சுபாஷிதம்: பொய்மையும் வாய்மையும்!

subhashitam_1-5
subhashitam_1-5

சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்!108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பி.எஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

94. பொய்மையும் வாய்மையிடத்த!

ஸ்லோகம்:

சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் சத்யமப்ரியம் |ப்ரியம் ச நான்ருதம் ப்ரூயாத் ஏஷ தர்மஸ்ஸநாதன: ||
– மனுஸ்மிருதி 4 -138.

பொருள்:

உண்மையே பேசவேண்டும். இனிமையாக பேசவேண்டும். பிரியம் இல்லாதவற்றை உண்மையானாலும் பேசக்கூடாது. இனிமையாக இருக்கிறது என்பதற்காக பொய் பேசக்கூடாது. இது சனாதன தர்மம்.

விளக்கம்:

உண்மை பேசுவதற்கு சனாதன தர்மத்தில் மிகச் சிறந்த இடம் உள்ளது. சத்யமேவ ஜெயதே என்பதை கொள்கையாகக் கொண்ட தேசம் இது. உண்மையைச் சொல்வதில் உள்ள தர்ம சூட்சுமங்களை மனு இவ்வாறு விளக்குகிறார்.

உண்மை உரைப்பதில் சில இடங்களில் நமக்கு சிரமம் ஏற்படலாம். ஆனாலும் சத்தியத்தை விடக்கூடாது. பிறருக்கு துன்பம் விளைவிக்குமானால் உண்மையாக இருப்பினும் கசப்பான உண்மையை பேசக்கூடாது. உதாரணத்திற்கு ஒரு பரம ஏழையைப்  பார்த்து நீ ஒரு தரித்திரம் பிடித்தவன் என்பது கசப்பாக உரைக்கும் சத்தியம். அதுபோலவே மகிழ்ச்சி அளிக்கும் என்பதற்காக பொய் உரைக்கவே கூடாது.

இந்த தர்ம சூட்சுமத்திற்கு உதாரணமாக நெடுங்காலமாக ஒரு கதை கூறப்படுகிறது. ஒரு வனத்தில் தனியாக உள்ள ஒரு பெண்ணை சில திருடர்கள் துரத்தி வந்தார்கள். அவள் அங்கிருந்த ஒரு முனிவரின் குடீரத்தில் தற்காப்புக்காக ஒளிந்து கொண்டாள். திருடர்கள் வந்து ‘ஒரு பெண் இந்த பக்கம் வந்தாளா?’ என்று முனிவரிடம்  கேட்டனர்.

உண்மையைக் கூறினால் அந்த பெண்ணிற்கு ஆபத்து நேரும். பொய் உரைத்தால் பாபம் சூழும். என்ன செய்வது? இந்த தர்மசங்கடத்தில் அந்த முனிவர் தன் புத்தி கூர்மையை பயன்படுத்தினார். “பார்க்கும் கண்கள் பேசாது! பேசும் வாய் பார்க்காது! இதை விட வேறென்ன சொல்ல?” என்றாராம். திருடர்கள் அவரைப் பைத்தியம் என்று நினைத்து விலகிச் சென்றனர். அந்தப் பெண் காப்பாற்றப்பட்டாள். இது சமத்காரமான ஒரு கதை.

ஆனால் உயிர், மானம் போன்றவற்றை காப்பாற்றிக் கொள்வதற்கு பொய் கூட உண்மையின் பலனை அளிக்கும் என்று புராண இதிகாசங்கள் விளக்குகின்றன. பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்குமெனின் என்று வள்ளுவன் உரைக்கவில்லையா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories