பக்கத்து வீட்டு பாத்ரூமை நோக்கி வைத்த சிசிடிவி கேமரா!

Published:

CCTV
CCTV

மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள வட்கான்ஷேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிசிடிவி கேமரா நிறுவப்பட்டது .

அந்த கேமரா அவர்களின் பக்கத்து வீட்டிலிருக்கும் பெண்கள் குளிக்கும் குளியலறை நோக்கி நிறுவப்பட்டிருந்தது

இதனால் அந்த வீட்டில் வசித்து வந்த இளம் பெண், அந்த பக்கத்து வீட்டு நபர்களிடம் சென்று அவர்கள் வீட்டு சிசிடிவி கேமராவை வேறு பக்கம் திருப்பி வைக்குமாறு கேட்டார்.

அதற்கு அந்த பக்கத்து வீட்டினர் அந்த பெண்ணை தரக்குறைவாக பேசியுள்ளார்கள்.

மேலும் அந்த பெண்ணையும் அவருக்கு ஆதரவாக வந்த அவரின் சகோதரரையும் அவமானபடுத்தியும் துஷ்பிரயோகம் செய்துள்ளார்கள். அதன் பிறகு இந்த பிரச்சினை முடிவடையவில்லை .

பிறகு சிறிது நேரம் கழித்து ,அந்த பக்கத்து வீட்டினர் பல பேரை கூட்டி வந்து அந்த பெண்ணின் வீட்டிற்குள் சென்று அவரையும் அவரின் சகோதரனையும் அடித்து காயப்படுத்தினர் .மேலும் அந்த பெண்ணின் தாயார் மற்றும் ஒரு தோழியையும் தாக்கி துஷ்பிரயோகம் செய்தனர்

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

இதனால் அந்த பெண் மற்றும் அவரின் தாயார் ஆகியோர் அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று அந்த கேமரா வைத்த பக்கத்த்து வீட்டு நபர்கள் மீது புகாரளித்தனர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

Related articles

Recent articles

spot_img