ஹைதராபாத் – சம்ஷாபாத் விமான நிலையத்துக்கு சர்வதேச விருது!

Published:

hyderabad airport
hyderabad airport

ஹைதராபாத் ராஜீவ் காந்தி இன்டர்னேஷனல் ஏர்போர்ட் (ஆர்ஜிஐஏ) மற்றுமொரு சர்வதேச விருதினை பெற்றுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு இதமான செயல்முறைகளை எடுத்து வருவதன் ஒரு பகுதியாக, ஆசியா பிரிவில் ஒவ்வொரு ஆண்டும் 15 லிருந்து 35 மில்லியன் பயணிகள் வந்து செல்லும் தகுதி கொண்ட விமான நிலையங்களில் ஆர்ஜிஐஏ 2020 ஆம் ஆண்டுக்கான பசிபிக் க்ரீன் ஏர்போர்ட் பிளாட்டினம் விருதினை பெற்றுள்ளது.

இந்த விருதினை ஆர்ஜிஐஏ க்கு சர்வதேச விமான நிலையம் அண்மையில் அறிவித்தது. ஆர்ஜிஐஏ எடுத்து வரும் சுற்றுச்சூழலுக்கு அனுகூலமான செயல்முறைகள் மிகவும் நல்ல விதமாக உள்ளன என்று ஏசிஐ டைரக்டர் ஸ்டெபானோ பாரோன்கி குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவரங்களை ஏர்போர்ட் சிஇஓ எஸ்ஜிகே கிஷோர் வெள்ளிக்கிழமை அன்று ஓர் அறிவிப்பில் தெரிவித்தார்.

சம்ஷாபாத் விமான நிலையத்தில் தண்ணீர் விநியோகத்தின் அளவை குறைத்து தண்ணீரை ரீசைக்கிளிங் மூலம் பயன்படுத்தி தண்ணீரை வடிகட்டுவதற்கு பிரத்யேக செயல்முறை திட்டங்களை வகுத்துள்ளார்கள்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

இதற்காக விமான நிலையத்தில் 925 கேஎல்டி தகுதி கொண்ட ட்ரீட்மெண்ட் பிராண்டுகளை ஏற்பாடு செய்துள்ளார்கள். ஆட்டோமேட்டிக் ட்ரிப் சிஸ்டம் மூலம் 6 லட்சம் கியூபிக் மீட்டர் நீரை சேமித்து வைக்கும் ரிசர்வாயர் களை ஏற்பாடு செய்துள்ளார்கள்.

இந்த நீர் வடிவமைப்பினை ஏசிஐ தலைமையில் கிரீன் ஏர்போர்ட் கமிட்டி அடையாளம் கண்டது பாராட்டத்தக்கது என்று ஏர்போர்ட் அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img