புது தில்லி: நிலம் கையகப் படுத்தும் மசோதா தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம் மறுபிரகடனம் செய்யப்பட்டது. முன்னதாக இந்தச் சட்டம் வரும் ஏப்.5ஆம் தேதியுடன் காலாவதியாவதால், இந்த அவசரச் சட்டத்தை மறுபிரகடனம் செய்ய மத்திய அரசு முயற்சி செய்தது. மக்களவையில் நிறைவேற்றப் பட்ட இந்தச் சட்டத்துக்கு மாநிலங்களவையில் ஒப்புதல் கிட்டவில்லை. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இந்த அவசரச் சட்டத்தை மறுபிரகடனம் செய்ய அரசு முடிவு செய்தது. அதற்கு வசதியாக மாநிலங்களவை முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, அவசரச் சட்டத்தின் மறு பிரகடனத்தில் கையெழுத்திட்டார். இதை அடுத்து இந்த அவசரச் சட்டம் மறுபிரகடனம் செய்யப்பட்டு அமல்படுத்தப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending