புது தில்லி:

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானியின் பேச்சைக் கேட்குமாறு வீடியோ சுட்டியை தனது டிவிட்டர் வலைப்பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள பிரதமர் மோடி, அதற்கு சத்யமேவ ஜயதே- வாய்மையே வெல்லும் என்று ஒற்றை வரி கருத்து போட்டுள்ளார்.

தில்லி ஜவாஹர்லால் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பேரணியின் போது மாணவர்கள் கோஷமிட்டது, ஹைதராபாத் பல்கலை மாணவர் ரோஹித் வெமூலா தற்கொலை விவகாரம் ஆகியவற்றில் அரசியல் எவ்வாறு விளையாடுகிறது என்பதை ஆணித்தரமாக வெளியிட்டு நாடாளுமன்றத்தில் பேசினார் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி. அவரது பேச்சு இணையத்தில் யூடிப்பில் லட்சக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டு, பாராட்டைப் பெற்றுள்ளது.

 

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending