கஜா புயல் நிவாரணம்… ரூ.1,146 கோடி ஒதுக்கியது மத்திய அரசு!

Published:

bus gaja cyclone - 2026

கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.1,146 கோடியை, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கஜா புயல் நிவாரண நிதி தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். தொடர்ந்து, மத்தியக் குழு நேரடியாக வந்து, புயல் பாதித்த மாவட்டங்களில் ஆய்வு செய்து அறிக்கை அளித்தது.

இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு வைத்த கோரிக்கையில், கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் தற்காலிக சீரமைப்புக்காக உடனடியாக 1,500 கோடி ரூபாயும், நிரந்தர சீரமைப்பு பணிக்காக ரூ.15 ஆயிரம் கோடியும் வழங்க வேண்டும் என குறிப்பிட்டது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கூடிய உயர்நிலைக் குழு கூட்டத்தில் கஜா புயல் பாதிப்புக்கு தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதல் உதவியாக ரூ.1,146 கோடி வழங்க ஒப்புதல் வழங்கப் பட்டது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img