அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி! தங்கள் எம்.எல்.ஏ.,க்கள் மீது நம்பிக்கை இல்லாமல் செல்போனில் உளவு பார்த்த காங்கிரஸ்!

05 May16 yedyurappa - 2026

பெங்களூர்: தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் விலை போகிறார்களா என்று கண்காணிக்கவும், அவ்வாறு கண்காணிப்படுவதை அவர்களுக்கு மறைமுகமாக உணர்த்தியும் ஒரு அரசியல் சித்து விளையாட்டை காங்கிரஸ் நடத்தியுள்ளது. அவ்வாறு தங்களை கண்காணித்து, தங்கள் செல்போன்களை உளவு பார்த்து காங்கிரஸ் கட்சி தனது அவநம்பிக்கையை தங்கள் மீது வெளிப்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனராம்!

இந்தச் சம்பவம் குறித்து ஓர் ஆடியோவை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி. அதில், காங்கிரஸ் எம்எல்ஏ., பி.சி.பாட்டீலுடன், பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளீதர் ராவ், பாஜக.,வின் ஸ்ரீராமுலு ஆகியோர் பேசியதாக காங்கிரஸ் கட்சி கூறியது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சி மாற்றி வாக்களித்தால், அவர்களின் பதவி பறிபோகாமல் அவைத்தலைவர் அவர்களைக் காப்பார் என்று எடியூரப்பா கூறியதாக அந்த ஆடியோவை வெளியிட்டுள்ளது காங்கிரஸ். இந்த ஆடியோவில் எடியூரப்பாவே காங்கிரஸ் எம்.எல்.ஏ பாட்டீலுடன் பேரம் பேசி இருப்பதாக அந்த ஆடியோவை வெளியிட்ட காங்கிரஸ், இதனால் எடியூரப்பா பதவி விலகக் கோரியது.

அந்த ஆடியோ பதிவின்படி, கொச்சின் சென்று கொண்டிருக்கும் பாட்டீலிடம், கொச்சினுக்குப் போக வேண்டாம் என்றும், நீங்கள் இங்கே வாருங்கள், உங்களை அமைச்சர் ஆக்குகிறேன். மேலும் என்ன வேண்டுமானாலும் செய்து தருகிறேன் என்று கூறியுள்ளாராம் எடியூரப்பா. அதுபோல், எடியூரப்பாவின் மகன் விஜயேந்த்தும் இதுபோல் தொலைபேசியில் பேரம் பேசினாராம். எம்.எல்.ஏ., மனைவியிடம் ரூ.15 கோடி தருகிறோம். அல்லது உங்கள் கணவருக்கு அமைச்சர் பதவி தருகிறோம் என்று பேசியதாகவும் ஓர் ஆடியோவை காங்கிரஸ் வெளியிட்டது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

mallikarjunakarge kumarasamy gulamnabi sitharamaiya - 2026

இந்த ஆடியோவை பெற்ற விதத்தையும் காங்கிரஸ் கூறியுள்ளது. அது, காங்கிரஸ் கட்சி உருவாக்கி இருக்கும் ஒரு அப்ளிகேசன் தானாம். தங்களது கட்சி எம்எல்ஏ.,க்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாலும், அவர்களை நட்சத்திர விடுதியில் தங்க வைக்கும் போது, காங்கிரஸ் தங்களின் பிரத்யேக தொழில்நுட்பக் குழு மூலம் உருவாக்கப்பட்ட ஒரு அப்ளிகேஷனை, அனைத்து எம்எல்ஏ.,க்களின் மொபைல் ஃபோன்களிலும் இன்ஸ்டால் செய்து கொடுத்ததாம்!

அந்த அப்ளிகேஷன் குறிப்பிட்ட எம்எல்ஏ-வுக்கு அந்த மொபைல் போனில் யாரிடமிருந்தாவது அழைப்பு வந்தாலோ, அல்லது சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ யாரையாவது அழைத்துப் பேசினாலோ, காங்கிரஸ் தொழில்நுட்பக் குழுவுக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்புமாம். அதை வைத்து அந்த குறிப்பிட்ட மொபைல் போனின் இன்கமிங், அவுட்கோயிங் கால்களை தொழில்நுட்பக்குழு பதிவு செய்து வந்ததாம். இதனால் அனைத்து எம்எல்ஏக்களின் மொபைல் ஃபோனும் அவர்களுக்குத் தெரியாமலேயே கண்காணிப்பின் கீழ் இருந்ததாம். இவ்வாறுதான் பாட்டீலை எடியூரப்பா அழைத்தபோது அந்த ஆடியோ பதிவு செய்யப்பட்டதாகக் கூறுகிறது காங்கிரஸ்.

இப்படி தங்களின் எம்.எல்.ஏக்களே விலை போய் விடுவார்கள் என்று அவர்கள் மீது அவநம்பிக்கை கொண்டிருந்த காங்கிரஸின் சதித்திட்டத்தை காங்கிரஸே தன் வாயால் வெளிப்படுத்தியுள்ளது. மேலும், எம்.எல்.ஏ,. மனைவியிடம் விஜயேந்த் பேசிய ஆடியோ எப்படி காங்கிரஸுக்கு கிடைத்தது? மனைவியின் செல்போனையும் இப்படி உளவு பார்க்க காங்கிரஸ் ஆப்.,பினை நிறுவி கணவன் மனைவியிடையே பேசப் படும் அந்தரங்கத்தைக் கூட உளவு பார்த்துள்ளதா? என்ற கேள்விக் குறியும் அறுவறுப்பும்கூட இப்போது கர்நாடக மக்களிடம் எழுந்துள்ளது.

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

இது ஒரு புறம் இருக்க, காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள ஆடியோ போலியானது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியபோது, காங்கிரசின் மோசமான தந்திர வேலைகளில் ஆடியோ சிடியும் ஒன்று! முன்னதாக ராய்ச்சூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவிடம் ஜனார்த்தன ரெட்டி பேசிய ஆடியோ ஒன்றை காங்கிரஸ் வெளியிட்டது. அதில் அமைச்சர் பதவி மற்றும் தேசியத் தலைவர்களுடன் நேரடியாக சந்திக்க வைப்பதாக கூறும் ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டது. ஆனால் அந்த ஆடியோ வெளியீடும் போலியானது எனக் கூறினார்.

இந்நிலையில் இது போன்ற தகவல் மஜத., எம்.எல்.ஏக்களின் மத்தியிலும் பரவியிருந்ததால், அச்சத்தில் இருந்தனர் மஜத எம்.எல்.ஏ.,க்கள். அதனால்தான், அவர்கள் தங்கள் செல்போன்களை பயன்படுத்தாமல், தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் லேண்ட்லைன் எண்ணில் இருந்து பாஜக.,வினரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதனை ஊடகம் ஒன்று ஆதாரத்துடன் செய்தியாக வெளியிட்டது குறிப்பிடத் தக்கது.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories