December 5, 2025, 6:05 PM
26.7 C
Chennai

பாரத் பந்த்: தமிழகத்தில் ‘நார்மல்’… புதுவையில் வாகனங்கள் இயங்கவில்லை!

Bharat Bandh - 2025

சென்னை: பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இன்று பாரத் பந்த்-க்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. சென்னை, சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் பேருந்துகள் வழக்கம் போல் இயங்குகின்றன. உணவகங்கள், டீ கடைகள் உள்ளிட்ட வர்த்தக கடைகள் வழக்கம் போல் திறக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் இன்று அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு, கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆளும் சில மாநிலங்களில் ஓரளவு பாதிப்பு உள்ளது. ஆனால், பாஜக., ஆளும் மாநிலங்களில் பெரிய பாதிப்பு இல்லை.

சென்னையில் கோயம்பேடு புறநகர், மாநகர பேருந்து நிலையங்கள், பாரிமுனை பேருந்து நிலையம், பல்லவன் சாலை பணிமனை உள்ளிட்ட இடங்களில், வழக்கம்போல் பேருந்து இயங்குகின்றன. தேநீர் கடைகள், காய்கறி அங்காடிகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டுள்ளன. சென்னையில் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சேலத்தில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன. கடைகள் திறக்கப்பட்டுள்ளன. காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பகுதி வழியாக காங்கிரஸ், மஜத., கூட்டணி ஆட்சி செய்யும் கர்நாடகா செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்துகள், முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக, சத்தியமங்கலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. ஒருசில அரசு பேருந்துகள் மட்டும், பன்னாரி சோதனைச் சாவடி, தாளவடி வரை இயக்கப்படுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான பாரத் பந்த் காரணமாக காங்கிரஸ் ஆட்சி செய்யும் புதுச்சேரியில் அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை; ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முழுஅடைப்புப் போராட்டத்தால் புதுச்சேரியில் இன்று பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. திரையரங்குகளில் இன்று பகல் மற்றும் பிற்பகல் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் ஓரளவு ஆதரவு காணப்பட்டது. புவனேஸ்வரில் காங்கிரஸ் கட்சியினர் ரயிலை மறித்தும் சாலையில் அமர்ந்தும் போராட்டம் நடத்தினர்.

தெலங்கானா மாநிலத்தில், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இடதுசாரி கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories