December 6, 2025, 4:55 AM
24.9 C
Chennai

முகநூல் அறிமுகம்.‌. பெண்ணிடம் 13.65 லட்சம் ரூபாய் மோசடி!

facebook - 2025

புதுச்சேரியை சேர்ந்த பெண்ணிடம் முகநூல் மூலம் அறிமுகமாகி 13.65 லட்சம் ரூபாய் மோசடி செய்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இருவரை சைபர் க்ரைம் போலீஸ் தில்லியில் கைது செய்து, புதுச்சேரிக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் மனோகரன், டைல்ஸ் கடை நடத்தி வருகிறார், இவரது மனைவி ஜெயந்தி (42), இவருக்கு முகநூல் முலமாக வெளி நாட்டை சேர்ந்த எரிக்வால்கர் (போலி முகநூல் கணக்கு) என்பவர் அறிமுகமாகி தன்னை டாக்டர் என கூறி ஜெயந்தியுடன் பேசி வந்துள்ளார்.

அப்போது ஜெயந்தியின் மகள் பிறந்த நாளை முன்னிட்டு எரிக் வால்கர் தங்க நகை உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசு பொருள் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார்.

nigeriya
nigeriya

இதனை அடுத்து கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி, டெல்லி விமான நிலையத்திலிருந்து பேசுவதாக ஜெயந்திக்கு போன் வந்துள்ளது, அதில் பேசிய பெண் ஒருவர் தான் விமான நிலைய அதிகாரி என்றும், இங்கிலாந்தில் இருந்து ஜெயந்திக்கு பார்சல் வந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், விலை உயர்ந்த பொருட்கள் இருப்பதால் அதற்கு அபராதம் செலுத்தினால் பொருளை விடுவிப்பதாக கூறி ஒரு வங்கி எண்ணை கொடுத்துள்ளார்.

அந்த பெண் கூறிய வங்கி கணக்கு எண்ணில் ஜெயந்தி ரூ.13 லட்சத்தி 65 ஆயிரம் பணத்தை 4 தவணையாக செலுத்தி உள்ளார், பணம் செலுத்தியும் பரிசு பொருள் ஏதும் விடுவிக்கப்படாததை அறிந்த ஜெயந்தி, தாம் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார், அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

nigeriya mosadi
nigeriya mosadi

அப்போது, ஜெயந்தியிடம் மோசடி செய்த கும்பல் டெல்லியில் இருந்து பணத்தை ஏமாற்றி இருப்பது தெரியவந்தது, இதனைத் தொடர்ந்து, சைபர் க்ரைம் ஆய்வாளர் கணேஷ், சார்பு ஆய்வாளர் சந்தோஷ், நந்தக்குமார் தலைமையிலான தனிப்படை தில்லி சென்று அங்கிருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த இஷிகோ பேட்ரிக், ஆண்டனி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

அப்போது அவர்கள் நுழைவு சான்று (visa) காலாவதி ஆகி அவர்கள் இந்தியாவில் தங்கி இருப்பதும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அவர்களை போலிசார் புதுச்சேரி அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் அடுத்த வாரம் அவர்களை போலிஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விசாரணையின் போது அவர்கள் இதுவரை எத்தனை பேரிடம் மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர், மோசடியில் ஈடுப்பட்ட பணம் எங்குள்ளது உள்ளிடவை குறித்த விவரங்கள் தெரியவரும் என்று போலீஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories