குப்பைத் தொட்டியில் மர்மப் பொருள் திடீர் வெடிப்பு! பெண் படுகாயம்!

Published:

explosion in dust bin - 2026

ஹைதராபாத் நகரில், குப்பைத் தொட்டியில் திடீரென மர்ம பொருள் வெடித்ததால், குப்பை பொறுக்கச் சென்ற பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். சத்தம் கேட்டு மக்கள் பதற்றம் அடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. .

ஹைதராபாத் நகரில் மீர்பேட் விஜயநகர் காலனியில் ஒரு குப்பைத் தொட்டியில் மர்மப் பொருள் வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் குப்பையை சேகரித்து கொண்டிருந்த ஒரு பெண் தீவிரமாக காயமடைந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

அந்தப் பெண் ஒரு டப்பாவைத் திறக்க முயற்சி செய்தார் என்றும், அதில் ரசாயனங்கள் நிறைந்திருந்தது என்றும், அப்போதுதான் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாகவும் நகர போலீஸார் கூறியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த துப்புத் துலக்கும் குழுவினர் வெடிப்பு சம்பவம் குறித்து விவரங்களை சேகரித்து வருகின்றனர். காயமடைந்த பெண்மணி தேவரகொண்டாவைச் சேர்ந்த நிர்மலா என்று தெரியவந்துள்ளது.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img