காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி-35): லண்டனில் கைதான சாவர்க்கர்

veer savarkkar - 2026

’ ஸ்காட்லந்து யார்ட் ‘ போலீசாரின் கழுகுப் பார்வை,சாவர்க்கரை தொடர்ந்து கொண்டிருந்த போது, பாரதத்தில் அகமதாபாத்திற்கு, நவம்பர் 14, 1909 அன்று வருகை தந்த வைஸ்ராய் மிண்டோ மீது வெடிகுண்டு வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.

வெடிகுண்டு வீசிய நபரைக் கண்டு பிடிக்க போலீசார் முயன்று கொண்டிருக்கும் போதே வேறு ஒரு சம்பவம் நிகழ்ந்தது. சாவர்க்கரின் சொந்த ஊரான நாஸிக்கில்,கன்ஹரே என்பவன் பிரிட்டிஷ் கலெக்டர் A.M.T. ஜாக்ஸனை சுட்டுக் கொன்றான்.

’’ சாவர்க்கரின் அண்ணன் பாபுராவிற்கு ஆயுள் தண்டனை கொடுத்து நாடு கடத்திய தற்கு பழிவாங்க ….’’ எனக் காரணம் கூறப்பட்டது’

ஜாக்ஸனை கொல்ல கன்ஹரே பயன்படுத்திய கைத்துப்பாக்கி, சாவர்க்கர் லண்டனிலிருந்து அனுப்பியது என போலீசார் சந்தேகித்தனர்.

ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த சில பத்திரிகைகள், ‘இது போன்ற தீவிரவாதச் செயல்களுக்கு பின்னணியாக இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும், காரணகர்த்தாவான சாவர்க்கரை’ கைது செய்து தண்டிக்க வேண்டும் என தலையங்கங்கள் எழுதின.

சாவர்க்கர் கைது செய்யப்படுவது உறுதி என்று உணர்ந்த அவருடைய நண்பர்கள், பாரீஸில் தங்கியிருக்கும்படியாக அவருக்கு அறிவுறுத்தி அங்கு அனுப்பி வைத்தனர்.

பாரீஸில் சில வாரங்கள் தங்கியிருந்த சாவர்க்கர், அங்கிருந்த செல்வாக்குமிக்க இந்தியர்களிடையே தேசிய உணர்வை ஊட்டிக் கொண்டிருந்தார். ஆனால் பாரிஸ் வாழ்க்கையில் சாவர்க்கருக்கு அலுப்பு தட்டியது.

பாரதத்திற்கு திரும்பி,தன் போராட்டத்தை, தன் சொந்த பூமியிலேயே தொடர வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் பாரதத்திற்குள் நுழைய அவருக்கு தடை விதிக்கப் பட்டிருந்ததால், நாட்டிற்குள் நுழைந்தவுடனேயே தான் கைது செய்யப் படுவோம் என்று அவர் உணர்ந்தே இருந்தார்.

திடீரென லண்டனுக்கு திரும்பிச் செல்ல அவர் முடிவு செய்தார். தன்னுடைய காதலியான மார்க்ரெட் லாரன்ஸை சந்திக்கவே லண்டன் திரும்பினார் என பலரும் கருதினர்.

உண்மையில் மார்க்ரெட் லாரன்ஸை அவர் தன் வாழ்க்கையில் மீண்டும் சந்திக்கவே இல்லை ! அவருடைய ரயில் விக்டோரியா ரயில் நிலையத்தை அடைந்தவுடனேயே அவர் கைது செய்யப்பட்டார்.

பிரிக்ஸ்டன் சிறைச்சாலையில் அடைக்கப் பட்டிருந்த அவரிடம், பாரதத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதற்கான வாரண்ட் வழங்கப்பட்டது. ஆங்கிலேயே அரசு அவர் மீதான அரசிற்கு எதிரான நடவடிக்கைகள் வழக்கை பாரதத்தில் நடத்த முடிவு செய்தது.

பம்பாய் போலிஸ் துணைக் கண்காணிப்பாளர் C.L.POWER தலைமையில் ஒரு படை அவரை கைது செய்து அழைத்து வர லண்டன் விரைந்தது. ஸ்காட்லண்ட் யார்ட் போலிசார்,துப்பறியும் இன்ஸ்பெக்டர் எட்வர்ட் ஜோச் பார்க்கரை உடன் அனுப்பினர்.

பாரதத்தை நோக்கி… ஒரு கைதியாக சாவர்க்கரின் பயணம் தொடங்கியது

( தொடரும் )

எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories