IMG 20181209 WA0057 - 2026

 வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளது இது புயலாக மாறினால் “பேதாய்” என பெயர்!

இலங்கைக்கு தென்பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருகிறது.

நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அடுத்த சில நாட்களில் தீவிர புயலாக மாறி சென்னை – நெல்லூர் இடையே இந்த வார இறுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வங்கக்கடலில் நிலவும் காற் றழுத்த தாழ்வுநிலை தீவிர மடைந்து, 13ம் தேதி வாக்கில் ‘பெதாய்’ புயலாக மாறும். அரபிக்கடல் காற்றின் சாதகம் மற்றும் தமிழக தரைப்பகுதி வெப்பநிலை உயர்வு காரணமாக அந்த புயல் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பு உள்ளது. 

தற்போதைய ஆய்வு முடிவின்படி, இந்தப் புயல் நாகப்பட்டினம் – கடலூர் இடையே 15ம் தேதி பிற்பகல் கரையைக் கடக்கலாம். இது திருச்சி, நாமக்கல், சேலம், கோவை, நீலகிரி வழியாக அரபிக்கட லுக்கு செல்லும். இதன் காரண மாக தமிழகத்தில் கனமழை பெய்யும்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending