என் பெயரில் இயங்கும் போலி டிவிட்டர் கணக்கை முடக்க உதவுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் கவிஞர் தாமரை.
அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தகவல்… 17.12.18. Fake Twitter Account ‘PoetThamarai’….. எச்சரிக்கை !. ‘ PoetThamarai’ என்ற பெயரில் 50000க்கும் அதிகமான ரசிகர்களோடு இயங்கி வரும் டுவிட்டர் கணக்கு என்னுடையது அல்ல !. பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து இயங்கி வரும் இந்தப் போலியை முடக்க உதவி செய்யுங்கள். டுவிட்டரில் உள்ளவர்கள் அந்தப் போலி குறித்து டுவிட்டர் நிறுவனத்துக்குப் புகார் அளிக்க வேண்டுகிறேன்.