‘நடுத்தர’ மகிழ்ச்சி: வருமான வரி விலக்கு ரூ.5 லட்சமாக உயர்வு!

Published:

budget parliament - 2026

புது தில்லி: நடுத்தர வர்க்கத்தினர் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தனி நபருக்கான வரிமான வரி விலக்கு உயர்த்தப் பட்டுள்ளது.

தனி நபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.50இல் இருந்து இரு மடங்காக ரு.5 லட்சமாக உயரும் என்று கூறினார் பியூஷ் கோயல்.

நேரடி வரி வருவாய் ரூ.12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி 6.85 லட்சமாக அதிகரித்துள்ளது. மக்கள் எளிதில் வருமான வரித்துறையை அணுகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை 24 மணி நேரத்தில் சரிபார்த்து, தேவைப்பட்டால், பணத்தை திரும்பப் பெறும் முறை அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது என்று கூறினார்.

ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சம் வரை உள்ளவர்கள் வருமான வரிச்செலுத்த தேவையில்லை!.

வீட்டு வாடகைக்கான வரிவிலக்கு வரம்பு
ரூ. 1.80 லட்சத்தில் இருந்து
ரூ. 2.40 லட்சமாக உயர்வு.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

வீட்டுக்கடனுக்கான வட்டிச்சலுகை இனி இரண்டு வீடுகளுக்கு கிடைக்கும்

வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வால் 3 கோடி நடுத்தரவர்க்கத்தினர் பயன்பெறுவர்.
வரி விலக்கு சலுகையால் அரசுக்கு ரூ. 18000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

ரூ.6.5 லட்சம் வரை வருவாய் உள்ளவர்கள், குறிப்பிட்ட சில முதலீடுகளை செய்தால் வருமான வரியில் இருந்து விலக்கு.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img