சமையல் எரிவாயு: இலவச இணைப்பு பெற செய்ய வேண்டியது..!

Published:

gas 1 1

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் , சமையல் எரிவாயு இணைப்பை இலவசமாகப் பெற மக்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஈ.எம்.ஐ. குறிப்புத் திட்டத்தின் காலம் வரும் ஜூலை 2020ல் முடிவடைகிறது.

இது அடுத்த ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பொருள் , அடுத்த ஓராண்டுக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் புது சமையல் எரிவாய் இணைப்பு பெறும் வாடிக்கையாளர்கள் , எண்ணெய் நிறுவனங்களுக்கு எந்த ஈ.எம்.ஐ. தொகையையும் செலுத்தத் தேவையில்லை.

உஜ்வாலா திட்டத்தின் படி, புது இணைப்பை எடுக்கும்போது, ​அடுப்புடன் சேர்ந்து ​மொத்த செலவு ரூ.3,200 ஆகும். இதில் ரூ.1,600 மானியத்தை அரசும், மீதமுள்ள ரூ.1,600ஐ எண்ணெய் நிறுவனங்களும் வழங்குகின்றன.

பொதுவாக வாடிக்கையாளர்கள் இத்தொகையை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஈ.எம்.ஐ. ஆக செலுத்த வேண்டும். அதிலிருந்து மானியத் தொகையாக அது மீண்டும் உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும். மக்கள் தங்கள் அருகிலுள்ள எல்.பி.ஜி. மையத்தைத் தொடர்பு கொண்டு இது தொடர்பான புது இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

Related articles

Recent articles

spot_img