பெட்ரோல் விலையேற்றம்: சில உண்மைகள்

Petrol bunk strike - 2026

அக்டோபர் 4ம் தேதியில் இருந்து ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீஸல் விலையில் ரூபாய் 2னை தனது வரியில் இருந்து குறைத்தது மத்திய பாஜக அரசு. மாநில அரசுகளும் அவர்களுடைய VAT வரியைக் குறைக்குமாறு பாஜக அரசு வேண்டிக் கொண்டது.

பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், மஹாராஷ்ட்ரா, ஹிமாச்சலப் ப்ரதேஷ் மாநிலங்கள் தனது VAT வரியினைக் குறைத்துக் கொண்டன.

பாஜகவிற்கு எதிரான மற்றும் பாஜக-அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள் இந்த VAT வரியினைக் குறைக்க மறுத்துவருகின்றன.

கர்நாடகாவின் முதலமைச்சரான குமாரசாமி தன் எதிர்ப்பைக் காட்ட, மற்றக் கட்சிகள் செய்யத் துணியாத ஒன்றையே செய்தார். தனது மாநிலத்தின் VAT வரியை அவர் மிக மிக அதிகமாக உயர்த்தினார்.

VAT எனும் கொள்ளை வரிக்குப் பதிலாக GST எனும் ஓரளவு நியாயமான வரிவிதிப்பை பாஜக அரசு மாநில அரசுகளின்மேல் திணிக்க முயல்கிறது. அதற்காகவே தனது மத்திய அரசு வரியைக் குறைத்துக் கொண்டால், அதற்கு எதிராக பாஜக அல்லாத மாநில அரசுகள் செயல்படும்; வரி குறைக்காத மாநில அரசுகளின்மேல் மக்களின் கோபத்தைத் தூண்டி விடலாம் எனக் கணக்குப் போட்டது பாஜக்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

இந்தச் சதித் திட்டத்தில், வழக்கம்போல, பாஜக கட்சி மற்றும் அரசுகள் தங்களது பலகீனங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

பலகீனங்கள்: தகவல் தொடர்பு மற்றும் மக்களின் அறியாமை. விளைவாக, இந்தப் பலகீனங்களால் மக்களின் கோபத்தை பாஜக அரசுகளுக்கு எதிராகத் திருப்பிவிட காங்கிரஸ் உள்ளிட்ட எதிரிக் கட்சிகள் மிகப் புத்திசாலித்தனமாக எடுத்த எதிர்வினைதான் இந்த பாரத் பந்த்.

மக்களின் மந்தைக் குணத்தையும், தங்களால் விலைக்கு வாங்க முடிந்த ஊடகங்களின் பொய்யான தகவல்ப் ப்ரச்சாரங்களையும் வைத்துக் கொண்டு, பெட்ரோல் மற்றும் டீஸல் விலையேற்றத்திற்கான பழியை, மத்திய அரசுமேல் சுமத்திவிட்டன காங்கிரஸும் மற்ற கட்சிகளும்.

மந்தை மக்களுக்கு இந்தப் பொய்ச் செய்தியைப் பரப்ப அவர்கள் தேர்ந் தெடுத்ததுதான் இன்றைய பாரத் பந்த்.

இந்தியா முழுவதும் உள்ள வணிகர் சங்கங்களின் தலைவர்களுக்கு இலஞ்சம் கொடுத்து இந்தக் காரியத்திற்கான வெற்றியைப் பெற காங்கிரஸின் 60 ஆண்டுகால சுரண்டலும், மற்றக் கட்சிகளின் ஊழல்களும் உதவும்.

ஊழல் செய்து பணமும் சம்பாதிக்காமல், ஊடகத் தொடர்புகளுக்குப் பணமும் தராமல் பாஜகவினால் தாக்குப் பிடிப்பது கடினமே.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

இருப்பினும், மோதி ஜி எனும் ஆளுமையின்மேலுள்ள நம்பிக்கையால், (அந்த நம்பிக்கையும் மந்தைக் குணமே) பெரும்பாலான பொதுமக்கள் பெட்ரோல் விலையேற்றத்திற்கான பழியை மத்திய அரசின்மேல் சுமத்தத் தயாராக இல்லை.

ஆனால், காங்கிரஸ் மற்றும் எதிரிக் கட்சிகள் தொடர்ந்து பிரச்சாரங்கள் மூலம் மக்களின் அறியாமையைத் தொடர்ந்து பயன்படுத்தினால், மக்கள் மத்திய அரசின்மேல் எதிர்ப்புணர்வு கொள்வது திண்ணம்.

மத்திய அரசின் மக்கள் ஆதரவுப் போக்கு, மற்றும் மாநில அரசுகளின் மக்கள்  விரோதப் போக்கு பற்றி அறிய, இதைப் படித்துப் பாருங்கள்: தி ஹிந்து கட்டுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories