ஹிந்துக்களின் உண்டியல் காசை… ஹிந்து அல்லாதோருக்கு வாரிவழங்கிய அறங்கெட்ட துறை!

Published:

srirangam lights given to muslims - 2026
#image_title

அரங்கன் ஆலய நிர்வாகத்தின் அநியாயம்.
பீர் முகமதுக்கு எலக்ட்ரிக்கல் கான்ட்ராக்ட்.

ஹிந்துக்களின் உண்டியல் காசு வேற்று மதத்தினருக்கு அறங்கெட்ட துறை வாரி வழங்கல்….

இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி ஹிந்து அல்லாதோருக்கு கடைகளோ, குத்தகை நிலங்களை அல்லது திருக்கோவிலுக்குள் பணி செய்ய உரிமம் கோர முடியாது….
ஆனால் இன்று கைசிக ஏகாதசியையொட்டி கிளி‌ மண்டபம் மற்றும் திருக்கோவிலின் உட்பிரகாரத்தில் மின் விளக்குகள், சீரியல் செட்கள் போடப்பட்டுள்ளது.

இந்த உரிமமானது திருச்சி பால்பண்ணை அருகே செயல்படும் S .P. M கம்பெனிக்கு வழங்கப்பட்டுள்ளது, இந்த கம்பெனியை நடத்தி வருபவர் பீர்‌முகம்மது என்கின்ற இசுலாமியர்

வேற்று மதத்தினர் திருக்கோலிலுக்குள் வரக்கூடாது என்று சட்டம் உள்ளது, அப்படியே வந்தாலும் குறிப்பிட்ட இடம் வரையிலே தான் அனுமதி, ஆனால் திருக்கோவிலின் கொடி மரம் தாண்டி பிரதான இடமான கிளி மண்டபத்திற்கு எப்படி அனுமதி அறங்கெட்ட துறையால் அனுமதிக்கப்பட்டது

சட்டம் தெரியாத இவர்கள்‌ எப்படி திருக்கோவிலை காப்பாற்றுவார்கள் இந்த, இந்த சீர்கேடான பணிக்கு துணை போனது‌ யார் என கண்டறிந்து அவர்களை இந்து சமய அறநிலையத்துறை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்
திருக்கோவிலின் நிர்வாக அலுவலரை வன்மையாக கண்டிப்பதோடு அவரை திருக்கோவில் பணியிலிருந்து மாற்ற வேண்டும்

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

ஹிந்துக்களின் உண்டியல் பணம், ஹிந்துக்களுக்கு மட்டுமே… மேலும் யாராக இருந்தாலும் மாற்று மதத்தினரை பணி செய்ய திருக்கோலிலுக்குள் அனுமதியளிக்க கூடாது…
வேலியே பயிரை மேய்கிறது…. வேடிக்கை பார்க்கும் ஹிந்துவே எப்பொழுது குரல் கொடுக்க வரப்போகிறாய்…

  • பா.சரவணகார்த்திக், (விசுவ ஹிந்து பரிஷத்)

Related articles

Recent articles

spot_img