மன்னார்குடியை சேர்ந்த பிரகாஷ் என்ற வாலிபரும், அதே பகுதியை சேர்ந்த நந்தினி என்ற பெண்ணும் ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனனர்.
இந்நிலையில் இருவீட்டார் சம்மதத்தோடு சமீபத்தில் இருவரும் திருமணம் முடிந்துள்ளது. திருமணமான 26 நாட்களில் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. மேலும், திருமணத்தின்போது பெண் வீட்டார் ப்ரகாஷிற்கு புது மோட்டார் பைக் வாங்கி கொடுத்துள்ளனனர்.அந்த பைக்கை பிரகாஷ் விற்க முற்பட்டுள்ளார்.பிறந்த வீட்டீலிருந்து சீதனமாக வந்ததை விற்க எந்த பெண்தான் சம்மதிப்பாள். மோட்டார் பைக்கை விற்க கூடாது என நந்தினி சண்டை போட்டுள்ளார்.
இப்படி இருவருக்கும் இடையே தினமும் சண்டை வந்துள்ளது. இதனால் மனமுடைந்த நந்தினி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.