காம்ப்ரமைஸ் ஆன நந்தினி சீரியல் நடிகை; நடிகர் மீதான பாலியல் புகார் வாபஸ்!

திருவள்ளூர்:  நந்தினி தொலைக்காட்சி சீரியலில் நடித்து வரும் நடிகை ராணி, திரைப்பட நடிகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியிருந்தார். அதனை நேற்று வாபஸ் பெற்றார்.

திரைப்பட நடிகை ராணி செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்து ஓரு மணி நேரத்தில் தன்னிடம் திரைப்பட நடிகர் மன்னிப்பு கேட்டதால் புகாரை வாபஸ் பெற்றதாக அறிவித்தார். நடிகையிடம் நான் மன்னிப்பு கேட்கவில்லை; நடிகை தன் மீது தவறான நோக்கில் புகார் அளித்து வாபஸ் பெற்றதாக திரைப்பட நடிகர் குற்றம் சாட்டினார். காவல் நிலையத்தில் சினிமா காட்சி போல் நடந்த புகார் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

நாட்டாமை, ஜெமினி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ராணி தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் நந்தினி என்ற நெடும்தொடரில் திரைப்பட நடிகர் சண்முகநாதன் உடன் ஜோடியாக நடித்து வருகிறார்.

maxresdefault 14 - 2026

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் படப்பிடிப்பு நடந்துகொண்டு இருந்த போது சண்முகநாதன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதனை தட்டிக்கேட்ட தனது கணவர் பிரசாத்தையும் சண்முகநாதன் தாக்கியதாகவும், தன்னை தகாத வார்த்தைகளால் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் சண்முகநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி, செங்குன்றம் காவல் நிலையத்தில் நடிகை ராணி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப் பட்டது.

ALSO READ:  சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

தொடர்ந்து, சண்முகநாதணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். சக நடிகர் மீது திரைப்பட நடிகை பாலியல் புகார் அளித்த சம்பவம் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியது

இதனை அடுத்து திடீரென மீண்டும் காவல் நிலையத்திற்கு வந்த நடிகை ராணி, நடிகர் சண்முகநாதன் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாக காவல் நிலையத்தில் தெரிவித்ததை அடுத்து புகாரை திரும்ப பெற்றுக்கொண்டார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ராணி தான் நடித்து வரும் நத்தினி நெடும்தொடரை நம்பி 350 குடும்பங்கள் இருப்பதாகவும், நடந்த சம்பவத்திற்காக என்னிடமும் எனது கணவரிடமும் நடிகர் மன்னிப்பு கேட்டதால் தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டேன் எனவும் தெரிவித்தார்.

இதே போன்று நடிகர் சண்முகநாதன் நான் இந்த நந்தினி நெடும்தொடரில் கடந்த இருபது நாட்களாக நடித்து வருகிறேன்! எனக்கும் நடிகை ராணிக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தது அது கைகலப்பாக மாறியது! அதன் பின்னர் அவர் என் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் ஆனால் நான் பாலியல் தொந்தரவு எல்லாம் கொடுக்கவில்லை. நான் இதற்காக மன்னிப்பு கேட்கவில்லை! நடிகை என் மீது தவறான நோக்கில் புகார் அளித்து என் மீது கொடுக்கப்பட்ட புகாரை திரும்ப பெற்றுக்கொண்டார் என திரைப்பட நடிகர் சண்முகநாதன் குற்றசாட்டு தெரிவித்தார்.

ALSO READ:  ‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

இதனை அடுத்து நடிகை ஒருவர் நடிகர் மீது பாலியல் புகார் கூறி காவல் நிலையத்தில் படியேறிய சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோல், காவல்நிலையத்தில் சினிமா காட்சி போல் நடந்த புகார் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories