சென்னை அருகே 2 சரக்கு கப்பல்கள் மோதல்

Published:

சென்னை : சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே 2 சரக்கு கப்பல்கள் மோதி விபத்திற்குள்ளாகி உள்ளன.
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இருந்து 1.8 மைல் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எண்ணெய் ஏற்றி வந்த கப்பலுடன் மற்றொரு சரக்கு கப்பல் மோதி உள்ளது. இரண்டு கப்பல்களும் துறைமுகத்திற்குள் நுழைய முட்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பலில் இருந்து கொட்டிய எண்ணெய்யை அகற்றும் பணி நடந்து வருகிறது. 2 கப்பல்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஹெலிகாப்டர் மூலம் தொடர் ரோந்து செய்து கப்பல்களின் நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Related articles

Recent articles

spot_img