மேரி கோமுக்கு அரிய கௌரவம்!

Published:

IMG 20191031 WA0019 - 2026

வரும் ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பாகமாக பாரதத்தின் ஸ்டார் பாக்சர் ஆறு முறை உலக சாம்பியன்ஷிப் வென்ற மேரி கோமுக்கு அரிய கௌரவம் கிடைத்துள்ளது.

இந்த மெகா நிகழ்ச்சிக்கு தொடர்புடைய 10 அம்பாசிடர்களில் மேரி கோம் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

மகளிர் அதெலடிக் பிரிவில் ஆசியாவிலிருந்து மேரி கோம் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் மிக அதிக பதக்கங்களை வென்ற பாக்ஸராக ரிகார்டு சாதித்த மேரி கோம் … ஐந்து முறை ஆசியா சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார்.

தன் 51 கிலோ கேட்டகிரியில் காமன்வெல்த் போட்டிகளில் கோல்ட் மெடலோடு ஆசியா கேம்ஸ் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

அதனால் மேரி கோமை ஆசியாவிலிருந்து மகளிர் பிரிவில் அம்பாசிடராக நியமிக்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ( ஐஓசி) தீர்மானித்துள்ளது.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img