சினிமா விமர்சனம்: சிட்டி வெர்சன் 2.0 எப்படி இருக்கு தெரியுமா?

rajini 2 0 - 2026

செல்போன் டவரில் தூக்குப் போட்டு சாகும் அக்ஷய் குமார். தொடக்கக் காட்சியே இதுதான்.  தொடர்ந்து மறு நாளில் இருந்து தமிழகத்தில் உள்ள செல்போன்களெல்லாம் தொலைந்து போகின்றன. இது எப்படி சாத்தியம் என்று ஓர் ஆராய்ச்சிக்குழு கடுமையாக உழைக்கிறது. அரசாங்கத்தின் கீழ் இந்த ஆராய்ச்சியை செய்யும் போதே பல செல்போன் உரிமையாளர்களும், தொடர்ந்து தொலைபேசித்துறை அமைச்சரும் சாகிறார்கள்.

இந்நிலையில் வேறு வழியின்றி சிட்டியை மீண்டும் கொண்டு வர திட்டமிடுகிறார்கள். சிட்டி வெர்சன் 2, அக்ஷய் குமாரின் சதிகளை  எப்படி முறியடிக்கிறது என்பதுதான் தொழில்நுட்ப சாசகங்களை முன்வைத்து ஷங்கர் சொல்லியிருக்கும் பிரமாண்ட காட்சியமைப்புடன் கதை!

மொபைல்போன், நெட்வொர்க் வளர்ச்சி நம் வாழ்வில் எத்தனை ஆபத்துகளை தருகிறது, அதை விட நம் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதிக்கின்றது, பறவையின் அழிவு, மனித இனத்தின் அழிவிற்கான தொடக்கம் என ஆர்வலர்கள் பலரும் முன்வைக்கும் கருத்துகளை அசத்தலாகப் பதிய வைக்கிறார் ஷங்கர்.

வெர்சன் 1.0 போலவே, ரஜினியின் வசீகரன் கதாபாத்திரம் சற்று வார்த்தைகளில் தடுமாற்றம். சிட்டி வெர்சன் 2.0 வந்த பின் சூடு பிடிக்கத் தொடங்குகிறது காட்சி அமைப்புகள். இடைவேளைக்குப் பின்னர் வரும் அக்ஷய்  குமாரின்  ப்ளாஷ்பேக் காட்சிகள் ரசிக்க வைக்கிறது! எமி ஜாக்சன் வழக்கம் போல் வந்து போகும் கதாபாத்திரம்தான்! பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை!

ALSO READ:  சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

சிட்டி வெர்சன் 2.0 படத்துக்காக உழைத்த கிராபிக்ஸ் டீமுக்கு நம் பாராட்டு. 3டி தொழில்நுட்பத்தின் அழகை ரசித்துச் செய்திருக்கிறார்கள்.  கிளைமேக்ஸில் புல்லட் பறப்பது, பறவை அருகில் வருவது என  ஹாலிவுட் தரத்துக்கு நம்மை ஈர்க்கிறது.

சிட்டி வெர்சன் 2.0வை சுட்டி 2.0 என்றே சொல்லலாம். சுட்டித்தனமாக செய்வது, அதுவும் ஷங்கரின் கற்பனைகளை குறிப்பாக கொலைக் காட்சிகளில் சர்வ சாதாரணமாக வித்தியாசமான கோணத்தில் எல்லாம் செய்வது, வழக்கம் போல் பிரமாண்டத்தில் லாஜிக் மீறல்கள்.

ஷங்கரின் பிரமாண்டத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில், ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை வழக்கமான பிரமாண்டம், பிரமிப்பு எல்லாம்தான்! ரஜினி, ஷங்கர், ரகுமான் இவர்களை மீறி, படத்தில் முழுக்க முழுக்கத் தெரிவது டெக்னிகல் குழுதான்!  சூப்பர் ஸ்டார் நீண்ட நாட்களுக்கு பிறகு ஸ்டைலில் புகுந்து விளையாடியிருக்கிறார். அக்ஷய் குமாருக்கு மேக்கப் போடுவதே கூட கடுமையான சவால்தான்! அதையும் தாங்கிக் கொண்டு சரியாகச் செய்திருக்கிறார் மனுசன்.

வழக்கம் போல் லாஜிக் மீறுதல்கள், பாசிட்டிவ் நெகட்டிவ் எனர்ஜி கதைகள், புரியாத மொழியில் கதைவிடும் காதிலே பூ சமாசாரங்கள் எல்லாம் ரஜினிக்காகவும் ஷங்கருக்காகவும் நாம் தாங்கித்தான் ஆக வேண்டும்!

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

நீங்க நல்லவரா கெட்டவரா…? என்று கேட்டு… தெரியலியேப்பா என்று  பதில் சொல்லும் ரகத்தில், அக்ஷய் குமாரை கொடூரமாகக் ப்ளாஷ்பேக்கில் பரம சாதுவாகக் காட்டி அந்தக் கேள்வியை நம் மனதில் கேட்க வைத்திருக்கிறார் ஷங்கர். சரிங்க… ஷங்கர், நாங்க மொபைல் போன்ல உங்க படத்தை பாக்க மாட்டோம்.. நிச்சயமா..! ஆனா மொபைல் போன்ல யாருக்காச்சும் போன் பண்ணலாமா வேணாமா அதையாவது சொல்லுங்க ஷங்கர்!  பீதிய கெளப்பி விட்டுட்டீங்களே… என்று சொல்லத் தோன்றுகிறது.

சிட்டி வெர்சன் 2.0 பாசிட்டிவ் எனர்ஜியால் சிட்டி வெர்சன் 3.0வுக்கு மாறினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories