கேரளா கன மழை: நிவாரண நிதி கோரி பிரதமரை சந்திக்கும் கேரள அதிகாரிகள்

05 July20 Kerla rain - 2026கடந்து ஐந்து ஆண்டுகள் இல்லாத அளவு, கேரளாவில் கன மழை பெய்து வருகிறது. கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கன மழையால், மாநிலத்தின் பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, உயிரிழப்பு எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், அதிகாரிகள் நிவாரண பனியில் ஈடுபட்டுள்ளனர். கோட்டயம், எர்ணாகுளம், ஆலப்புழா பகுதிகளை சேர்ந்த 10,000க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

நிவாரண முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு 1000 ரூபாய் நிதி உதவி அளிக்குமாறு கேரள முதலமைச்சர் பின்ராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

புதன்கிழமை அன்று, மாநிலத்தின் நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு சார்பில் நிவாரண குழு அனுப்பி வைக்குமாறு கேரள முதலமைச்சர் டெல்லிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கோட்டயம் மாவட்டத்தில் மீனாச்சில் நதியில் இருந்து நீர் வெளியேறியதால், புதன் அன்று 10 இரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக தெற்கு இரயில்வே அறிவித்தது. இதனால், இரண்டு நாட்களுக்கு குறைந்த அளவில் இரயில்கள் இயக்கப்பட்டன. கோட்டயம் பகுதியில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை படகு மூலம் நிவாரண முகாம்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், 18% அதிக அளவு மழை கேரளாவில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த 4 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கேரளா மாநிலத்திற்கு தேவையான நிவாரண நிதி உதவிகளுக்கான கோரிக்கையை மத்திய அரசிடம் முன் வைக்க, கேரளா அதிகாரிகள் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க உள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories