வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்?

Published:


IMG 20181209 WA0057 - 2026

 வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளது இது புயலாக மாறினால் “பேதாய்” என பெயர்!

இலங்கைக்கு தென்பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருகிறது.

நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அடுத்த சில நாட்களில் தீவிர புயலாக மாறி சென்னை – நெல்லூர் இடையே இந்த வார இறுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வங்கக்கடலில் நிலவும் காற் றழுத்த தாழ்வுநிலை தீவிர மடைந்து, 13ம் தேதி வாக்கில் ‘பெதாய்’ புயலாக மாறும். அரபிக்கடல் காற்றின் சாதகம் மற்றும் தமிழக தரைப்பகுதி வெப்பநிலை உயர்வு காரணமாக அந்த புயல் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பு உள்ளது. 

தற்போதைய ஆய்வு முடிவின்படி, இந்தப் புயல் நாகப்பட்டினம் – கடலூர் இடையே 15ம் தேதி பிற்பகல் கரையைக் கடக்கலாம். இது திருச்சி, நாமக்கல், சேலம், கோவை, நீலகிரி வழியாக அரபிக்கட லுக்கு செல்லும். இதன் காரண மாக தமிழகத்தில் கனமழை பெய்யும்.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img