கேள்வியும் பதிலும்: ஏசு பிரஜாபதியா?

கேள்வியும் பதிலும்: ஏசு பிரஜாபதியா?

தெலுங்கில்: ப்ரஹ்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்

கேள்வி:
சமீபத்தில் கிறிஸ்தவர்கள் தம் மதம் சுதேசி மதமே என்று கூறிக் கொண்டு துண்டு காகிதங்கள் அச்சடித்து வினியோகம் செய்தார்கள். அவற்றில் அவர்களின் ஏசுவே பிரஜாபதி என்றும், தன்னைத்தானே தியாகம் செய்து கொண்ட மக்கள் தலைவனைப்பற்றி வேதத்தில் வர்ணித்துள்ளார்கள் என்றும் கூறியுள்ளர்கள். உண்மையா?

samavedam 1 - 2026பதில்:
இது ஒரு தீய எண்ணத்தோடு கூடிய துஷ்டத் தனமான வியூகமே! வேத வாக்கின் மேல் நம்பிக்கை உள்ள இந்தியர்களையும் தேச பக்தி உள்ளவர்களையும் மதம் மாற்றுவதற்குச் செய்து வரும் கற்பனைகளில் இதுவும் ஒன்று. நம் நாட்டு மக்கள் இப்படிச் சொன்னால் ஆர்வம் காட்டுவார்கள் என்று ஆசை.

இவர்களுக்கு சமீப காலமாக குரங்கு கையில் தேங்காய் கிடைத்தாற்போல மொழிபெயர்ப்பு செய்த வேத புத்தகங்கள் சில கிடைத்துள்ளன. அவற்றை அங்கங்கே படித்து, தலையோ வாலோ இன்றி பைத்தியக்காரத்தனமாக புரிந்து கொண்டுள்ளார்கள். தன்னைத்தானே தியாகம் செய்து கொண்ட சிபி சக்ரவர்த்தி, ரந்தீ தேவன், ததீசி மகரிஷி போன்ற எத்தனையோ தியாக சீலிகளைப் பற்றி நம் வைதீக இலக்கியம் கூறுகிறது. அவர்கள் அனைவரும் பிரஜாபதிகளா?

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

தம் மதம் பாரதீய மதமே என்று நம்ப வைப்பதற்கு பாரதீய நூல்களில் உள்ள வாக்கியங்களோடு பாரதீய நடை உடை பாவனைகளோடு புதிய ‘இந்தியன் பைபிளை’க் கூட தயாரித்துள்ளார்கள். ஆனால் இதனை இந்தியாவுக்காக மட்டுமே தயாரித்து வைத்துள்ளார்கள். அவர்களுடையது வைதீக மதமே என்றும் அவர்களின் மத மூல நூல்கள் பாரத தேசத்துடையனவே என்றும் உலகளாவிய விதமாக அவர்களின் போப்பண்டவரை பிரகடனம் செய்யச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடி போட்டு நம்மை வஞ்சிப்பது எதற்காக? அவர்களுடையது கூட வைதீக மதமே என்றால் மத மாற்றம் செய்வது எதற்காக? அவர்களே வைதீக மதமான ஹிந்து மதத்திற்கு மாறி விடலாமே! பெயர் வழி முறைகள் மத பழக்க வழக்கங்கள் மாற்றங்கள் எல்லாம் எதற்கு? மேல் நாட்டிலிருந்து வரும் பணத்திற்காக இந்த ஆட்டம் ஆடுவானேன்? மேல் நாட்டில் பிறந்து வளர்ந்த மதத்தை எங்கோ ஒரு வேத வாக்கியத்தோடு முடிச்சு போடும் முயற்சி எதற்காக? அதி புத்திசாலித்தனத்தோடு முயற்சித்தால் நாத்திக மத வாக்கியங்கள் வேதத்தில்கூட கிடைக்கும். அதற்காக வைதீக மதத்தை நாத்திக மதம் என்று கூறி பாவத்தை மூட்டை கட்டிக் கொள்லலாமா?

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 11 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் தீவிர மத மாற்றத்தின் பரிணாமங்கள் இவை. கிறித்தவர்களாக மாறியவர்களின் பட்டியலை அதிகமாக்கிக் கொண்டு வருகிறார்கள். வேத மதமே அவர்களுடையது என்றால் பாப்டிசம் எதற்காக? எப்படியும் நாம் அனைவரும் பிறப்பிலேயே வேத மதமான இந்து மதத்தவர்களே அல்லவா?

நம் தெய்வங்களோடு கூட அவர்களின் தூதரின் படம் கூட சேர்த்து வைத்து நாம் மதம் மாறாமலே அவர்களை கௌரவித்தால் ஒப்புக் கொள்வார்களா? அவர்களுக்குத் தேவையானது மத மாற்றமே. நேற்று வரை ஹிந்து மதத்தை பலப் பல கெட்ட வார்த்தைகளால் நிந்தித்து விட்டு தற்போது உங்களில் ஒருவனே நான் என்று வஞ்சனை செய்வது வெட்கங்கெட்டதனம்.

நானும் உங்களை சேர்ந்தவனே என்று வீட்டில் புகுந்து கொள்ளையடிக்கும் திருட்டு வழிமுறை இது. இவற்றை புத்திசாலித்தனமாக திருப்பி அடிக்க வேண்டும். நமக்கு பிற மதங்களில் மேல் கௌரவம் இருக்கிறது. ஆனால் அதனை கௌரவிப்பதற்கு நம் மதத்தை விட்டுவிடவும் தேவையில்லை. நம் மதத்தோடு கலக்கவும் தேவையில்லை!

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Entertainment News

Popular Categories