ishant-sharma பெங்களூர்: தோனி என்னை 24வது மாடியில் இருந்து குதிக்கச் சொன்னாலும் குதித்து விடுவேன், யாருமே காயம் ஏற்படுவதை விரும்ப மாட்டார்கள்தான். தோனியின் ஆறுதல்தான் என் காயத்தை விரைவில் ஆற்றியது என்று கூறியுள்ளார் இஷாந்த் சர்மா. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று கனவு கண்ட இஷாந்த் சர்மா ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது முழங்காலில் திடீரென ஏற்பட்ட காயத்தால் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் நாடு திரும்பினார். தற்போது உடல்நலம் தேறியுள்ள இஷாந் சர்மா ஐ.பி.எல்.போட்டிகளில் விளையாடத் தயாராகி விட்டார். தன் காயம் சரியானது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஷாந்த் சர்மா, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் கலந்து கொள்வேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இப்போது 2015-ல் நான் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருந்தும் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது. நான் மிகவும் வருத்தம் அடைந்தபோது, கேப்டன் தோனிதான் எனக்கு ஆறுதல் கூறி தேற்றினார். 24-வது மாடியில் இருந்து தோனி என்னை குதிக்கச் சொன்னால் சற்றும் தயங்காமல் மாடியில் இருந்து குதித்து விடுவேன். யாரும் காயம் ஏற்படுவதை விரும்ப மாட்டார்கள்.ஆனால் நான் இதை தயங்காமல் தோனிக்காகச் செய்வேன். ஒரு நாளைக்கு 10 முறைக்கு மேல் பந்து வீசக்கூடாது என்று மருத்துவர்கள் என்னை எச்சரித்துள்ளனர். கிரிக்கெட்டின் மீதான ஆர்வத்தால் தினமும் பந்து வீச்சில் ஈடுபட்டு வருகிறேன். தற்போது நான் குணமடைந்து விட்டேன். ஐ.பி.எல். போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளேன் என்று கூறினார் இஷாந்த் சர்மா. ஐ.பி.எல் போட்டிகளில் ஹைதராபாத் அணிகாக விளையாடுகிறார் இஷாந்த் சர்மா.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending