போராட்டத்தால் பீகாரில் 2 வயது குழந்தை உயிரிழப்பு: ராகுல் பொறுப்பு ஏற்பாரா?

Published:

ravi sankar prasad e1536641421908 - 2026

எதிர்க்கட்சியினரின் போராட்டத்தால் பீகாரில் உயிரிழந்த 2 வயது குழந்தை  மரணத்திற்கு ராகுல் பொறுப்பு ஏற்பாரா? என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.  |

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற எதிர்க்கட்சியினரின் போராட்டத்தால், பீகாரில் 2 வயது குழந்தை உயிரிழந்தது. இதற்கு ராகுல்காந்தி பதிலளிப்பாரா என்று கேட்டுள்ளார் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

பீகார் மாநிலம் ஜகனாபாத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட 2 வயது பெண் குழந்தையை ஆட்டோவில் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது போராட்டக்காரர்கள் வழி மறித்ததுள்ளனர்.  இதனால் மருத்துவமனைக்குச் செல்லும் முன்பே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதனை கண்ணீர் மல்க அக்குழந்தையின் தந்தை கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்ட மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அந்தக் குழந்தையின் மரணத்திற்கு ராகுல் காந்தி பொறுப்பு ஏற்பாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img