காம்ப்ரமைஸ் ஆன நந்தினி சீரியல் நடிகை; நடிகர் மீதான பாலியல் புகார் வாபஸ்!

திருவள்ளூர்:  நந்தினி தொலைக்காட்சி சீரியலில் நடித்து வரும் நடிகை ராணி, திரைப்பட நடிகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியிருந்தார். அதனை நேற்று வாபஸ் பெற்றார்.

திரைப்பட நடிகை ராணி செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்து ஓரு மணி நேரத்தில் தன்னிடம் திரைப்பட நடிகர் மன்னிப்பு கேட்டதால் புகாரை வாபஸ் பெற்றதாக அறிவித்தார். நடிகையிடம் நான் மன்னிப்பு கேட்கவில்லை; நடிகை தன் மீது தவறான நோக்கில் புகார் அளித்து வாபஸ் பெற்றதாக திரைப்பட நடிகர் குற்றம் சாட்டினார். காவல் நிலையத்தில் சினிமா காட்சி போல் நடந்த புகார் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

நாட்டாமை, ஜெமினி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ராணி தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் நந்தினி என்ற நெடும்தொடரில் திரைப்பட நடிகர் சண்முகநாதன் உடன் ஜோடியாக நடித்து வருகிறார்.

maxresdefault 14 - 2026

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் படப்பிடிப்பு நடந்துகொண்டு இருந்த போது சண்முகநாதன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதனை தட்டிக்கேட்ட தனது கணவர் பிரசாத்தையும் சண்முகநாதன் தாக்கியதாகவும், தன்னை தகாத வார்த்தைகளால் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் சண்முகநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி, செங்குன்றம் காவல் நிலையத்தில் நடிகை ராணி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப் பட்டது.

ALSO READ:  சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தொடர்ந்து, சண்முகநாதணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். சக நடிகர் மீது திரைப்பட நடிகை பாலியல் புகார் அளித்த சம்பவம் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியது

இதனை அடுத்து திடீரென மீண்டும் காவல் நிலையத்திற்கு வந்த நடிகை ராணி, நடிகர் சண்முகநாதன் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாக காவல் நிலையத்தில் தெரிவித்ததை அடுத்து புகாரை திரும்ப பெற்றுக்கொண்டார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ராணி தான் நடித்து வரும் நத்தினி நெடும்தொடரை நம்பி 350 குடும்பங்கள் இருப்பதாகவும், நடந்த சம்பவத்திற்காக என்னிடமும் எனது கணவரிடமும் நடிகர் மன்னிப்பு கேட்டதால் தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டேன் எனவும் தெரிவித்தார்.

இதே போன்று நடிகர் சண்முகநாதன் நான் இந்த நந்தினி நெடும்தொடரில் கடந்த இருபது நாட்களாக நடித்து வருகிறேன்! எனக்கும் நடிகை ராணிக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தது அது கைகலப்பாக மாறியது! அதன் பின்னர் அவர் என் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் ஆனால் நான் பாலியல் தொந்தரவு எல்லாம் கொடுக்கவில்லை. நான் இதற்காக மன்னிப்பு கேட்கவில்லை! நடிகை என் மீது தவறான நோக்கில் புகார் அளித்து என் மீது கொடுக்கப்பட்ட புகாரை திரும்ப பெற்றுக்கொண்டார் என திரைப்பட நடிகர் சண்முகநாதன் குற்றசாட்டு தெரிவித்தார்.

ALSO READ:  தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

இதனை அடுத்து நடிகை ஒருவர் நடிகர் மீது பாலியல் புகார் கூறி காவல் நிலையத்தில் படியேறிய சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோல், காவல்நிலையத்தில் சினிமா காட்சி போல் நடந்த புகார் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories