியலில் மட்டும் தான் திருட்டுத்தனத்தை செய்வதை அங்கீகரிக்கிறார் போலும் என்று குமுறுகின்றனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ரஜினி காந்த் இதோ இதோ என்று பிலிம் காட்டிக் கொண்டிருந்த நேரத்தில், யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென அரசியல் களத்தில் குதித்த விஜய் காந்த் குறிப்பிடத் தக்க வகையில் வெற்றிக் கொடி நாட்டினார். எதிர்க்கட்சித் தலைவர் ஆனவருக்கு முதல்வர் ஆவது ஒன்றும் இன்றைய சூழலில் பெரிய விஷயம் இல்லைதான்! ஆனால் அவர் உடல் ஒத்துழைக்கவில்லை!

இப்போது விஜய் அரசியல் பாதை போட்டு, சினிமாவெல்லாம் அரசியல் வாடை வீச எடுத்து, தனக்கான ஒரு தளமாக முதலமைச்சர் கனவில் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் சில பல சர்ச்சுகளின் பின்னணியில் ஒரு தடம் போட்டு வைத்திருக்கும் போது, திடீரென களத்தில் புகுந்துள்ளார் விஷால்.

ஆர்.கே.நகரை எட்டினார். அது எட்டிவிட்டது. இப்போது திருப்பரங்குன்றம் எனும் திருப்புமுனையை எதிர்பார்த்திருக்கின்றார். அப்போது சுயேச்சையாக நின்றார். போணியாகவில்லை. இப்போது அமைப்பு, கட்சி என்று இயங்க முடிவு செய்துள்ளார்.

அதன்படி, இன்று அவர் அரசியல் இயக்கத்தை தொடங்கினார். அதற்கு மக்கள் நல இயக்கம் என பெயரிட்டுள்ளார். கட்சியின் பெயரும், லோகோவும் விஜயிடம் இருந்து அப்படியே சுட்டுப் போட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள். இதனால் கோபமடைந்த விஜய் ரசிகர்கள், திருட்டு விசிடிக்கு பொங்கிய விஷால் இப்படி எங்கள் இயக்கத்தின் பெயரையும் லோகோவையும் திருடுவது நியாயமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories