சுபாஷிதம்: பொய்மையும் வாய்மையும்!

subhashitam_1-5
subhashitam_1-5

சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்!108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பி.எஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

94. பொய்மையும் வாய்மையிடத்த!

ஸ்லோகம்:

சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் சத்யமப்ரியம் |ப்ரியம் ச நான்ருதம் ப்ரூயாத் ஏஷ தர்மஸ்ஸநாதன: ||
– மனுஸ்மிருதி 4 -138.

பொருள்:

உண்மையே பேசவேண்டும். இனிமையாக பேசவேண்டும். பிரியம் இல்லாதவற்றை உண்மையானாலும் பேசக்கூடாது. இனிமையாக இருக்கிறது என்பதற்காக பொய் பேசக்கூடாது. இது சனாதன தர்மம்.

விளக்கம்:

உண்மை பேசுவதற்கு சனாதன தர்மத்தில் மிகச் சிறந்த இடம் உள்ளது. சத்யமேவ ஜெயதே என்பதை கொள்கையாகக் கொண்ட தேசம் இது. உண்மையைச் சொல்வதில் உள்ள தர்ம சூட்சுமங்களை மனு இவ்வாறு விளக்குகிறார்.

உண்மை உரைப்பதில் சில இடங்களில் நமக்கு சிரமம் ஏற்படலாம். ஆனாலும் சத்தியத்தை விடக்கூடாது. பிறருக்கு துன்பம் விளைவிக்குமானால் உண்மையாக இருப்பினும் கசப்பான உண்மையை பேசக்கூடாது. உதாரணத்திற்கு ஒரு பரம ஏழையைப்  பார்த்து நீ ஒரு தரித்திரம் பிடித்தவன் என்பது கசப்பாக உரைக்கும் சத்தியம். அதுபோலவே மகிழ்ச்சி அளிக்கும் என்பதற்காக பொய் உரைக்கவே கூடாது.

ALSO READ:  அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த தர்ம சூட்சுமத்திற்கு உதாரணமாக நெடுங்காலமாக ஒரு கதை கூறப்படுகிறது. ஒரு வனத்தில் தனியாக உள்ள ஒரு பெண்ணை சில திருடர்கள் துரத்தி வந்தார்கள். அவள் அங்கிருந்த ஒரு முனிவரின் குடீரத்தில் தற்காப்புக்காக ஒளிந்து கொண்டாள். திருடர்கள் வந்து ‘ஒரு பெண் இந்த பக்கம் வந்தாளா?’ என்று முனிவரிடம்  கேட்டனர்.

உண்மையைக் கூறினால் அந்த பெண்ணிற்கு ஆபத்து நேரும். பொய் உரைத்தால் பாபம் சூழும். என்ன செய்வது? இந்த தர்மசங்கடத்தில் அந்த முனிவர் தன் புத்தி கூர்மையை பயன்படுத்தினார். “பார்க்கும் கண்கள் பேசாது! பேசும் வாய் பார்க்காது! இதை விட வேறென்ன சொல்ல?” என்றாராம். திருடர்கள் அவரைப் பைத்தியம் என்று நினைத்து விலகிச் சென்றனர். அந்தப் பெண் காப்பாற்றப்பட்டாள். இது சமத்காரமான ஒரு கதை.

ஆனால் உயிர், மானம் போன்றவற்றை காப்பாற்றிக் கொள்வதற்கு பொய் கூட உண்மையின் பலனை அளிக்கும் என்று புராண இதிகாசங்கள் விளக்குகின்றன. பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்குமெனின் என்று வள்ளுவன் உரைக்கவில்லையா?

ALSO READ:  எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories