இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்: திருப்பதி தேவஸ்தானம்!

Published:

thirupathi-temple
thirupathi-temple

திருப்பதி ஸ்வாமி தரிசனத்துக்கு முன்பதிவு செய்வதாகக் கூறி பணம் வசூலித்ததாக சென்னையைச் சேர்ந்த டிராவல்ஸ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சென்னையைச் சேர்ந்த ஒரு டிராவல்ஸ் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி திருமலை போலீஸார், சென்னையைச் சேர்ந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. ரூ.300 டிக்கெட், கல்யாண உற்சவ டிக்கெட் பெற்றுத் தருவதாக கூறி அதிக பணம் வசூலித்ததாக அந்த டிராவல்ஸ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை வெளியிட்டுள்ளது அதில் பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in/ என்ற இணையதளத்தில் மட்டும் முன்பதிவு செய்ய வேண்டும். பக்தர்கள் இடைத் தரகர்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம்.

அதிக பணம் வசூலித்து டிக்கெட் முன்பதிவு செய்யும் டிராவல் ஏஜென்சிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Related articles

Recent articles

spot_img