நடுஇரவில் எந்த விளக்கும் இன்றி பேட்டிங் செய்து ரன் அடிக்கும் திறமை பெற்றவர் கோலி: கவாஸ்கர் பாராட்டு

Published:

விராத் கோலியால் நடுஇரவில் எந்த விளக்கும் இன்றி பேட்டிங் செய்து ரன் அடிக்க முடியும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் கிரிக்கெட் தொடரில் விராத் கோலியின் ஆட்டம் சிறப்பாக உள்ளது. இன்று நடந்த 2-வது T-20 போட்டியில் அவர் வேகமாக விளையாடி அரை சதம் அடித்தார். அவரது ஆட்டம் எதிர்கால வீரர்களுக்கான இலக்கை அதிகரித்து கொண்டே போகிறது. கோலியால்  நடுஇரவில் எந்த விளக்கும் இன்றி பேட்டிங் செய்து ரன் அடிக்க முடியும்” என்றார். 

Related articles

Recent articles

spot_img