அண்மையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு யாழ்ப்பாணத்துக்கு கடந்த 14-ந் தேதி சென்றார். யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளை தமிழர்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். நிகழ்சிக்குப் பின்னர் அவர் தமது காரில் ஏறுவதற்காக மேடையின் பின்புறமாக வந்த போது பாதுகாப்பு வளையங்களை உடைத்துக் கொண்டு 20 வயது இளைஞர் ஒருவர் அவரை நெருங்கினார். ஆனால் பாதுகாப்புப் படையினர் அவரைத் தடுத்து நிறுத்தி இலங்கை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட இளைஞரிடம் விசாரணை நடத்திய பின்னர் இலங்கை போலீசார் அவரை விடுவித்தனர். இந்தத் தகவலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளும் உறுதி செய்திருந்தனர். ஆனால் இதை மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் மறுத்துள்ளார். அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், மோடி சுற்றுப்பயணத்தின் போது எவரும் பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு அவரை நெருங்கவில்லை. பாதுகாப்பு அதிகாரிகளின் சிறப்பான வளையத்தை எவரும் எளிதில் உடைத்து உள்ளே நுழைய இயலாது. பிரதமர் மோடி யாழ்ப்பாணத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கான வீடியோ பதிவுகளை பார்த்தாலே இந்தத் தகவல் தவறு எனத் தெரியும்” என்று கூறியுள்ளார்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari